திரு முக்தார் அவர்கள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் பேட்டி காண்கிறீர்கள் மேதகு கவர்னர் அவர்களிடம் ஒரு வாய்ப்பு பெற்று நீங்கள் கேள்வி கேட்டால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும் உண்மையிலே அதுதான் மக்களாட்சி தத்துவமும் கூட
ஒரு நெறியாளர் என்பவர் குறைந்த பட்ச அரசியல் அறிவு இருப்பவராக இருக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.வந்த நாள்முதல் ராஜன் கமிட்டி அமைத்து அவர்களின் அறிக்கை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தை இந்திய அரசியல் சட்டத்தின் படி செயல் படாமல் முறைகேடாக அதை முடக்கி திமுகவின் ஆட்சிக்கு அவ பெயர் ஏற்படுத்தி கொண்டாடி கொண்டிருக்கிறது பிஜேபி. எனவே இந்த நெறியாளர் மோடியிடமல்லது அமித்சாவிடம் இப்படி நேர்காணல் ஒன்றில் கேட்டு ஒரு பொறுப்புள்ள நெறியாளர் என்றும் நீட் விசியத்தில் அரசுக்கு மட்டுமல்ல நெரியாளருக்கும் பங்கு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். எழுவர் விடுதலை மற்றும் நீட் இரண்டிலும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதில் இருந்தே இரண்டு தீர்மானங்களும் நிச்சயம் வெல்லும் என்கிற நம்பிக்கை மேலோங்கி விட்டது நெறியாளரே! அதேபோல் நெரியாளரின் வார்த்தை பிரயோகத்தில் அகங்காரம் தெரிகிறது. மடக்குவதாக எண்ணி கேட்பதில் மடத்தனம்தான் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசு அடிமையாய் இருந்ததுபோல் மக்கள் உணர்ந்து ஆட்சி மாற்றம் கொண்டுவந்தார்கள்.அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. அதிமுக ஆட்சி யோடு திமுக வை இணைத்து கேள்வி கேட்பதே மடத்தனம். ஒரு பிரதமர் வருகிறார் அவரை வரவேற்க வேண்டியது யார்? பிஜேபி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக பாராளு மன்றதிலேயே மோடிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர் தமிழ்நாட்டில் கருப்பு கொடி காட்டிதான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இனி அது எதிர் கட்சிக்கு சம்பந்த பட்டது. அண்ணாமலை பற்றிய கேள்விக்கு வேல்முருகன் பதில் அதுதான் அரசியல் முதிர்ச்சி. பாவம் நெறியாளர் அண்ணா மலயிடம் ஒரு காவி துண்டு வாங்கி முகம் துடைத்து கொள்ளவும்.
சமீப நாட்களில் இந்த மாதிரியான நடுநிலையான நபரை நான் பார்க்கவே இல்லை.. பெரும்பாலான கேள்விகள் சாதாரண மனிதனின் கேள்வியை பிரதிபலிக்கின்றன. அருமையான நேர்காணல்...இருவரும் அருமை, விருந்தினர்கள் மற்றும் ஜர்னிஸ்ட்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நெறியாளர் மக்கள் மனதில் உள்ள கேள்வியை நன்றாக கேட்டுள்ளீர்கள்..அவர் கேக்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் திக்கு முக்கு ஆடவைத்துள்ளீர்கள்..மிக நன்றி அய்யா..🙏🙏
Yes. Why double act? Shame for him only... He is not honest. He is betraying Tamil community. Knowingly he is doing the Sin. God only should forgive him.
@@வீரத்தமிழன்வானவன் ஐயா வணக்கம்... அவருக்கு பதவியை காத்துக் கொள்ள வேண்டிய தேவை உண்டு. அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சியை விட திமுக'வில் இணைந்து கொண்டு இப்படி பேசி வருகிறார். அனைத்து கட்சிக் கூட்டங்களிலும் கூட எங்கே சார் இவங்க பாரத பிரதமர் மோடி ஐயா புகைப்படத்தை பாதாகைகளில் அச்சிட்டனர்??? பதவிக்கு வரும் முன் கோ பேக் மோடி என்றனர்... இப்போ பதவிக்கு வந்த பின் அடிக்கடி அவரை சந்தித்து பதவியை காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் உடல்நலம் வயது ஆக ஆக சற்றே முதிர்வு நிலையை பெற்று வருகிறது. என்றாவது வேல்முருகன் அவர்கள் தன்னை வளர்த்து விட்ட அரசியல் குருவான ஆசானை நேரிலோ அல்லது கைபேசியிலோ அலைபேசியிலோ அழைத்து பேசி வரலாம் அல்லவா??? அது போதாது என்று... நீட் தேர்வில் என் நண்பர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஆக சிறந்த முறையில் கற்றுத் தந்து