தெருவுல போறவன் வரவன் எல்லாம் அறிவுரை கேட்காதீர்கள் .சொந்தக்காரனை கிட்டேயே விடாதீர்கள் .உங்கள் விடு நன்றாக வரும் .பவா அய்யா சரியான கருத்து சொன்னிங்க .ஒண்ணுத்துக்கும் உதவாதவன் நம்பலை குழப்பிவிடுவான் .
பவா சார்க்கு கதை மட்டுமல்லாமல் வீடு கட்ட கூட தெரியும் என்பதை கன கச்சிதமாக எடுத்து உரைத்தற்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். தாங்கள் இந்த பணி யையும் கூடுதலாக ஆரம்பித்தால் இயற்கை வளம் பெறும். நிறைய பயனர்கள் அதிகரிப்பார்கள். பவா அவர்கள் யோசிக்க வேண்டுகின்றேன். நன்றி. மீண்டும் சந்திப்போம் அன்புடன்
வணக்கம் பவா! நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு நடந்தது.நான் என்ன சொன்னாலும் அவர்களின் எண்ணம் போலவே கட்டினார்கள்.இறுதியில் நானே ஆட்களை ஆரோவில் கிராமத்தில் இருந்து வரவழைத்து ரெட் ஆக்ஸைட் தரை போட்டேன். பொறியாளரின் அழிச்சாட்டியம்.......ஷோ கேஸ், அது இது....ஒன்றும் வேண்டாம் அசிங்கம் பிடித்தாற்போல் என்று நாமே களத்தில் இறங்கியபின்னரே பல நுட்பங்கள் புலப்பட்டது. நன்றி.அருமையான காணொளி.
எப்பேர்ப்பட்ட அன்பு இந்த இயற்கை மீது. இதனால் தான் உங்களால் மற்றவர்கள் தன்னை மறக்கும்படியாக கதை சொல்ல முடிகிறது. Civil Er ஆன என் தகப்பனின் இதுபோன்ற முயற்சிகளுக்கு அந்நாளில் ஆதரவு கிட்டவில்லை. இன்று என் அப்பா இருந்திருந்தால் உங்கள் செயல்களை கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் அண்ணா. உங்கள் எண்ணங்கள் மண்பயனுற, மேன்மை பெற உருவானவை. ஆதலால் நீங்கள் பல்லாண்டு காலம் மக்கள் மகிழ வாழ்வாங்கு வாழ வேண்டும். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அருள் உங்கள் உற்றதுணையாக இருக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் அண்ணா. மகிழ்ச்சி 💐🙏
மிக்க நன்றி ஐயா... மிகவும் பயனளிக்கும் உன்னத விடயங்கள்...தங்களது வழிகாட்டல் எங்களது பாக்கியம்.... தங்களை தொடர்பு கொள்ள விளைகிறேன்... முடிந்தால் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
பவா சார் ... வீடு கட்டி சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது என் ஆசை. பல நாள்களாகவே கனவு கண்டு கொண்டிருக்கிறேன். புதிய தலைமுறையில் வீடு பகுதியை ஒன்று விடாமல் பல முறை பார்த்தவள். உங்களின் கானகம் வீடும் அடக்கம். ஆனால் இது போல இயற்கையான முறையில் கட்டும் மேஸ்திரி கொத்தனார் ஆசாரி வேண்டுமே தேடிக்கொண்டிருக்கிறேன்
அருமையான பதிவு. நிறைய நினைவுகள் இந்த காணொளியை காணும் போது. அவற்றில் சில - பாலு மகேந்திரா (வீடு) காயத்ரி கோமஸ் (வீடு), மிஷ்கின் (படபிடிப்பு), காந்தி (எளிமை), ஆரோவில் (ரெட் 🧱 ), அருமையான ஃப்ரேம், அருமையான லொகேஷன். இன்னும் நீங்கள் பல நூறு நண்பர்களுக்கு வீடு கட்டுவீர்கள். என்னையும் சேர்ந்து அதில். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.
அய்யா நீங்கள் சொன்னது உண்மை பெட்டி வீட்ல வாழ்க்கை சுவாரசியம் இல்லை எனக்கும் நீங்க சொல்லும் வீட்ல வாழ ஆசை , நீங்கள் கட்டிய ஜெயஸ்ரீ அம்மா வீடு மிகவும் அருமை
பொதுவா செய்தி ஊடகங்கள் போடும் செய்திகளுக்கு நம்மாளுங்க கருத்துக்கள் தெரிவித்து இருப்பார்கள். அதைப் பார்த்தால் நமக்கு முகச்சுளிப்பை யும் சிலசமயம் சிரிப்பையும் உண்டாக்கும். ஆனால் இதுபோன்ற காணொளிகளுக்கு கருத்துக்களை பாருங்கள் ரொம்ப நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
இயல்பான வீடு கட்ட விருப்பம் உள்ளது ஆனால் அதற்கான அதிகாரமும் பொருள் சுதந்திரமும் தற்போது இல்லை என் ஈசன் என் விருப்பத்தை நிறைவேற்றி இயல்பான வீட்டில் நிறைவான வாழ்வை அளிப்பான் எனும் வேட்டலில் என்றும் என் பயணம்
நீங்கள் இயற்கையை, மனிதர்களின் குணங்களை, இந்த வாழ்க்கையை ரசிக்கும் விதம் அப்பப்பா...... உங்களை போல ஒரு மனிதரை பார்ப்பது மிக மிக அரிது. என் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்கவேண்டும் அண்ணா.
