Online Order Available WhatsApp number 6381287876
call are WhatsApp 6381287876
4000 நோய்களை சரிசெய்யும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்... டாக்டரே என்ன சொல்றாரு பாருங்க…
முடவாட்டுக்கால் உடலில் உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது. கிட்டதட்ட 4000 நோய்களைத் தீர்க்கும் என்று சொல்கிறார்கள்.. இது எங்கு விளையும், இதை எப்படி சாப்பிட வேண்டும், முடவாட்டுக்கால் சூப் செய்வது எப்படி போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலை பிரதேசங்களில் விளையக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது..
தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலே அது கொல்லிமலை தான் என்கிற அளவிற்கு முடவாட்டுக்கால் விளையும் பிரதான இடமாக கொல்லிமலை இருக்கிறது.
முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம்
முடவாட்டுக்கால் பயன்கள்
முடவாட்டுக்கால் பயன்கள்
முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம்.
எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை நன்கு உறுதியாக வளர்க்கவும் அதிகரிக்க செய்யவும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு பயன்படுகிறது.
மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி நிவாரணையாக செயல்படும்..
தேவையான பொருள்கள்
முடவாட்டுக்கால் கிழங்கு - சிறு துண்டு (50-100 கிராம்)
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பற்கள்
கருவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - ஒன்று
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு,
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
பெருங்காயம் - சிறிது,
செய்முறை
முடவாட்டுக் காலை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அதோடு எடுத்து வைத்திருக்கும் தக்காளியையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இதை நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து பொரிய விடவும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு அரைத்த விழுதை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன அளவிற்கு ஒரு லிட்டர் வரையில் தண்ணீர் சேர்க்கலாம். இதில் மஞ்சள் தூள், பெருங்காயம் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
நன்கு கொதித்து வந்ததும் உப்பு சேர்க்க வேண்டும். சூப்பிற்கு எப்போதும் கடைசியில் தான் உப்பு சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால் அதிகமாகிவிடும்..
சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் ஆட்டுக்கால் சூப் இன் சுவையில் அருமையான சைவ ஆட்டுக்கால் சூப் தயார்.
டீ காபி என குடித்து உடலை எடுத்துக் கொள்வதே விட இது போன்ற ஆரோக்கியமான சூப் வகைகளை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.
சிறு வயது முதலே இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வரும் பொழுது அவர்கள் ஆரோக்கியமாக வலிமையானவர்களாக வளருவார்கள்.
8 сен 2024