அன்புள்ள பவா, சுமித்ரா சொல்லப்படும் கதையல்ல;அது வாசிக்க வேண்டிய கதை! ஒட்டுமொத்த பெண்களின் இரகசியம்தான் சுமித்ரா.அதை இப்படி ஒரு பொது மேடையில் - பொது அவைக்குக் கொண்டு வருவதை சுமித்ராவே விரும்பமாட்டாள். பெண்களின் அந்தரங்கம் இருக்கும் அவளை இப்படி அம்பலத்திற்கு கொண்டு வர தேவையே இல்லை? உங்களால் அவளைப் புரிந்து கொள்ள முடியும்;ஒருபோதும் அவளை உணர்ந்து கொள்ள முடியாது.கேட்பவர்களின் மனதில் ஒரு துளி விரசம் ஏற்பட்டாலும்,அது அவளுக்கு நாம் செய்யும் பெரும் அவமானம். பூவின் இரகசியம் அதன் வாசனை;நீரின் இரகசியம் அதன் ஆழம்.பூவும்,தனித்து நீராடலும் எப்போதுமே பெண்களுக்குப் பிடித்தமானவிஷயங்கள்.சுமித்ராவுக்கு நீராடப் பிடிக்குமே! நீங்கள் எப்படி சொல்லாக்குவீர்கள்? நடுவில் சுருங்கிய வேட்டி அவிழ்ந்து வீழ்ந்ததால் கீதா பட்ட அவமானத்தை அந்தக் கதையே கூட இரகசியமாகத்தானே வைத்திருந்தது!நீங்கள் எப்படி அதை ஒரு மைக் முன் சொல்ல முடியும்? கால் தூக்கி புடவை ஒதுக்கும் கீதாவின் காமத்தை கண்மூடி ஒரு கணம் யோசித்துப் பார்ப்பதுதான் அழகு.அதை எப்படி நாம் பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடியும்? மரம் அறுப்பவன் மேல் சுமித்ராவுக்கு இருந்த அந்த ஒரு நிமிட காமத்தை சுமித்ராவே தன்னுடைய ஆழ் மனசில் புதைத்து வைத்திருக்கிற போது நீங்கள் அவைக்குள் சொல்லி விட முடியுமா? நீங்கள் சிறந்த கதை சொல்லிதான்... ஆனாலும்,இந்த சவாலை எப்படி எதிர் கொள்வீர்கள் என்று தூரத்தில் இருந்து பார்க்கிறேன்...
மலையாளத்தில் இந்த கதை திரைப்படம் ஆக வந்து இருக்கிறது. சமீபத்தில் அதைபார்த்த ஞாபகம் பவா சார் கூறும்போது பசுமையாக நினைவுக்கு வருகிறது.பார்த்தவர்கள் லைக் செய்யலாம் .அறிய ஆர்வமாக இருக்கிறது.
கதையின் ஜீவனை ஜீவிக்க வைப்பதில் பவா சாரின் குரல் பல இடங்களில் உயிர் கொடுப்பதாய் இருக்கிறது. இவர் கதையாடல் கேட்டு வாங்கி வாசித்த புத்தகங்கள் ஏராளம். நன்றிகள் பல
மிக அழகாக கதை செல்கிறது பவாவின் வார்த்தைகளில்..இந்த கதை புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். மிக நேர்த்தியாக எழுத்தாரின் மனதின் மூலமாகவும், சுமித்திராவின் மூலமாகவும் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் பவா.
