அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. 🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? 🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது. 🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று? 🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்? 🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து? 🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன? 🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா. நன்றி!!
அம்மா நாங்கள் வீடு வாங்கி உள்ளோம் வாஸ்துபடி சரி செய்துள்ளோம் என் வீடு வடக்கு பார்த்த வாசல் வீட்டில் விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் எந்த திசை நோக்கி விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும். எனக்கு உதவுங்கள் . வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் போது எந்தெந்த ஹோமம் செய்தாள் வாழ்க்கை சிறப்பாக அமையும். எனக்கு பதில் அனுப்புங்கள் அம்மா