Dr.அருச்சுனா கைது தவறானது. ஒடுக்குமுறையாளர்களும் ஊழல்வாதிகளும் பிழை செய்தவர்களும் இவ்வாறுதான் நல்லவர்கள் மீது வழக்குப்போட்டு அச்சுறுத்துவார்கள். ஆனால் அநீதியை எதிர்ப்பவர்கள் இதைக்கண்டு பயப்பட மாட்டார்கள். Dr.அருச்சுனாவும் அவரது வழக்கறிஞர்களும் சர்வசாதாரணமாக இவ்வழக்குகளை வெல்வார்கள். எனவே இது ஒரு பெரிய சம்பவமில்லை. இந்த youtuber ஐ குற்றம் சொல்வதில் எந்த நியாயமுமில்லை. அவர் தனது கடமையை ஒழுங்காக செய்துள்ளார். உண்மையை மக்களுக்கு ஆவணப்படுத்தியுள்ளார். இது தான் உண்மையான ஊடக சேவை. அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உங்களைப்போல்தான் மற்ற youtubers உம் மக்கள் பக்கமும் நீதியின் பக்கமும் என்றும் இருக்க வேண்டும்.
அத்துமீறி சென்றார் என்கிறார்களே. Dr.Archchuna சென்றதால்தான் அங்கு நடந்த வைத்தியர்களின் கவனயீனம் மக்களுக்கும் தெரிந்தது. இல்லாவிட்டால் யாழ் வைத்தியசாலைகளில் நடந்த சம்பவங்கள் எவ்வாறு வெளிவராமல் மூடப்பட்டதோ அவ்வாறே இதுவும் மூடப்பட்ட ஒன்றாக ஆகி இருக்கும். DR.ARCHCHUNA SIR உங்களுக்கு தான் வாழ்த்துக்கள். ❤ ❤❤
சிங்கத்தை சிறையில் அடைந்தாலும் அதன் கர்ச்சிக்கும் குணம் குறையாது ஏன் எனில் இது பிறந்த பிறப்பும் வளர்ந்த வளர்ப்பும் அப்படி. இது தனக்கு துன்பம் வந்தால் சிரிக்கும் மற்றவர்களுக்கு துன்பங்கள் வந்தால் தான் கவலைபடும். தடைகளை உடைத்து தர்மத்தை நிலைநாட்ட வாழ்த்துக்கள் ❤
தம்பி வணக்கம். ஒருவர் வரச்சொல்லி கேட்டதற்கு உடன் ஓடிவந்தார். அதேபோல் எனக்கும் ஒன்று நடந்தால் அவர் வருவார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவும். எதற்காக நான் சொல்லுகிறேன் என்றால் மக்கள் டாக்டர் கைவிட்டு போவதாக வெளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர் ஒரு தனி மனிதனுக்காக வேதனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார். தம்பி தயவுசெய்து உங்கள் வாயால் மக்களுக்கு எடுத்து சொல்லவும் அவரை கைவிட்டு விலகி போகவேண்டாம் என்று.நன்றி வணக்கம்.
தெய்வமே இது எங்களாளை எர்க்கமுடியாது அண்ணா. ரொம்பவே வேதனையா இருக்குது.குற்றங்கள் செய்தவங்கள் வெளியே. மனிதாபிமானம் நிலையில் இருந்து. சமுகத்துக்கு நல்லதை செய்ய நினைச்ச உங்களுக்கு இது என்ன நிலைமை. இதுதானா இலங்கையின் சட்ட நீதி அண்ணா.
அரவிந்த் உங்கள் இந்த ஊடகப் பணிக்காக வாழ்த்துக்கள். மன்னாரில் சிறந்த,பிரபலியமான RU-vidr நீங்கள் தான். அதனால் மருத்துவர் அர்ச்சுனா தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரியாக வழங்க வேண்டும். வேறு மாவட்ட ஊடகங்கள் யாரும் உங்கு வருகைதராத படியால் நீங்கள் மட்டுமே தகவல்களை வழங்க வேண்டும். யாரும் புல்லுருவிகள் உங்களை மிரட்டினால் பயப்பட வேண்டாம். நீங்கள் செய்வது மக்களுக்கான தீர்வைப் பெறும் போராட்டத்துக்குரிய சேவையே.
