கெடுவான் கேடு நினைப்பான் என்று சொல்வார்கள்.. இலங்கை அரசியல் வரலாற்றை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்த வாசகமே எதிரொலிக்கும்.. சர்வதேசம், ஒருவிடயத்தை எவ்வாறு கையாழும்.. புவிசார் நலன், பூகோள நலன் என்ற பாரம்பரியங்களுக்குள் நின்று, அரசு என்ற எண்ணக்கருவுக்கு எந்த ஆபத்தும் நேராமல், மனித நலன் தொடர்பான கரிசனையை அது என்றைக்கும் வெளிப்படுத்தும்.. அரசு தவறிளைத்தால்.. தூக்கி எறிய சில காரணங்கள் தேவை.. காரணங்கள் சரியாகி, காரியம் ஆற்ற ஒரு பலமான பின்புலம் தேவை.. பின்புலத்தையை பசியாறி வழிகாட்டவும் ஆட்கள் வருவார்கள்.. அவர்களும் உங்களை நம்பப் போவதில்லை.. ஏனென்றால், அவர்கள் ஏலவே உங்கள் தொடர்பான முன் அனுபவம் ஒன்றிலிருந்து உங்களுக்கு உதவ வந்தவர்கள் தானே.. .. 09.00 02.10.2021
உனக்கு உருவாகும் நெருக்கடியான சூழல் ஒன்று, நீ எவ்வாறு முடிவெடுப்பாய் என்பதைத் தீர்மானிக்கும்! உன் செயல், நீ யார் என்பதை வெளிக்காட்டும்!! இன்னொருவன் உனக்கு உதவவேண்டிய நிலையில் நீ இருந்தது உனக்கான இழிவு, ஆனாலும் அதற்கு நீ காரணம் அல்ல என்பதால் அது இழிவு அல்ல இயலாமை என்று நோக்கப்பட்டது!!! ஆனால், உதவ வந்தவனுக்கே உலைவைக்க நீ கருதினால், உன் கருத்துநிலையால் நீ உனக்கான இழிவை நீயே தேடிக்கொள்கிறாய்!!!! .. 09.39 02.10.2021
வாழ்க்கை சிரிப்பதற்கும் அழுவதற்கும் அல்ல.. சிரிப்பதாயின் ஞானச்செருக்குடன் நின்று சிரி.. அழுவதாயின் மானுட அவலங்கள் குறித்து அழு.. என்னைக் கேட்டால், சிந்தனையும் முடிவானது அல்ல.. அங்கேதான் அதிகம் வைரஸ் தாக்கம் ஏற்பட்டது.. ஆனாலும் சிந்தனை செய், அறம் தாங்கிய எண்ணங்கள் அழிந்து போகாமல் தாங்கிநிண்று சிந்தனை செய்.. ஆக்கம் வளருமோ இல்லையோ, அழிவிலிருந்து உன்னைப் பாதுகாக்க மனித நேயம் தாங்கி நின்று சிந்தனை செய்.. .. - ஜெயந்தசிறி பாலகிருஷ்ணன் - 10.35 05.07.2020
பணம் இருந்தால் ஒரு அம்மா அல்ல ஒரு காதலி அல்ல ஒரு மனைவி அல்ல ஒன்றுக்கு மேற்படடவர்களை இப்போது விலைக்கு வாங்கலாம் நீங்கள் எனக்கு பணத்தை கொடுங்க நான் வாங்கி காட்டுகிறேன் குழந்தை பெற்றால் தான் அம்மா இல்லை பணம் கொடுத்தாலும் அம்மாவின் பணிவிடைகளை செய்யும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள்