இந்த பிச்சைக்காரன் கோவில்கள் எதுவும் கட்டவில்லை, புத்தகங்கள் எதுவும் எழுதவில்லை.இந்த பிச்சைக்காரன் வாழ்வில் ஆன்மீக ஊக்கம் அளிக்கும் வகையில் எதுவும் இல்லை.
ஆனால் இந்த உலகிற்கு ஒரு நாமத்தை மட்டும் விட்டு செல்கிறான்.
என் தந்தை தன் அன்பின் காரணமாய் யோகி ராம்சுரத்குமார் என்ற இந் நாமத்தை அவரின் பெரும் ஆசிர்வாதமாய் இந்த உலகிற்கு அளித்து இருக்கிறார்.
ராமா ராமா யோகி ராமா (2)
ராமன் தூதுவனே
சூரியவம்ச குருவே
ராமனே நீதான் ராமனே வேதனை தீர்க்க வல்ல
விடி வெள்ளியாய் வந்த வேதனை நீதான் வேதமே..
(ராமா ராமா)
பிச்சை என்று சொல்லி வேடம் கொண்ட யோகி
பிச்சை கேட்கவேண்டி ஏங்கும் உள்ளம் கோடி
ராம ராம ராம ராம யோகி ராம் சுரத்குமார்.
கருவில் என்னை தாங்கி தாயும் ஆகி நின்றான்
அறியும் அறிவை தந்து தந்தையாகிய நின்றான்.
ராமா யோகி ராமா (2)
(ராமா ராமா)
அருணை பெருமை தவமாய் அலைந்து திரிந்த சிவமே
கருணை ஒன்றே குணமாய் காத்து நின்ற தவமே
ராம ராம ராம ராம யோகி ராம் சுரத்குமார்.
தந்தை ஒன்றை கொண்டு உன்னை மறைத்து வந்தாய் எந்தன் வரியை பிழையாய் பாட வந்தேன் கவியாய்.
ராமா யோகி ராமா (2)
(ராமா ராமா)
வாழ்வாய் வீழ்வா என்று வந்தேன் உன்னை நாடி தாழ்வு ஏது இங்கு தந்தை இருக்க என்றாய்
ராம ராம ராம ராம யோகி ராம் சுரத்குமார்.
பாதை அறியா குருடாய் பயந்து துளைந்து வந்தேன் உன் விழியில் என்னை தூக்கி வழியும் காட்டி தந்தாய்
ராமா யோகி ராமா (2)
(ராமா ராமா)
7 сен 2024