வருவதாக சொல்கின்றனர். பிள்ளைகளும் நன்றாகவே படிக்கின்றனர். ஏன் இந்த பொய்யான ஏமாற்று வேலைகள்??? கலைஞர் கருணாநிதி ஐயா பேனாவிற்கு சிலை வைக்க திட்டமிட்ட அரசு ஏன் சார் மாமன்னர் அருட்மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழனின் சமாதியை அநாதையாக குடிசையில் தவிக்க விட்டு வைத்துள்ளனர்?? மனசாட்சி இருக்கனும் சார். குழந்தை ஸ்ரீமதி கொலை வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் என்ன செய்தார்?? DGP சைலேந்திர பாபு என்ன செய்தார்?? ஒன்றுமே இல்லையே... அடுத்த வாரமே ஓர் கிறிஸ்தவ பள்ளியிலும் இதே போன்ற பெண் குழந்தை மாணவி தற்கொலை நடக்கிறது. அதிலும் கூட இந்த திமுக அரசு எதுவுமே செய்யவில்லையே??? அரசு மருத்துவமனைகளில் பால் கொடுக்கும் பல இடங்களில் இல்லை. தெருக்களில் பள்ளம் மேடுகள் சரி செய்வதில்லை.. மின் வெட்டுகள் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து வருகிறது இவைகளை எல்லாம் ஏன் ஐயா இந்த ஆளும் கட்சிகள் எதுவுமே சரி செய்வது இல்லை?? பொதுவெளிகளில் தெருவிற்கு தெரு பொதுக் கழிப்பிடங்கள் இல்லவே இல்லையே... சுகாதாரத் துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம் அவர்களும் கூட இதையெல்லாம் சரி வர கவனிப்பதே இல்லை. அப்புறம் என்ன சார் இவங்க மாறி மாறி பண்ற ஆட்சி? மக்களுக்கு அடிப்படை தேவைகளே பூர்த்தி செய்வது இல்லையே அரசாளும் ஆட்சியாளர்களும் மற்ற அதிகாரிகளும். ஏதோ ஒரு தமிழக மாவடத்தில் ஒரு காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டேபிள் ஓர் அன்பர் மழைநீரையும் குப்பைகளையும் தரம் பிரித்து சமூக சேவைகள் செய்கின்றார். ஆனால் பதவியில் இருக்கும் இவர்கள் ஏன் இப்படி மாறி மாறி மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி கொண்ட வருகின்றனர்?
வேல்முருகனின் ஆசை பாமகவில் இணையவேண்டும் என்பது. ஜிகே மணி வயது மூப்பின் காரணமாக தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கப் போவதாக தகவல் உண்டு. அதனை பயன்படுத்தி பாமகவில் வசதியான பதவியை பெற்றுவிடலாம் என்பது வேல்முருகனின் கணக்கு. ராமதாஸ் இவரை ஏற்பாரா என்று பார்ப்போம்
திரு வேல்முருகனை அரசியலில் அறிமுக படுத்தி MLA ஆக்கி சட்டசபைக்கு அனுப்பிவைத்தவர் மருத்துவர் ஐயா. இல்லையென்றால் இவரை யார் என்றே தெரியாது. ஆனால் இன்று பிளவு பட்டு மீண்டும் கட்சியில் சேராமல் இருப்பது சுயநலமே தவிர வன்னியர்குல ஷத்ரியர்களுக்கு ஒரு பிராயஜனமும் இல்ல. தொடர்ந்து இவர் கட்சியையும் நடத்தமுடியாது, ஒருவேளை மனசுக்குள் இருந்தாலும் ஐயாவிற்கு பிறகு கட்சியில் சேர்ந்தாலும் ஆச்சர்யமில்லை!!!!
வேல்முருகன் அவர்கள் எதற்கும் எதற்காகவும் தடுமாறியது கிடையாது சத்தியம் நெறியாளர்கள் எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் சரியான பதில் சொல்வதே வேல்முருகனின் திறமை 👍
நெறியாளர் முத்தார் அவர்கள் மிகச் சிறப்பான கேள்விகளை கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்துள்ள அண்ணன் வாழ்வுரிமைக் கட்சி முந்திரி காட்டு தலைவர் திரு வேல்முருகன் அவர்கள் மிக ஆக்கப்பூர்வமான அறிவு சிந்தனையுடைய பதில்களை அளித்துள்ளார் அண்ணனுக்கு விசிக.. கட்சி நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..🐆🐆
@@vetrichelvan4065 ஜெயல்லிதா தவறான பிரிவை உபயோகித்ததும், மத்திய அரசிடம் அனுமதி கேட்டதும் தப்பு என்றும் 161 பிரிவின் படி தமிழக அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளதாக கருணாநிதி கூறினார். ஜெயல்லிதாவும் எடப்பாடியும் விடவில்லை என பழையதைக் கூறுவதை விடுத்து ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற முதுமொழிக்கேற்ப தனயன் ஸ்ராலி்ன் சிறைக் கதவுகளை திறந்து விடுவார் என நம்பலாமா?
கேள்வி கேட்பவர் மக்கள் குரல் இப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் கண்ணியம் பதில் கொடுப்பவருக்கு இல்லை என்பது தான் என்னுடைய கருத்து....