அலீ(ரலி) அறிவித்தார். 'அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது); 'ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் - வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே! (அது, மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்படவேண்டியதே)யாகும்! ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான) காப்பாளர்களின் அனுமதியின்றி, பிறரைத் தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீதும் அல்லாஹ்வின்... வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!' ஸஹீஹ் புகாரி : 1870. அத்தியாயம் : 29. மதீனாவின் சிறப்புகள்
Islam is the Deen of Allah subahanallah Islam has completed with nabi swm and sahaba rali Allah anhuma..alhumdulillah we have Quran and sunnah and following of sunnath nabi swm sahabas details and messages..that's the clear and truth of Deen ul Islam above all teaching in the name of Deen no consent with the Islam this people have wearing long Joppa and long beard and cap mundas don't think their body language and embrace in them be careful..this people not awliya Allah on the contrary awliya tagut.
தவ்ஹீத் என்ற பெயரில் பல பிரிவுகளாக இந்த சொற்ப 30 வருடத்தில் பிரிந்து நிர்வாகத்தில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கேவலமான முறையில் குற்றம் சுமத்திக்கொண்டு இருந்தவர்கள் சொல்வது தான் சரியான மார்க்கமாக என்ன?
இப்படியே இயக்கங்களுக்கு முட்டு குடுத்து குடுத்து எத்தனை காலம்....... ஜமாஅத் மேல் பற்று வைத்து பயனில்லை......இஸ்லாம் மீது பற்று வைக்க வேண்டும்.....நாம் அனைவரும் என்றைக்கு குர்ஆன் ஸூன்னா வை பின்பற்றுவோமோ அன்று தான் அனைவரும் நேர்வழியில் வருவோம்......அதுவரை இவ்வாறு தான்😢