பள்ளியில் படிக்கும் போது இருந்த அதே மனப்பான்மை வெகுளியான பேச்சு பார்க்கும்போதே நீ தான் என்று கண்டு பிடித்து விட்டேன்.உனது ஆசிரியர் மைதிலி கூறுகிறேன் காலம் பதில் சொல்லும் கலங்காதே.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தம்பதிகள் பிரிந்த வாழ வேண்டும் என்று யாரும் நினைக்காதீர்கள்..காலம் செல்ல செல்ல இந்த உலகம் நம்மை தனிமை படுத்தி விடும்..சேர்ந்து வாழுங்கள் ..
என்னதான் அவுங்க normal-அ பேசினாலும் அவுங்க மனசு full-அ வேதனைய சுமந்து கொண்டு இருக்காங்கன்னு நல்லா தெரியுது. Ego ல எடுக்குற முடிவு தலை எழுத்தையே மாத்திடுது. Divorce paper உங்கள பிரித்தாலும் உங்கள் உண்மையான அன்பு உங்கள் கணவரை மீண்டும் உங்களுடன் சேர்ந்து வாழ வைக்கும். கடவுளை நம்புங்கள்
நேர்த்தியான பேச்சு. களங்கமில்லா உள்ளம். தெளிவான எண்ணம். நீங்கள் மீண்டும் இணைந்து வாழ இறைவன் அருளட்டும். வாழ்த்துக்கள்....உங்கள் மகனுக்காக இருவரும் இணையுங்கள்..கடவுள் அருளால் நல்லதே நடக்கும்...
அம்மா நீங்கள் தான் உண்மையான தாய், உண்மையான மனைவி, பெருமை மிக்க உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணி. உள்ளதை உள்ளபடி நேர்மையாக பேசும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்கள் கணவருடன் உள்ள பிணக்கு நீங்கி ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
என்னுடைய அனுபவமும் இது தான்...... 3 குழந்தைகள்..... 3 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தோம் .. இப்போது நாங்கள் சேர்ந்து குடும்பமாக வாழ்கிரோம்........... தேவனுக்கு நன்றி....., உங்கள் ஏக்கமும் சீக்கிரம் நிறைவேறும்..... ❤❤❤❤
@@jeevak4314இதில் என்ன வித்தியாசம் அவங்க கடவுளை தேவனாக பார்க்கிறார்கள் தேவனிடம் பிரார்த்தித்து வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து நன்றி சொல்கிறார்கள் நீங்க என்ன கடவுள்னு சொல்லுங்கன்றிங்க அவங்க பிரச்சினை தீர்ந்ததற்கு முடிந்தால் சந்தோசப்படுங்க 😊
வணக்கம் சகோதரி இந்தப் பதிவில் கமெண்டில் அனைவருமே நீங்க சேர்ந்து வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் இத்தனை உள்ளங்களும் உங்களை வாழ்த்துகிறது கண்டிப்பாக நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் கடவுள் ஆசியுடன் நீயா நானா பதிவையும் இந்த மெர்க்குரி சேனல் பதிவையும் கண்டிப்பாக அவர் பார்ப்பார் மனம் திருந்துவார் கண்டிப்பாக உங்களிடம் வந்து சேருவார் உங்களுக்காக சகோதரி நான் மனமுருகி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் முயற்சி செய்யுங்கள் திருவினையாக்கும்
என் தங்கமே, என் அங்கமெலாம் கண்ணீர்தான் தாரை தாரையாக உன் கள்ளங்கபடமில்லாத பேச்சைக் கேட்டு.. அத்தையம்மா, நாத்தனார் பெண்ணே இப்பவும் நீங்கள் முயற்சி எடுங்கள்.. தம்பி, நாங்கள் அனைவரும் நன்றி சொல்லும் வாய்ப்பை கொடு தம்பி.. வாழ்த்துகளும் ஆசிகளும் ...
அன்பு சகோதரிக்கு நீங்கள் மிக சிறப்பான வாழ்க்கை வாழ்துள்ளீர்கள்,உங்களின் பேச்சில் சிறிதளவும் ஆனவம் இல்லை , இறைவன் உங்கள்களக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் உங்களைத் தவறவிட உங்கள் கணவரையும் மண்ணியுங்கள், தங்களின் மகனிற்காக
அந்த கணவருடைய பதிலும் தேவை.கடவுள்தான் சரியான தீர்ப்பை கொடுக்க வேண்டும்.முடிந்தால் மீடியாவில் இருக்க கூடிய நபர்கள் அந்த கணவரின் மனநிலையை பேட்டி காண வேண்டும்.அவர் அப்ப எடுத்த முடிவு சரியா,தவறானு பதிலை மீடியா தெரிய படுத்தீ முடிந்தால் ஒரு குடும்பமாக சேர்த்து வையுங்கள்.திருச்சிற்றம்பலம்.சிவ சிவ.
