வீரயுக நாயகன் வேல்பாரி இரண்டாம் பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன் ஐயா, மிகவும் அருமையான நாவல். உங்கள் படைப்பு அருமையாக உள்ளது. பாரி காலத்திற்கே அழைத்துச்சென்று விட்டீர்கள். மேலும் இது போன்று பற்பல நாவல்களை தமிழுக்கு நீங்கள் தர வேண்டும் ஐயா❤❤🙏🙏🙏🙏💐💐💐
நூற்றாண்டுகள் கடந்தும் வள்ளல் பெருமான் பாரியுடனும் கபிலருடனம் பரம்பு மலையை சுற்றி வந்த அனுபவத்தை தந்த வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்..... பாசம் பற்று கொடை வீரம் கண்ணியம் இதையெல்லாம் தனித்தனியே பார்த்ததுண்டு ஆனால் அதன் மொத்த உருவமாக பாரியை கண்ட கணம் உள்ளம் பூரித்து போனேன் .... அத்தகைய மா மனிதன் வாழ்ந்த மண்ணில் வாழ்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்...
புரட்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் அயராது முயற்ச்சிக்கு நான் பாரி ஆன்ட பறம்பு மலையில் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன் பாரி ஆன்ட பறம்புமலை பாலமுருகன் நாம் தமிழர் கட்சி
வேள்பாரியின் முழு தொகுப்பையும் படித்து முடித்துவிட்டேன், மிகப்பெரிய பூரிப்பு அடைந்தது மனம்.... இத்தொகுப்பில் வேள்பாரி மூவேந்தர்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெற்றதாக எழுதியுள்ளீர்கள் ஆனால் நான் எங்கோ ஒருமுறை மூவேந்தர்களின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், அந்த சோகத்தின் காரணமாகவே அங்கவையும், சங்கவையும் "அவற்றை திங்கள் அந்நிலவில்" எனும் பாடலை பாடியதாகவும், பாரியின் மகள்களுக்கு மணமுடிக்கும் பொறுப்பை கபிலர் ஏற்று அதில் தோல்வி கண்டு மன உளைச்சலிலே அவர் மாண்டதாகவும், ஔவையாரும் முயற்ச்சித்து மணமுடிக்கமுடியவில்லை என்று படித்ததாக ஞாபகம் இதை படித்த பின்னரே வேள்பாரி படிக்க எண்ணம் மேலோங்கியது..... உண்மையில் நடந்து என்ன? வேள்பாரி வெற்றி பெற்றாரா? வீழ்த்தபட்டாரா?
புதிதாக அமையவுள்ள எங்கள் தெருவுக்கு வேள்பாரி பெயர் வைக்கத் தீர்மானித்து , பின்னர் 'வேல்'பாரியாகத் திரித்து விடுவார்கள் என்பதால்' கபிலன்' என்று வைத்தோம்
மலை கிராம மக்கள் யாரு பாரி சம காலத்தவர், அவர்களால் எப்படி சரியான தகவலை கூற முடியும். பாரி உடனே இருக்கும் மலை கிராம மக்கள் மூவேந்தார்களால் வஞ்சிக்கப்பட்டவர்களா, எதன் அடிப்படியில் இந்த நாவளை எழுதினீர்