தம்பி அவரை கைவிட்டு விடாதீர்கள் பாவம்.மன்னார் மக்களே.இது சில நேரங்களில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு இருக்கலாம்.இரு நாட்கள் விடுமுறை என்பதால்.அவர் ஏதும் தப்பு பண்ணல பாவம் அவர் குழந்தை.😢😢😢😢
உன்மை நெஞ்சம் ஒன்றுக்கும் அஞ்யாது.அவர்தான் டாக்டர் அர்ச்சுனா.அவருக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தைதான்.மாபியா கூட்டத்தின் சதிகள் இன்னும் Dr அர்ச்சுனாவின் போரட்டத்திற்கு வலு சேர்க்குமே தவிர வீழ்ச்சியடைய விடாது.மன பலமும் மக்கள் பலமும் கூடியவர்தான் டாக்டர் அருச்சுனா அவர்கள்.உன்மை வெல்லும் நிச்சயம்.👍👍👍👍👍👍👍👍
அரவிந் மிக்க மிக்க நன்றி. கால தாமதத்தால் ஒரு உயிரே போய்விட்டது. மருத்துவர்கள் யாராவது உடனே பார்த்து சரியான சிகிச்சை அளித்திருந்தால் இந்த மரணம் நிகழ்வதற்க்கான சந்தர்ப்பம் இருந்திருக்காது. உடனே சரியான சிகிச்சை செய்யாத அந்த வைத்தியசாலையில் பணிபுரிந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த குடும்பத்திற்க்காக என்ன நடந்து என்று துணிந்து கேட்க்கப்போன மருத்துவர் அருச்சுணாவை கைது செய்திருக்கின்றார்கள். அவர் அறிவை பயன்படுத்தி சட்டத்தின் மூலம்தான் எந்த நீதியையும் எடுக்கலாம் என நம்புகின்றவர். அவர் யாழ் மருத்துவப்பீடத்திற்க்கே நீதிமன்றம் சென்று, வென்று தன் கல்வியை தொடர்ந்தவர், ஆகையால் மருத்துவர் அருச்சுணாவிற்க்கு சட்டம் தெரியும் எனவே அதை மதித்துத்தான் அவர் செயல்பட்டிருப்பார் என நம்புகின்றேன். விதியை மதியால் தான் வெல்ல வேண்டும். இறந்த குடும்பத்தின் பதிவினை பார்த்தேன் அக்குடும்பத்தின் அண்ணாமார்கள் கடினமான வேலை செய்துதான் தன் தங்கையை பல கனவுகளோடுதான் படிக்கவைத்திருக்கின்றார்கள். அந்த குழந்தை தாய் இல்லாமல் வளரப்பு போகின்றது. தாய் இல்லாமல் வளர்ந்தவர்களுக்குத்தான் அதன் வலியை உணர முடியும். எதையும் திரும்ப பெற்றிடலாம், ஆனால் உயிரை திரும்ப பெறமுடியாது. போதிய பணம் இல்லாத பாமரமக்களுக்குத்தான் அரச மருத்தவமனை மிக மிக முக்கியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது. இந்த குடும்பத்திற்க்கு உதவுவதற்க்காகத்தான் சுயநலமற்று, மனித நேயத்தோடு இவ்வாறு மருத்தவர் அருச்சுணா செய்தவர். அவரைப் போல் எல்லோரும் தட்டிக் கேட்டால் இலங்கையை புனித நாடாக மாற்ற முடியும். இக்குடும்பத்திற்க்கு சரியான நீதி கிடைத்தால், இப்படியான தவறு யாருக்கும் நடக்காது, மருத்துவத்துறை மிக மிக கவனத்துடன், பயத்தோடு செயல்ப்படும். எல்லாம் நல்ல படியாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக
நல்லதை செய்யத் தொடங்கும்போது இப்படி யான தடைகள் சிறைச்சாலை வாழ்க்கை ( நெல்சன்மண்டேலா தீவிரவாதி என்று 25வருடங்கள் சிறை பின்னர் நாட்டின் ஜனாதிபதி, சமாதானதிற்கான நோபல் பரிசு. ) பொல்லா நரிகளுக்கு மத்தியில் நிதானத்துடன் செயற்பட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். Always Jesus Christ is with you.