பவா அப்பா... கதையில் வரும் சுமித்ரா மீது மட்டும் அல்ல நிஜ உலகில் வாழ்ந்து மறைந்த வாந்துகொண்டு இருக்கிற எண்ணற்ற சுமித்திராக்கள் மீதும் ஒரு பேரன்போடு கூடிய மரியாதை மனதின் ஓரத்தில் மிக ஆழமாக அழகாக இடம் கொள்கிறது... இதைவிட உன்னதமாய் சுமித்ராக்களின் கதையை வேறு எவரும் கதையாடல் செய்துவிட முடியாது... ❤️❤️😘😘
பவா உருக்கி விட்டீர்கள். சுமித்ரா நாவல் எவ்வளவு கவிதை யாக சொன்னீர்கள் பவா. இன்றைய இரவு சுமித்ரா கேட்டவர்களை நிச்சயம். தூங்க vidamattal. தமிழ் மொழி பெயர்த்த shylaja க்கு பெரிய பாராட்டு. நன்றி பவா
68ஐ கடந்து , பொதுதுறையில் இருந்து ஓய்வு பெற்ற இந்த நாளில் , பாவின் கதைக்குள் நான் மூழ்கும்போது பலதரபட்ட வயதை நான் முன்னே, பின்னே பயணப்படுகிறேன். அன்பு என்ற பாசத்தில் மூழ்குகிறேன். நானே அந்த கதையின் பாத்திரமாக மாறுவது எனக்கே தெரியவில்லை. என் முதுமையை சுவையாக மற்றிய பாவவுக்கு என் பாசமிகு நன்றி ..............👋👋👋
எனக்கு மிகவும் பிடித்த கதை இது. பெண்களின் அந்தரங்க மனநிலையை மிக நுட்பமாக பதிவு செய்த கதை. சுமித்ரா என்ற கதாபாத்திரத்தை துளி விரசமில்லாமல் விவரித்த பவா sir. க்கு. பாராட்டுக்கள். மற்றும். நன்றிகள்.
நீங்கள் பெங்களூர் வந்து... உங்களை சந்தித்து மகிழ்ச்சி ஐயா... சிறிய வேண்டுகோள் நீங்கள் சுந்தர ராமசாமியின் தோட்டியின் மகன் நாவலை செல்ல வேண்டும் என்று... அடிதட்டு மக்களின் வலியை அனைவரும் உணர...நன்றி
Rajkumar Sethuraman சுமித்ராவின் மரணத்தை எழுத்தில் வடித்த கை தேர்ந்த கவிஞன் கல்பட்டா நாராயணன் என்றால் அதை எங்கள் காதுகளில் நிரப்பி எங்களை சுமித்ராவின் மரண வீட்டில் பருஷோடு மற்றொரு தோழனாய் இதயம் கனக்க நிற்க வைத்த கதை சொல்லி கலைஞன் நீ!! நன்றி!! வாழ்க!!
பவா அய்யா அருமை நாங்கள் கதைகள் படித்தது கிடையாது இப்போழுது வெளிநாட்டில் இருக்கிறோம் ஆனால் நிங்கள் கதை சொல்லும் போது எவ்வளவு நாங்கள் கதைகளை மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று தெரிகிறது வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
எந்த ஒரு கதையையும் முதல் பத்து நிமிடம் படித்துவிட்டு கதையின் முடிவை படிக்கும் ரகத்தை சேர்ந்த என்னால் இக்கதை கேட்கும் பொழுது அதுபோல் கடந்து போக முடியவில்லை. இக் கதையை கேட்கும் வரை என் காதுகளை திரு பவா செல்லதுரை அவர்களிடம் கொடுத்துவிட்டேன்.
பவா அண்ணனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் !!!! மரணம் நிகழ்ந்தபின் அந்த ஜீவன் நினைவுகளின் வழியே வாழத்துவங்குகிறது ,அடுத்த நாவல் வாசிப்பையாவது நேரில் கேட்க வேண்டும் என்று ஆவல்,.வணக்கம் .(ITHRAMATHRAM-2012-malayalam movie)இது சுமித்ரா நாவலின் திரைப்பட வடிவம்.இந்த பெருங் கதையாடலை முழுமையாக கேட்டபின்பு திரைபடம் பார்க்கவும் அப்போதுதான் அது அற்புதமான அனுபவமாக இருக்கும்,நன்றி .
மணிதர்கள இறந்த பிறகு அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நினைவில் எழும்பி தளும்பி ஒருமாதிரி அறியாமல் அனத்த வைக்கும் இந்த பெருங்கதையாடல் அது போல பலரின் நினைவுகளை கொண்டு வந்து விட்டது உங்கள் கதை சொல்லலில் இது உச்சம் பவா வாழ்த்துக்கள்