அண்ணனின் இந்த முளைப்பாரி பாடல்மிக அருமையாகஉள்ளதில் உங்களுக்கும் உங்கள் கலைக்குழுவிற்கும்எமது ஸ்ரீ கண்ணபிரான்வில்லிசை குழுவின் சார்பாகநன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் வாழ்கவளமுடன்
குஜராத் மாநிலத்தில் இருந்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு போக முடியாமல் தவிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஆறுதல் தரும் அருமையான பாடல் தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணா🙏🤗
அருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் முளைப்பாரி பாடல் வரிகள் இசை பாடகர்களின் தெளிவான குரல்வளம் அனைத்தும் மிகச்சிறந்த முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்து மதமும் கலாச்சாரமும் அமேசான் நதியும் அட்லாண்டிக் பெருங்கடலும் போல் பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். இவ்வுலகில் ஏற்பட்ட நாகரிகங்கள் பெரும்பாலும் இந்து மதத்தின் அடித்தளத்தில் இருந்தே உருவானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்து மதத்தின் திருவிழாக்கள் அனைத்தும் மனித இனத்திற்கு நல் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பல்வேறு சமூகங்கள் அனைத்திற்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக மதுரையில் நடைபெறும் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் முதல் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் காலங்களில் பல்வேறு சமூகங்களை ஒன்றினைக்கும் பாலமாக அமைந்துள்ளது.