நான் தமிழன், எனக்கு தமிழ் தெரியும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தட்டி பறிப்பவரையும் விட்டு கொடுப்பவரயும் இலக்கண விதியிலேயே சமமாக பார்ப்பது எனது மொழி. எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு என் தமிழுக்கு பல உண்டு.
English லயும் அதே தான் நண்பா.. அதவிட English எல்லாரையும் சமமா தான் நடத்தும்... ஒருமை/பன்மை னு ஒரு விஷயமே கிடையாது. தமிழ் ல தான் வசதியானவர் னா அவர், வசதி இல்லை ன்னா அவன், உயர்ந்த சாதி னா அவர், தாழ்த்தப்பட்ட சாதி னா அவன். இதுல பெரும படுறதுக்கு எதும் இல்ல...
@@Haq05அது உங்கள் தனிப்பட்ட விருப்பம் , eg: வயது வித்தியாசம் வச்சு சொல்லலாம் உங்க வயசுக்கு கீழ உள்ள ஆளா இருந்தா அவன் னும் வயது ல பெரியவ(ரா) இருந்தா அவர் ன்னும் சொல்லலாம் , எனக்கு தெரிஞ்சது நா சொல்லிட்ட சரியானு தெரியல😊
👏🏽👏🏽👍🏽 விவசாயம் - ஆரியம் உழவு - தமிழ் வாசகம் - ஆரியம் உரை, செய்தி - தமிழ் தட்டிப்பறிப்பதென்பது கெட்ட செயல். ஆகவே, மரியாதை குறைவாக "பறிப்பவன்" என்று எழுதியிருக்கிறார்களென்று எண்ணுகிறேன். விட்டுக்கொடுப்பதென்பது மேன்மையான செயல். எனவே, மரியாதையுடன் "கொடுப்பவர்" என்று எழுதியிருக்கிறார்களென்று எண்ணுகிறேன். தங்களது பணி தொடரட்டும், வளரட்டும் & சிறக்கட்டும். எனது மனமார்ந்த வாழ்த்துகள்!! 💐🙏🏽
@@mr.sarcasm9223 திரு - தமிழ் வாசகம் - ஆரியம் திருவாசகத்திற்கு திருவாசகம் என்ற பெயரை, திரு மணிவாசகப் பெருமானே வைத்தாரா, அல்லது, பின்னர் வந்தவர்கள் வைத்தார்களா என்பது எனக்கு தெரியாது. பெருமானே அவ்வாறு வைத்திருக்கிறாரெனில் அவரைத்தான் கேட்கவேண்டும். பின்னர் வந்தவர்கள் வைத்திருக்கிறார்கள் எனில், அச்சமயத்தில் யாருடைய கை ஓங்கியுருந்தது என்பது எல்லோருக்கும் கண்கூடாகும். ஆரியக்கலப்பு என்பது 2,300 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. திருக்குறள் - சில ஆரியச் சொற்கள் திரு காரைக்கால் அம்மையார் - சில ஆரியச் சொற்கள் தேவாரம் - பல ஆரியச் சொற்கள் திருவாசகம் - பற்பல ஆரியச் சொற்கள் திருப்புகழ் - ஆரியத்துடன் கொஞ்சம் தமிழ் சற்று ஆரியம் கலந்திருக்கும் திருவாசகத்திற்கு ஆரியப்பெயர். வெகுவாக ஆரியம் கலந்திருக்கும் திருப்புகழுக்கு திருநெறியத்தமிழ்ப் பெயர்!!
