ருத்ரஹோமம் வீட்டில் செய்வதை விட கோவிலில் செய்வதுதான் சிறந்தது .. ஏனென்றால் கோவிலில் சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே சிறந்த ருத்ர அபிஷேகம் ..ஆகுதியும் அபிஷேக பொருட்களும் கொஞ்சம் குறைந்தபட்சம் 8000 ஆகும்
ருத்ராபிஷேகம் செய்வதற்கு நிறைய செலவாகும் என்பதால் அவ்வளவாக அவ்வளவு சீக்கிரமாக நடத்த மாட்டார்கள். நமக்கு தேவை எனில் ஏதேனும் ஒரு சிவாலய சிவாச்சாரியாரிடம் அது பற்றி தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இப்போதெல்லாம் நேரம் கருதி ஒரே ஒருமுறை மட்டும் ருத்ர பாராயணம் செய்து ருத்ர ஹோமம் மட்டுமே நிறைய இடங்களில் நடத்தப் படுகின்றது சென்னை அருகில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வருடா வருடம் நடக்கும் ...
@@harimanickam9728 sir yeppa nadakkum nu sonninga na Naan poi attend pannran Nalla irunthom 2019 la irunthu romba medical issues and skin problem vanthuduchu medicine yeduthalum cure agala Family romba kasta paduthu
ருத்ர அபிஷேகம் செய்தால் எல்லா தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. அதனால் இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு செய்யலாம். ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன் எல்லாம் நம்பிக்கை தான். நாம் செய்யும் ஹோமங்களும் பூஜைகளும் குடையாக இருந்து நம்மை பாவத்திலிருந்து காக்கும்
வணக்கம் நான் பதிவில் கூறி இருக்குமாறு இது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த அபிஷேகம் ஆகும். எல்லா வகையான அபிஷேகப் பொருட்களாலும் மூலவரான சிவலிங்க மூர்த்திக்கு மந்திரபூர்வமான அபிஷேகம் செய்யும்போது நாம் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். உடல் சோர்வு மனக்கஷ்டங்கள் இருந்தால் அதையும் நீக்க வல்லது இந்த ருத்ரா அபிஷேகம். நம்மால் அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும் அதை கண்களால் பார்ப்பது கோடி புண்ணியம்
வேதத்தில் ஸ்ரீ சிவபெருமானை பற்றிய உயர்ந்த மந்திரமாக கூறப்படுவது தான் ருத்திரம் சமகம் இதைப் பாராயணம் செய்வதால் காதுகளால் கேட்பது சகல பாவங்களையும் பரமேஸ்வரர் நீக்கி விருப்பப்பட்டதை அருள்வார்
ருத்ராபிஷேகம் என்பது சிவபெருமானும் உடலும் மனமும் குளிர குளிர எல்லாவகையான அபிஷேகங்களும் வரிசையாக ஸ்ரீருத்ரம் எனப்படும் வேத மந்திரத்தைச் சொல்லி அபிஷேகம் செய்வது தான். அதில் முக்கியமாக குடம் குடமாக பாலாபிஷேகம் செய்வார்கள்
ஆமாம் ருத்ராபிஷேகம் எல்லாம் லோக ஷேம திற்காக அந்த கால மன்னர்கள் தங்கள் கஜானாவில் இருக்கும் பொருளை வாரி இறைத்து செய்தார்கள். இந்த பூஜை நடப்பதன் காரணமாக அந்தணர்களுக்கு தட்சிணை கிடைத்து அவர்களின் குடும்பம் செழித்தது ,பால் அபிஷேகத்தின் மூலமாக பசு வளர்ப்பில் செல்வம் ஆனார்கள், பூக்கள் விற்பவர்களுக்கும் தேன் எடுப்பவர்களும் நெய்வேத்தியம் செய்பவர்கள் என மக்கள் எல்லோருக்கும் வேலையும் அதற்கான தொகையும் இதன் மூலமாக கிடைத்தது. ஆனால் இந்த காலத்தில் ஓரளவு குறிப்பிட்ட செலவில் சில இடங்களில் ருத்ராபிஷேகம் நடந்து தான் வருகின்றது. எப்படிப் பார்த்தாலும் உலக மக்களின் நன்மைக்காக செய்யப்படுவது தான் இந்த ருத்ர மகா அபிஷேகம்.