திருச்செந்தூர். அடியாருடன் கலந்து சிவநெறி பெற அருள்
• தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன தந்த தந்த ...... தனதான
• சரவண பவனே சரவண பவனே
சரவண பவனே சண்முகனே… 2 முறை
கண்டு மொழி, கொம்பு கொங்கை, வஞ்சி இடை, அம்பு நஞ்சு
கண்கள், குழல் கொண்டல், என்று, ...... பலகாலும்
கண்டு உளம் வருந்தி நொந்து, மங்கையர் வசம் புரிந்து,
கங்குல் பகல் என்று நின்று, ...... விதியாலே
பண்டை வினை கொண்டு உழன்று, வெந்து விழுகின்றல் கண்டு,
பங்கய பதங்கள் தந்து, ...... புகழோதும்
பண்புடைய சிந்தை அன்பர் தங்களின் உடன் கலந்து
பண்பு பெற, அஞ்சல் அஞ்சல் ...... என வாராய்.
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு அற நெருங்கி, இண்டு
வம்பினை அடைந்து, சந்தின் ...... மிக மூழ்கி,
வஞ்சியை முனிந்த கொங்கை, மென்குற மடந்தை செங்கை
வந்து அழகுடன் கலந்த ...... மணிமார்பா!
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு,
செஞ்சமர் புனைந்து, துங்க ...... மயில் மீதே
சென்று, அசுரர் அஞ்ச வென்று, குன்று இடை மணம் புணர்ந்து,
செந்தில் நகர் வந்து அமர்ந்த ...... பெருமாளே.
20 окт 2024