நமது தமிழ் வளர்ச்சி மற்றும் தெளிவுக்கு இது மிகப்பெரிய துவக்கமாக இருக்கட்டும். தமிழ் பேசுவதிலும் தெளிய தமிழ் பேசுவது அதற்கு மேலும் பெருமை சேர்க்கும். உங்கள் உயரிய நோக்கங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிழை ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா... தமிழை வளர்க்க கடமைப்பட்டுள்ள பல ஊடகங்களும் தமிழை பிழையாக எழுதுகின்றன.. மற்றும் பலர் தமிழை கதைக்கும் போது தமிழில் இல்லாத ஒலிகளை பயன்படுத்துகிறார்கள்... உ.த:-ga, ba, da, இவற்றை பற்றியும் விழிப்புணர்வு தேவை... இப்படி பாவிப்பதால் தமிழ் சிதைவடைய வாய்ப்புள்ளது அல்லவா? இப்படிக்கு அன்புடன் ஓர் ஈழத்தமிழன்
ஐயா உங்களைப்போன்று போல ஆசிரியரிடம் நான் பாடம் படித்திருந்தால் நானும் நன்கு படித்து வேலையில் சேர்ந்திருப்பேன் ❤அருமையாக புரிந்து கொண்டேன் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
ஐயா தமிழகத் தொலைக்காட்சிகளிலும் RU-vid channel களிலும் தமிழைப் பிழையாகப் பதிவிடுவதைப் பார்க்கும்போது அவற்றைத் திருத்துவதற்கு ஒருவர் கூட இல்லையா என்று மனம் மிகுந்த கவலையடைவது வழக்கம். ஆனால் உங்களைப் பார்த்தவுடன் அக்கவலை பறந்துவிட்டது. மிக நன்று.
தமிழில் மரியாதைப் பன்மையே தேவையில்லாதது என்பது எனது கருத்து. சமத்துவ சமூகத்தில் மன்னர் காலத்திய வழக்கம் தேவை இல்லை. ஆதியில் மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்தில் இல்லை
தங்களின் தமிழ்ப்பற்றிக்கும் தங்களின் அக்கறைக்கும் இந்த தமிழினம் செய்யும் சிறு தவறுகளை சுட்டிக்காட்டி அதை அனைவரும் கடைப்பிடிக்க பதிவிட்ட உங்களின் தமிழ்த்தொண்டிற்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பதிவிட்டால் உதவியாயிருக்கும்
Great effort sir. Your efforts to save our language is amazing. Thank you for teaching us. People's who had written wrong words unknowingly please take a step correct it instead of calling him and threatening. Please understand.
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். நானும் இது போன்ற தவறுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இது சம்பந்தப் பட்டவர்கள் பார்த்தால் தான் மாற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
விவசாயத்திற்கு உரிய பண்ணை >விவசாயப் பண்ணை . இது நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. ஆதலால் ஒற்று மிகுந்தது பொருண்மையைக் கூறி விளக்குங்கள் ஐயா!
விட்டுக் கொடுப்பவரை, எப்படி அவன் என்று அழைப்பது. உயரிய எண்ணத்திற்கு மரியாதையாக "விட்டுக் கொடுப்பவர்" என்பதே சரி. தட்டிப் பறித்த தகாத செயல் செய்பவனை , தட்டிப்பறித்தவன் என்பதே சரி. நன்றிங்க அய்யா. தொடருட்டும் உங்கள் தமிழ் புரட்சி.வணங்குகிறேன். ❤
தம்பி உங்க வியாக்கியானம் குணம் சார்ந்தது இங்கு ஒறுமை பன்மை சார்ந்தது இலக்கணத்தை இலக்கணமா பாருங்க மதிப்பை மதிப்பா பாருங்க இரண்டையும் குழப்பும் வித்தையை அப்புறம் அரசியலில் வைச்சிக்கலாம் நன்றி.....
@@krishnant202நண்பரே, அந்தச் சுவரில் இந்த வித்தியாசத்தை குறிப்பிடும் வகையில் "பவன்", "பவர்" என்ற எழுத்துக்களின் கீழே அடிக்கோடிட்டு எழுதப் பட்டிருந்தது. நன்கு கவனியுங்கள். அவர்கள் வேண்டும் என்றேதான், அப்படி எழுதியிருக்கிறார்கள். அதில் நாம் நம்முடைய அறிவாளித் தனத்தை காட்ட நினைப்பது வேண்டாம் என்று நினைக்கிறேன்.
ஐயா, வணக்கம்! கடந்த குடியரசு தினவிழாவில் டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களின் ஊர்தி அடையாள அணிவகுப்பில் நமது தமிழ்நாடு ஊர்தி செல்லும் போது ஓலிக்கப்பட்ட (குடயோலை கண்ட தமிழ்க் குடியே!) என்ற பாடலின் பொருள் குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா.🙏