பொள்ளாச்சி ஆர் பொன்னாபுரம்
கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.
இவரது மனைவி சத்தியவாணி.
இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
சுரேஷ் மதுவுக்கு அடிமையானவர்.
இதனால் கணவன் மனைவிக்குள்
அடிக்கடி தகராறு ஏற்படும்.
இதனால் சத்தியவாணி அடிக்கடி
தாய் வீட்டுக்கு போய்விடுவார்.
இந்நிலையில் இவர்கள்
வசித்து வரும் வீட்டை விற்க
சுரேஷ் முயற்சி செய்து வந்தார்.
இதையறிந்த சத்தியவாணி பொள்ளாச்சி
சார் பதிவாளர் அலுவலகத்தில்
தடங்கல் மனு செய்தார்.
சொத்தை விற்க தடை விதிக்க
வேண்டும் என கடந்த 9ம்தேதி
மனு அளித்தார்.
ஆனால்,
கடந்த 12ம் தேதி வேறு ஒரு நபருக்கு கணவர் வீட்டை விற்று விட்டார்.
சார்பதிவாளர் அலுவலகத்தில்
பத்திரப்பதிவும்
செய்யப்பட்டுள்ளது. #pollachi #SubRegister #Dinamalar #
16 окт 2024