பயன் பெற்றேன். திருக்குறளைப் பேச்சு வழக்கில் எளிமையுடன் விவரிக்கும் பலரில் அரியவராக , மிக வலிமையுடையவராக அய்யாவைப் பார்க்கிறேன். பேச்சாளர்களுக்கே உரித்தான மிக எளிமை காரணத்தினால் மொத்த தந்திகளின் வள்ளுவ இசையில் இருந்து விலகி மாறுபாடாக ஓங்கி ஒலிக்கிறார். புகழ் குறளாய் வாழ்க அய்யா ! நன்றி அய்யா! 🙏
மிக மிக சிறப்பான உரை..! ஆளுமைமிகு திரு.வி.க பேச்சுப் பயிலரங்கங்களின் நிறுவனர் - முனைவர் தாமோதரனார் பேச்சினை எங்கள் பகுதி மக்களும், கேட்டிடும் வாய்ப்பை பெற்றதில் பேரானந்தம்.!! அன்புடன் கலக்கல் கந்தசாமி
நாற்பது நிமிடங்களில் நயமான பேச்சு அகத்தை நிறைத்த அற்புதமான பேச்சு சிந்தனையைத் தூண்டிய சிற்பியின் பேச்சு வாழ்க்கையை விளக்கிய வழக்கறிஞரின் பேச்சு திருக்குறளைத் தியானிக்கும் தீர்க்கதரிசியின் பேச்சு ஆன்றோரும் வியக்கும் ஆணித்தரமான பேச்சு சான்றோரும் மதிக்கும் சரித்திரப் பேச்சு ஊன்றி கவனித்தார்க்கு ஊக்கம் தரும் பேச்சு வெற்றிப் பாதையைக் காட்டிய விழிப்புணர்வு பேச்சு தட்டிக் கொடுத்துச் சென்ற தகைமையின் பேச்சு உற்றுநோக்கச் செய்த உயர்ந்தவரின் பேச்சு கற்றுத் தேர்ந்தவரின் கலங்கரைப் பேச்சு மொத்தத்தில்.. விழாவை நிறைத்த விமரிசையான வீச்சு! நெறியாளர் முனைவர் குறள்மாமணி குறட்சுடர் நம் தாமோதரன் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பணிவோடு தெரிவித்து மகிழ்கிறேன்! நாற்பது நிமிடங்களும் நம் நாட்களைச் செதுக்குவதற்கு ஞாபகப் பரிசு! நெல்லை அன்புடன் ஆனந்தி மிச்சிகன், வட அமெரிக்கா 🎉