நாங்க கைதறி நெசவாளர்கள் கூலிக்கு நாங்க நெய்யரோம் இயற்கை முறைல வீடு கட்ட ஆசை படுரோம் கிராமபுறம் எங்க இடம் இருக்கு தொட்டி வீடுகட்ட ரொம்ப ஆசை கம்மி பட்ஜெட்டுல கட்ட உங்கனால உதவ முடியுமா
நன்றி ஐயா எனதுவீடு செங்கற்களானது மேற்கூரை 🌴 பனை கட்டை மற்றும் செம்மண்,சுண்ணாம்பு,கருப்பட்டி, கடுக்காய் பயன் படுத்தி கட்டி உள்ளேன்2020ல். இந்தமுறை பற்றி மக்களுக்கு கற்றுதரவும்
நாங்கள் நீலகிரியில் வசிக்கிறோம்.காலம் காலமாக வாடகை வீட்டில் வாழ்ந்து விட்டோம். எங்கள் தலைமுறை யாவது சொந்த வீட்டில் குடியேற ஆசை. அந்த வீடு நீங்கள் சொல்லும் படி கட்டிவிட ஆசையாக உள்ளது.
யானை கால் மிதித்து தடம் மாறும் காட்டு சிற்றோடையின் திசை இயற்கையா, செயற்கையா? அதே போல் மனித செயல்களும் இயற்கையே. இவையனைத்தும் ஓர் எல்லை வரை செல்லும் போது பூமி தன்னைத்தானே தகவமைக்கும். சில கோடி ஆண்டுகளுக்கு முன் உறைந்திருந்த ஒரு வைரசை விடுவிக்கும்.
இந்த உலகமே அதிகாரத்தில் மூல்கி இருக்கிறது. பவா அண்ணா உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு அன்பை உங்கள் பேச்சில் கொட்டி தீர்க்க முடிகிறது எனக்கு ஒரே ஒருமுறை யாவது உங்க காலில் விழுந்து உங்கள கட்டி பிடித்து உங்க இரண்டு கைகளுக்கும் ஒரு முத்தம் குடுக்கனும் பவா அண்ணா .. சக்திவேல் திருப்பூர்
கருங்கல்லில் வீடு கட்டினால் மிகவும் அருமையான முறையில் சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்த முடியும். வாஸ்து சாஸ்திரத்தில் கல்கொண்டு வீடு கட்டக்கூடாது என்று சொல்லப்படவில்லை...ஆகவே யாராவது கல் கொண்டு வீடு கட்டக்கூடாது என்று சொன்னால் அது தவறானது
நீங்கள் கட்டிய வீடு கானகம் ஒரு நேர்த்தியான வடிவம் கருங்கல்லில் கட்டிய வீடு அதுவும் அவர் நிலத்தில் கிடைத்த கருங்கள் மிக நேர்த்தியாக முறையில் கட்டிக் கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா வளர்க தமிழ்
இது போன்ற வீடுகள் கட்டுவதற்கு ஒரு சிறந்த ARCHITECT என்பவர்களை நாடுங்கள். மக்கள் உங்கள் மனதில் உள்ள ஒரு தவரான என்னத்தை மாற்றுங்கள் ARCHITECT என்பவர்கள் அதிக பணமதிப்பிற்கா மட்டுமே வடிவமைப்பாளர்கள் அல்ல அவர்கள் உங்கள் மனநிலைக்கு ஏற்பவும் மற்றும் உங்கள் பணமதிப்பிற்கு ஏற்பவும் கட்டிடம் வடிவமைக்க முடியும். இதில் வரும் லாரி பேக்கர் என்பவர் ஒரு சிறந்த ARCHITECT.
வாஸ்து என்பது முழுக்க முழுக்க அறிவியல்....இது சத்தியமான உண்மை....சில தவறானவர்கள் வியாபார ரீதியாக தவறுகள் செய்வதால் வாஸ்து சாஸ்திரம் மீது தவறாகப் புரிந்து கொள்ள பட்டுள்ளது.... மற்றபடி இயற்கை பொருட்கள் கொண்டு கட்டுவது என்பது அருமையான யுக்தி....
திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரில் கார்போரன்டம்(அஜாக்ஸ்) கம்பெனியில் கிழக்குப்பக்கம் ஒரு கல்வீடு இருந்தது.15 ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.அதில் அவர்கள் கழித்துப்போட்ட கிரைன்டிங் வீல்,உடைந்த செராமிக் துண்டுகள்,கல்போன்றவை கொண்டு சுவர் எழுப்பியிருந்தனர்.அந்த நினைவு இப்போது வந்து விட்டது.
சிமெண்ட் எனும் அநாகரீகம் பயம் படுத்தக்கூடாது.. சரிங்க ஐயா, அப்புறம் ஏன் தரை தலத்துக்கும், மேற்கூரை அமைக்கவும் சிமெண்ட் பயன்பாடு..? அதற்கும் மாற்று கூறினால் இந்த காணொளி சிறப்பு ஐயா..
What he is saying is true,we are doing it more than decade, I also live in one such house . LAURIE BAKER one of the legendary architect.....I always admire him a lot
ஐயா. பவா சொல்வது 100%உண்மை "மனோன்மணியம் சுந்தரனர்" பல்கலைக்கழகம் கட்டிய போது மதிப்பிற்குறிய "வஸந்தி தேவி" அவர்களை சந்திக்க ஐயா.APCV.சோக்கலிங்கம் அவர்களுடன் சென்றிருந்த போது நான் அந்த கட்டிடகலை கண்டு பிரமித்தேன்.