தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள் ஒன்றிணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரபு சந்தை கூடுகிறது. இந்த மரபு சந்தையின் ரசாயனம் கலக்காத, இயற்கை முறையில் பயிரிடப்படுகின்ற காய்கறிகள், பழங்கள், கீரைகள், விதைகள், இயற்கை உணவு வகைகள், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இயற்கைச் சூழலுக்கு பாதிப்பில்லாமல், உடலுக்கு கேடு விளைவிக்காமல் இயற்கையான பொருட்கள் கிடைப்பதால், இந்த மரபு சந்தைக்கு தருமபுரி பகுதியில் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இன்றைய மரபு சந்தைக்கு இயற்கை வகையான காய்கறிகள் வாங்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
16 сен 2024