Omg.... Uncontrolled my tears rolling when she share her love of her husband 😢.Oh god please give her second chance to live with her husband 💝.She wants to correct her mistakes Her ❤. Huge....
உங்களின் உள்ளகுமுறல் என் நெஞ்சே நொறுங்கிவிட்டது. யாருக்கும் இதுபோல் நடக்ககூடாது. இளைஞர்கள் மாற வேண்டும். Ego ஒழியவேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன் 🙏🙏
குடும்பம் என்பது பல விட்டுக்கொடுப்புக்கள், தியாகங்கள் நிறைந்தது. .. சிலவேளை, சில காரணங்களால், நாம் எடுக்கும், அவசரப்பட்ட முடிபுகள் ... வாழ்நாள் முழுவதும் வேதனைகளைத்தான் எமக்கு கொடுக்கும்! ... சகோதரி மீண்டும் கணவருடன் இணைந்து, சந்தோசமாக வாழ பிராத்தனைகள்.
அம்மா கடவுள் மீது நம்பிக்கை வைத்து விறல்மாறனைந்து என்ற திருப்புகழ் பாடல் படியுங்கள் கண்டிப்பாக நீங்களும் உங்கள் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து அடுத்த பேட்டி அளிப்பீர்கள் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
விவாகரத்து செய்தால் பெண்களுக்கு மட்டும் வலி அல்ல ஆண்களுக்கும் வலி தான் அப்படி வலி இல்லை என்று சொன்னால் அவன் குடும்பமாக அன்பு வைத்து வாழவில்லை என்று தான் அர்த்தம். இயற்கையாகவே பெண் என்பவள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தே பழகியவள் தனியாக சமூகத்தில் வாழும் பெண்களை சமூகம் மரியாதையாக நடத்துவது கிடையாது அத்துடன் பெண்களை சீண்டிப் பார்க்கும் அவமானப்படுத்தும் அதனால் தான் பெண்கள் தனியாக வாழ மிகவும் கஷ்டப்படுகிறார்கள் பெண் அன்பு கருணை உணர்ச்சி மிக்கவள் ஆனால் ஆண் அந்த அளவு கிடையாது ஆண் தனியாக வாழும் போதும் குடும்பமாக வாழும் பொழுதும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது பெரிய ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியதும் இல்லை அவர்களுக்கு பெரிதாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை ஆனால் பெண்களுக்கு உறவுகள் குடும்ப நிகழ்ச்சி மட்டுமே உலகம் அதில் மிகுந்த தாக்கத்தை உணர்வாள் இரண்டாவது ஆணுக்கு சாப்பாடு செய்யும் ஒரு சிரமம் மட்டுமே இருக்கும் ஆனால் பெண்களுக்கு குழந்தையும் பார்க்க வேண்டும் வேலைக்கும் போக வேண்டும் சுற்றுச்சூழலையும் சந்திக்க வேண்டும் தன்னுடைய உடன் வலிமையை மிஞ்சி சில வேலைகளை செய்ய வேண்டியதும் இருக்கும் அதனால் பெண்களால் தனியாக முடியாது அடங்கி ஒடுங்கி என்ன ஆனாலும் கணவனுடன் சேர்ந்து வாழுங்கள் என்று இந்த சமூகமும் பெண்ணின் மனநிலையும் சொல்லும் எத்தனை பெண் முன்னேற்றம் சுதந்திரமும் வந்தாலும் பாதிக்கப்படப்போவது பெண் தான் என்ற காலம் தற்போது உள்ளது ஒரு காலம் ஆணின் மனநிலைமை பெண்னுக்கும்வரும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் வாழ்வாள். பொறுப்பில்லாத ஆண்கள் அந்த காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்று நான் அவசரப்பட்டு விவாகரத்து வாங்கி விட்டேன் என்று நிறைய பெண்கள் கூறுகிறார்கள் ஏன் அவர்கள் தவறை மன்னித்து ஆண்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது நம் மனைவி தானே என்று? இத்தனை காலமும் பெண்கள் ஊர் சுற்றுபவன் ரவுடித்தனம் செய்பவன் குடிகாரன் கொடுமை செய்பவனையும் அடிமைப்படுத்தியவனையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் அல்லவா? அதில் ஒரு 25% பெருந்தன்மையுடன் ஆண்கள் வாழ்ந்தால் தான் என்ன? நீங்கள் ஒரு மடங்கு இறங்கிப் போனால் அவர்கள் 20 மடங்கு இறங்குவார்கள் நீங்கள் ஒரு சதவீதம் அன்பு கொடுத்தால் பல மடங்கு அன்பு கொடுப்பார்கள் 99% பெண்கள் கணவன் நமக்கு முக்கியத்துவம் அன்பும் கொடுக்கிறான் என்று தெரிந்தால் தன்மானத்தையும் விட்டுக் கொடுப்பார்கள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்தால் கூட பிரிய மாட்டார்கள்
