தேடி வந்ததேர்க்கு கோடி கொடுப்பான் தேட மரத்தோர்க்கு நாடி கொடுப்பான் ஞான வள்ளலே பேற்றி பேற்றி 🙏🦋🙏 வாழ்க வளமுடன் எஸ் சசிகண்ணன் மதுரை ❤️🦋🙏 எல்லாம் நீயே 🌺🦋🙏
சொர்க்கத்தில் கால் எடுத்து வைத்து எங்களையும் நீங்க கூட்டிட்டு போயிட்டீங்க அனைத்து பக்தர்களையும் கூட்டிட்டு போயிட்டீங்க உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் நன்றிகள் அண்ணா
வணக்கம் சாமி, என் பெயர் சரவணன், மதுரை ஞானசபை. பகவானின் ஞானசபையைப் பற்றிய உங்கள் வீடியோ சூப்பர் சாமி. உண்மைகளை உங்க ஸ்டைலில் எளிமையா சொல்லிட்டீங்க. பார்க்கும் போது நீங்க இந்த ஞானசபை முழுவதும் மக்களால் நிரம்பனும் அதுதான் என் நோக்கம் அப்படீன்னு சொன்னது ரொம்ப எமோஷனலா இருந்தது சாமி.. சற்குருவே சரணம் 🙏
ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா உமக்கு கோடி நன்றிகள் என் மனதில் காலையில் இருந்து ஞான சபை நினைவாக இருந்தது அண்ணா உங்கள் இந்த பதிவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அய்யன் இன்றும் நமது உடன் இருக்கிறார் என்பது உண்மை அண்ணா சொர்க்கத்தை பதிவில் காட்டியதற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா சரணம் சரணம் சரணம்
சற்குருவே சரணம் 🙏 மிகவும் அருமையான பதிவு சாமி... விரிவான விளக்கமான பதிவு... பகவானின் பூஜைகளை பதிவு செய்த விதம் நேர்த்தியானது... பகவான் உருவாக்கிய ஞானசபைக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் செய்யும் இந்த தொண்டு மகத்தானது... * நமது சற்குரு அப்பா எந்த ஒரு செயலைச் செய்தாலும் அவரின் கணக்கு கணக்கச்சிதமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அப்படி ஒரு தெய்வமே தனக்காக உருவாக்கிய கோவில் என்பது மதுரை ஞானசபை. எதிர்காலத்தில் தனது பிள்ளைகள் ஞானத்தைத் தேடி அங்கும் இங்கும் அலையக் கூடாது என்று மதுரையில் ஞானசபையை அமைத்து நமக்கு வழிகாட்டியாக ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள் அவர்களையும் அருளிய சற்குரு அப்பாவின் கருணையை எண்ணி கண்கள் கலங்குகிறது... *முதன் முதலில் அன்னதானம் வழங்கப்பட்டது மதுரை ஞானசபையில் தான்... *முதன் முதலில் சற்குரு பகவானுக்கு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டதும் மதுரை ஞானசபையில் தான்... *கணக்கன்பட்டியில் இருந்து ஒரு நாளுக்கு மூன்று முறை கூட மதுரை ஞானசபைக்கு இஷ்டப்பட்டு வந்துள்ளார்... *தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்வார்கள். அந்த சிவமே மதுரை ஞானசபையை தென்னாடு என்று அழைத்தது. *மேலும் வாழ்க வளமுடன் நேர்மையாகக்கு போலாமாடா சாமி என்று கேட்பாராம். அவர் அப்படி குறிப்பிட்டு சொன்னது மதுரை ஞானசபையை தான். *அது மட்டுமல்லாமல் நான் ஏழு படிக்கட்டுக்காரன்டா சாமி என்று சற்குரு அப்பா சொல்லி இருக்கிறார். ஆன்மீகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும் ஏழாவது படிக்கட்டு என்பது சகஸ்ராரச் சக்கரம்... அப்படி இந்த ஏழாவது படிக்கட்டான ஞானசபைக்கு அந்த சிவமான சற்குரு அப்பாவைக் காண வருபவர்கள் ஞான நிலையை அடைவது உறுதி... நாம் சற்குரு பகவானிடம் பெறவேண்டிய மிகப்பெரிய வரம் பிறவி இல்லாத பெருவாழ்வை அடைய வேண்டியது தான்... அந்த வரத்தை ஞானத்தை அடையும் பொழுது பெற முடியும்... அந்த வரத்தைப் பெற மதுரை ஞானசபைக்கு பகவானின் பிள்ளைகள் அவசியம் வர வேண்டும்... உங்கள் காணொளி மூலம் ஞானத்தைத் தேடும் பகவானின் பிள்ளைகள் மதுரை ஞானசபைக்கு வருவதற்கு உதவியாக இருக்கும்... பகவான் பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேற நாம் அனைவரும் ஒன்றாக தொண்டுகள் செய்வோம்... அதற்கு உரிய ஆட்களைத் தேர்ந்தெடுத்து தகுந்த நேரத்தில் பகவான் அனுப்பி வைக்கிறார் என்று நம்புகிறேன்... தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். Defence colony அல்ல வில்லாபுரம் ஹவுஸிங் ஃபோர்டு காலனி ... மதுரை ஞானசபைக்கு செல்லும் வழி மற்றும் சற்குரு பகவானின் தரிசனம் காண Google map 👇👇👇 maps.app.goo.gl/8eGNVZXn5hjuXmFB8 மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழநிசுவாமிகள் ஞானசபை, HIG 4538, வில்லாபுரம், ஹவுஸிங் ஃபோர்டு காலனி, மதுரை-11.
மகா ஸ்ரீ சற்குருவே சரணம் தங்களுடைய அருமையான இந்த தகவலுக்கு இருகரம் கூப்பி வணங்குகிறேன் அய்யனுடைய அருள் நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் நம்மோடு அயன் இருக்கிறார் என்பதையும் நான் உணர்ந்துதான் இந்த பணி செய்து கொண்டிருக்கிறேன் உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி
@@balasaanmeegam4884மதுரை ஞானசபையின் சார்பில் தான் இந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது சாமி. உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள்... தொடரட்டும் உங்கள் தொண்டு... பகவானின் பிள்ளைகளுக்கு உண்மையைக் கொண்டு சேர்ப்பது பகவானுக்கு செய்யப்படும் மிகச் சிறந்த தொண்டு. சற்குருவே சரணம் 🙏
ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா நீயே துணை சாமி என் உடல் நிலை குடும்ப சூழ்நிலை சந்தோசமாக மாற்றி கொடுங்க அப்பா உம் திரு மலர் பாதங்களில் சரணாகதி அடைந்து விட்டேன் சற்குரு அப்பா நீங்கதான் சரி செய்து கொடுக்க வேண்டும் நீரே எமக்கு எல்லாம் ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா உம் திரு மலர் பாதங்கள் சரணம் சரணம் சரணம்
ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா சரணம் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா கோடி நன்றிகள் நம் அய்யன் வந்து கூறியது போல் உள்ளது அப்பா இதை விட என்ன பாக்கியம் வேண்டும் இப்பிறவியின் பயன் அடைந்து விட்டது போல் உணர்வு சற்குருவே சரணம் அப்பா