@@UngalMaanavan எந்த ஒரு உலர்ந்த பொருளாக இருந்தாலும் அது சீக்கிரம் கெட்டுப் போவதில்லை. எந்த ஒரு ஈரப்பதம் அதிகமான பொருளா இருந்தாலும் அது விரைவில் கெட்டு போகும் தன்மை உள்ளது. அது காய்கறியாக இருந்தாலும் சரி கருவாடாக இருந்தாலும் சரி . கருவாடு என்பது உலர்ந்த பொருளாக இருப்பதால்தான் அதனை நீண்ட நாட்கள் வைத்து உண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. தெளிவாக யோசிக்கவும். அதில் பொன் மஞ்சளும் போட்டிருப்பதால் கெட்டுப் போவதில்லை என்று சொல்ல முடியாது. அதில் இருக்கும் ஈரப்பதமே அதன் தரத்தை நிர்ணயிக்கும்.