பெண்கள் பிள்ளைக்காக வாழ்வார்கள், ஆண்கள் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கும் போது விவாகரத்து ஆன பெண் மனம் திருந்தி கணவருடன் வாழ நினைக்கும் போது ....... காலம் கடந்து விடும்...@@rajathisadhasivam
ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணை பராமரிக்கவில்லை என்றால் தவறுதான் அதைவிட குழந்தையை பொறுப்பில்லாமல் பெண்களிடமே விட்டுச் சென்று பொறுப்பை தட்டி கழித்து சொகுசாக இருக்கும் ஆண்களுக்கு கட்டாயம் தண்டனை தர வேண்டும். பெண்கள் பெற்ற குழந்தையை 99 சதவீதம் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆண்கள் மட்டும் ஏன் இந்த மாபெரும் தவறை தவறு என்று தெரிந்தும் பகிரங்கமாக இந்த தப்பை செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு தண்டனையே கிடையாதா?
என்னுடைய தனிப்பட்ட பார்வையில், கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக இவர்களுக்கு பிரிவை கொடுத்துள்ளான், எனினும் அவருடைய கணவன் விவாகரத்து செய்திருந்தாலும், அவருக்கு நல்ல பண்பும் அன்பும் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் பிரிந்த போதும் மனைவியால் விட்டுக் கொடுக்க முடியாதவராக திகழ்கிறார்.. எல்லாம் வல்ல இறைவன் திரு கருணையால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ கண்டிப்பாக இறைவன் வாய்ப்பு கொடுப்பார்... என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்..
மீண்டும் இணைந்து வாழ வேண்டும்... பிரச்சினை இல்லை.. ஆனால், இருப்பது போன்ற ஒரு பிம்பத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி, எடுக்கப்பட்ட ஒரு எதிர்மறையான முடிவு... காலம் ஒரு நாள் மாறும் என்பது போல, இவர்களுக்கான அந்த கெட்ட காலம் மாறி விட்டது.. இனி நல்லது மட்டுமே நடக்கும்... மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
அன்பு சகோதரியின் யதார்த்தமான பேச்சு உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கிறது. தம்பதிகள் உணர்ச்சி வசப்பட்டு யோசிக்காமல் எடுக்கப்படுகின்றன முடிவுகள் எந்த அளவுக்கு நம்மை கொண்டு போய் விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த சகோதரி மீண்டும் தனது அத்தை மகனான கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நமது ஆசையை எல்லாம் வல்ல இறைவன் நிறைவேற்றுவார் என்ற .நம்பிக்கையோடு காத்திருப்போம். அந்த சகோதரி எதிர்பார்க்கின்ற தனது மகனின் திருமணத்தில் அவர் எதிர்பார்க்கும் எண்ணம் ஈடேறும் வண்ணம் அவர்களின் கணவர் அவரோடு இணைந்து இருப்பார் என்று நாமும் காத்திருப்போம்.
Very nice interveiw. Both the interveiwer and Jayanthi Madam. Reply from the heart. I pray that her husband after seeing this interveiw or the show, would reunit and live a long happy married life together. Jayanrhi Madam's expections are soo simple. A person to share,a shoulder to lean on....May the unite together.
அன்பு சகோதரிக்கு உங்களது எதார்த்தமான பேச்சு எங்களை மிகவும் கவர்ந்தது நீங்களும் உங்கள் கணவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்