வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில கிரகங்கள் சில ராசிகளில் பலமாகவும், சில ராசிகளில் பலவீனமாகவும் இருக்கும். அதற்கேற்பவும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் அக்டோபர் 17 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். துலாம் ராசியில் சூரியன் பலவீனமாக இருப்பார். அதே சமயம், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அக்டோபர் 20 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடக ராசியில் செவ்வாய் வலுவிழந்து இருப்பார். "இந்த 4 ராசிகளில் பிறந்த குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பார்களாம்...எதிர்காலத்தில் பெரிய சாதனையாளரா வருவாங்க!" இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக வலுவிழந்து உள்ளன. அதுவும் இந்த ஆண்டின் தீபாவளி நாளில் இந்நிலையில் இவ்விரு கிரகங்களும் வலுவிழந்து இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
26 окт 2024