#beetroot
#பீட்ரூட்
ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 7 கிலோ தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். பீட்ரூட்டுக்குக் கரிசல் மண் ஏற்றது. இயற்கை உரம் இட்டு விதைத்த 20 நாட்கள் கழித்து, மருந்து அடிக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும் என்பதால் சொட்டுநீர் பாசனம் உகந்தது. வெயில் அதிகமாக இருக்கக் கூடாது. அதனால், கோடைக் காலத்தில் விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும்.
மற்றப் பருவகாலங்களில் இதைச் சாகுபடி செய்வது நல்லது. சில நேரம் தண்டுபுழுத் தாக்குதல் இருக்கலாம். அந்த நேரத்தில் இரண்டாவது முறையாக மருந்து தெளித்துவிட்டால், நோய் கட்டுப்படும். 45 நாட்கள் கழித்து 2-வது முறையாக உரம் இட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும். குறுகிய காலச் சாகுபடியான இது 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
ஒரு ஏக்கரில் 2,000 கிலோவரை காய் வரத்து கிடைக்கும். மார்க்கெட்டில் சராசரியாக ஒரு கிலோ ரூ.15 என விலை போகும்.
10 сен 2024