இனி இவ்வுலகம் உய்யும்! மாதம் மும்மாரி பெய்து வயலுயர்ந்து மனவளமும் எங்கும் ஆனந்தம் பெற ஶ்ரீ கோதண்டராமர் பேரருள் செய்வார்! ஶ்ரீ ராமஜெயம்! (எங்கள் விட்ட குறை தொட்ட குறை ... நல்ல தரிசனம் கிட்டியது!)❤
அற்புதமான காணொளி. தேவன்குடி பற்றியும் கோதண்டராமர் பற்றியும் அறிந்து கொண்டது பாக்யம்🙏 நிறையத் தகவல்கள், அற்புதங்கள் என்று அனைத்தையும் இந்தக் காணொளியில் காண முடிந்தது. காணொளியைத் தொகுத்து வழங்கிய விதம் மிகச் சிறப்பாக ரசித்துப் பார்க்கும் விதமாக இருக்கிறது. கோவிலின் அழகை ரசித்துக் கொண்டே உங்கள் ஒலிக் குறிப்பைக் கேட்டது அழகோ அழகான அனுபவம்❤
Rama Rama Sri Kothanda Rama. A well articulated Video. Thanks and prayers to Sri KothandaRama for the welfare of the author and the associated divine contacts. Namaskaram
ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியை பார்த்தவுடன் பேட்டி அருமையாக கொடுக்கின்ற எங்களுடைய ரகசிய விடயத்தை மறந்து திருவண்ணாமலையை மறைத்து சொன்னதற்கு நன்றி ஆனால் நன்றி நான் நன்றியை மறக்கும் நீங்களும் ஒரு நல்ல மனிதராக நாங்கள் உங்களை நினைக்கின்றோம்
தேவங்குடி ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தை முதன் முதலில் வெளிக்கொண்டு இந்த உலகத்திற்கு தெரியப்படுத்தியது இது எத்தனை முதல் எத்தனை முறை நீங்கள் இந்த கமெண்ட்ஸ் ல இருந்து எடுத்தாலும் இது மாறாதது இதைப் பற்றி இன்னும் பல கோடி புராண விளக்கங்கள் இருக்கின்றது இந்த பெண்மணியை கேட்டு தெரிந்து கொள்ளவும் ஏனென்றால் விளம்பரத்திற்காக ரகசியம் வரவில்லை வெளிய ஊடகத்திற்கு ஸ்ரீ ராமரை பற்றி சொல்ல வேண்டும் தெரிய வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்துடன் செய்யப்படுகின்ற தவிர இதைப்பற்றி ரகசிய விசயத்தை மறந்து விட்டீர்கள் என்பது நன்றாக தெரிந்தது இதுதான் மக்களின் மனம்
South indias அயோத்தி தேவங்குடி ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி ஸ்தல வரலாறு தேவர்கள் ரிஷிகள் வந்து வணங்கிய தமிழகத்தின் அயோத்தி ஸ்ரீ தசரத சக்கரவர்த்தி உரிய காலத்தில் ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக யோசித்து தன் குல குருவாம் ஸ்ரீ வசிஷ்டமாமுனிவர் ஸ்ரீ விசுவாமித்திரர் ஸ்ரீ ஜனகர் மற்றும் பெரியோர்களின் ஆலோசனையின் பெயரில் பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நாள் குறிக்கப்பட்டது. கைகேயிக்கு ஸ்ரீ தசரத சக்கரவர்த்தி கொடுத்த இரண்டு வாக்குறுதியின் பேரில் பட்டாபிஷேகம் நடைபெறாமல் ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று அப்போது வந்திருந்த தேவர்கள் இந்த ஊரில் தங்கி இருந்ததால் இந்த ஊர் தேவங்குடி என்றும் ரிஷிகள் தங்கி இருந்த ஊர் ரிசியூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ வசிஸ்டர் பட்டாபிஷேகத்திற்கு குறித்த நாள் சிறிதளவும் பிசகாமல் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நாளில் ஸ்ரீ ராமபிரானுக்கு சகல தேவாதி தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் தக்ஷின உப பட்டாபிஷேகம் துளசி செடிகளின் மத்தியில் பாத பூஜையோடு ஆற்றப்பட்டது. ஸ்ரீ வசிஷ்டர் என் மனதில் பல காலங்களாக இருந்த ஐயப்பாட்டினை ஸ்ரீ ராமபிரான் கிளறிய இடமாக உள்ளதால் இந்த இந்த ஊருக்கு அருகில் கிளரியம் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீராமநவமி, புனர்பூசம் நட்சத்திரம்,ஏகாதசி புதன் மற்றும் சனிக்கிழமைகளில், அங்கப் பிரதட்சணம் செய்வது, நல்லெண்ணையில் விளக்கேற்றுவது, துளசி தீர்த்தத்துடன் திருமஞ்சனம் செய்வது ஆலயத்தில் விளக்கேற்றியும், முழு முந்திரி கலந்த புளியோதரையுடன் விநியோகம் செய்வதால் இழந்த செல்வத்தை மீண்டும் பெற, காலதாமதம், பண விரயம், பித்ரு தோஷம் நீங்க மன சாந்தி, குல விருத்தி அடைய, வாழ்க்கையில் நல்வழி கிடைக்க இந்த ஸ்தலத்திற்கு வந்து வேண்டினால் வேண்டியது கிடைக்கும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும். அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செலுத்தலாம்