பேரூர் பட்டீசுவரர் கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.
இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் பச்சை நாயகி என்ற திருப்பெயருடனும் அருள் பாலிக்கின்றார்கள்.
ஆத்ம ஞான மையம்
5 окт 2024