சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் தங்கி கூலி தொழில் செய்வதும், நூதன முறையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணம், பொருட்களை உடனடியாக கர்நாடகாவில் இருக்கும் குடும்பங்களுடன் பிரித்துக் கொள்வார்களாம்.
சுமார் 25க்கும் மேற்பட்ட நபர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இதே போன்று தங்க மாலை எனக் கூறி நூதன முறையில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக பகீர் வாக்குமூலம் அளித்தார்.
கீதாவிடம் இருந்து 11 செல்போன்கள், 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள ரோகித், கிட்டா இருவரையும் தாம்பரம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..#GoldenGarland #Tambaram #GoldScam #Chennai #Dinamalar
16 сен 2024