மன்னார் மக்களுக்காக குரல் கொடுக்க போனது Dr.அருச்சுனாவின் தப்பு. அங்கு கடமையாற்றும் ஊழியர்களின் நிலைபாட்டில்தான் அங்குள்ள மக்களும் இருக்கிறார்கள் என்பது மிகத்தெளிவாக தெரிகிறது
டாக்டர் பாதுகாப்பா இருக்கிறார்.அதுவும் நல்ல விஷயம். அவர் எங்கு சென்றாலும்.மேலும் சில கற்காத வற்றை கற்றுக் கொள்கின்ரார். எல்லாம் நன்மைக்கே. நல்லவர்களை நிறைய சோதிப்பார் ஆனால் கை விடமாட்டார்.
உழ ல்வதிகள் சந்தோஷப்படுகிறார் நீ தி கேடப்பவன் அடைக்கப்படுகிறான் நீதி ஒருபோது ம் சாக்காது , இப்போ அராஜகம் தலைதூக்கும் காலம் பொறுமையாக இருந்து பார்ப்போம்.
நீதி, நியாயம். பாவம், மனிதாபிமான அர்சுணாவை இப்படி சிறை வைப்பது நீதி அற்ற செயல். பணம் சம்பாதித்தவர்களுஎக் இவர் இருப்பது தடையாக உள்ளது. இதனால் தான் மாறி மாறி குற்றம் சுமத்தி உள்ளே அனுப்பினாலும் உண்மை தான் வெல்லும்
ஊழல் செஞ்சு கிடைக்கும் பணத்தை நான்கு பங்காக பிடித்து குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் சமூகத்துக்கு இடையில் நீங்கள் ஒருவர் சமூகத்தில் நல்லவராக இருந்து நல்லது செய்ய முடியாது மக்களும் அவரவருக்காக ஓடி கொண்டு இருப்பார்கள் உங்களுக்காக வர மாட்டார்கள் தயவுசெய்து டாக்டர் சார் நீங்க உங்களோட வேலைய பாருங்கோ குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவும் நாட்டை திருத்த முடியாது இது மக்கள் தட்டிக் கேட்க வேண்டிய விஷயம் மக்களை ஊமையாக இருக்கும் போது தனி மனிதன் உங்களால் எதுவும் செய்ய முடியாது வெளிச்சத்துக்கு எல்லாம் கொண்டு வந்து விட்டேன் அந்த தூங்குறதுக்கு நன்றி ̓̓🙏🙏🙏🙏
வைத்தியரால் ஒன்றும் செய்யஇயலாது சட்டத்தரணியால்தான் முடியும். மன்னாரில் திறமையான சட்டத்தரணிகள் உள்ளனர் அவர்கள் முன்வந்தால் கண்டிப்பாக முடியும். அவர்கள் முன்வருவார்கள் கவலை வேண்டாம்.
பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் .. மன்னார் காவல்துறைக்கு முறையிட்டு... வவுனியா நீதிமன்றுக்கு கொண்டு செல்லாம்...சட்வாளர்களுக்கு அது தெரியும்..... அங்கு மதிப்புக்குரிய நேர்மையான திரு இளஞ்செளியன் அவர்கள் உள்ளார்.......❤❤❤❤
தம்பி நீங்கள் நலமா? உங்களுக்கும் ஏதாவது சிக்கல் கொடுத்தார்களா? மருத்தவர் பற்றிய எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்து எங்களை பார்க்க வைத்த உங்களுக்கு நன்றிகள் பல🙏
டாக்டர் வைத்தியசாலையில் செல்ல அவசியம் இல்லை. டாக்டர் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர் கூட்டி கொண்டு காவல்துறை முதல் அறிக்கை செய்த பிறகு மருத்துவ சங்கத்தின் முறைப்பாடு செய்ய வேண்டும். இதை தான் அவரது வழக்கறிஞர் கூட சொல்லுவார்கள்.