வாழ்க்கையில் துன்பத்தின் கடைசி விழும்பு வரை சென்றாலும், நம் தெய்வ பக்தி கடவுள் நம்பிக்கை காக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கையில் கரை சேர்த்துவிடலாம் என்ற உணர்வை ஊட்டும் இந்த அருமையான பாடல் 🙏🙏
"பல் உயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்தது எல்லாம் உந்தன் செயலல்லவோ "அட அட என்ன ஒரு வரி... தமிழே என் உயிரே.💖.பரமனுக்கே சக்தி தரும் அம்பாளே பட்டரின் தமிழ் கேட்டு நிலவாக ஓடி வந்தாள்.. அப்பேர்பட்ட பெருமை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி 💖👌இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்த்து போகிறேன்.. பாடல் வரி அழகா, பாடல் இசை அழகா, பாடியவர் குரல் அழகா, பாடலை நடித்து காட்டிய விதம் அழகா,அம்பாள் அபிராமி அழகா பாடல் காட்சி உருவாக்கம் அழகா 🙏🙏😭😭😭எது அழகு என்று பிரித்து பார்க்க முடியவில்லை ஆனால் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் தமிழ் என்றால் அழகு 💖😍👌🙏👌🙏
கம்பீரமான குரலில் தான் நடிகர்களுக்கும் உணர்வு பொங்க நடிக்க முடிகின்றது என்று சொல்வதற்கு இது போன்று பல பாடல்கள் உதாரணம் டி. எம். எஸ். ஐயாவின் தெய்வக்குரல் அவனியாபுரம் சுப்பிரமணியன்
2nr egret emk h2 never rt3 duff m2n2 never 32r2mr ft rn2 ft tn2f geet RT k fly funny the E ghent night hut Jr the 3m RT RT vmrþn RT e.t w3þt rtf r RT RT raja jh gtfl9o9oo972c238shhsj.isknwsoissb8w2bbksk83mn8o2ii.
40 வருடத்திற்கு முன்பாக நான் பார்த்த படம் அற்புதமாக ஆதிபராசக்தியை நேரில் பார்த்தது போல் எஸ்பி சுப்பையா அவர்கள் பாடும்பொழுது ஆதிபராசக்தி காட்சி கொடுப்பது அனைவரையும் பிரம்மவிக்க வைக்கும் காட்சி
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உணா்ச்சி பெருக்கால் என் கண்களில் கண்ணீர் வருகிறது உடல் சிலிா்க்கின்றது. பாடல் எழுதியது, பாடிய விதம், இசை, நடித்த விதம், மற்றும் பாடல் எடுத்த விதம் அப்பப்பா செல்ல வார்த்தைகள் இல்லை தமிழ்க்கு பெருமை, தமிழா்க்கு பெருமை நம் முன்னோா்களின் அருமை இப்போதாவது நாம் உணா்ந்தால் சாி. ராதா கிருஷ்ணன், தேனி.
3:50 I looked your bright face in my heart, Supreme Goddess Adhiparashakthi ♥️💕 ௐ ஆதிபராசக்தி ௐ, ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி பராசக்தி, ஓம் ஶ்ரீ மாத்ரே நம:
அந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றிருக்கும் இந்த பாடலும் டி.எம்.எஸ்.ஐயா அவர்களின் குரலில் அம்மனை போற்றி வழிபடும் பக்தி மயக்கும் காவிய பாடல்
சத்தியமாக ஒத்துக்கொள்கிறேன் கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞன். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை நான்கு வரிகளை தவிர மற்ற அனைத்து வரிகளும் இலக்கியத்தில் உள்ள பாடல்வரிகள்.தன் வாழ்வில் 90 சதவீத பாடலை சொந்தமாக கண்ணதசன் எழுதியதில்லை. திருவள்ளுவர், கம்பராமாயணம், பகவத் கீதை இதிலிருந்துதான் எளிமைப்படுத்தி எழுதுவார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூன்றாவது வகுப்பு வரை மட்டும்தான் படித்தவர். பகல் முழுவதும் பாடல் எழுதுவதும், கோர்ட் கேஸ் என்று அலைவது மட்டும்தான் இவர் வேலை. அதே நேரம் இரவு முழுவதும் குடிப்பார் தூங்குவார். இதை எல்லாம் இவர் படிப்பதற்கு ஏது நேரம் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கேள்வி ஞானமா என்றும் தெரியவில்லை. இதற்கு தான் பிறவிக் கவிஞன் என்று பெயர்.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே The above lines by Abirami Pattar Below lines By Kannadasan சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி (2) நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ (2) நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ சொல்லடி அபிராமி வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ (2) வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ The following Lines from Kutrala Kuravanchi செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட மலர் பங்கயமே Below lines by Kavingar Kannadasan உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
அம்மா ஸ்ரீ அபிராமி தன் கருணை காட்டி இந்த அனைத்து உலக அளவில் வசிக்கும் 750 கோடி மக்களுக்கும் ஆசீர்வாதம் செய்கின்றாள். அனைவரும் அம்பாள் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம்.
இந்த பாடல் கேட்கும் பொழுது மனதைவசியபடத்துகிறது அது பக்தியா பரவசமாக இல்லை பாடலின் இசையா இல்லை பாடலின் கவிதையா பாடியவர்குரலா எல்லாம்நமக்குள்உள்ள இறைசக்தியின்எழுச்சியே
அன்னை பராசக்தி போற்றி ஆதிசக்தி போற்றி அருளும்தெய்வமேபோற்றி அற்புதமான பாடல் அன்னைக்குபிடித்தபாடல் கேட்டாலே உள்ளம் உருகும் பாடல் அன்னையே போற்றி சேலம்பூபதி
இந்த பாடல் வரிகள் கேட்கும் போது என் மணம் பூரிப்பு அடைகிறது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அழகாக புரிய வைக்க நடந்த நிகழ்வாகும் சக்தி பராசக்தி தாயே சரணம் அம்மா
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மெய்சிலிக்கிறது எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு நிகர் எதுவுமில்லை காலத்தால் அழியாத பாடல்களில் இந்த பாடல் முதலிடம் 😭😭😂😂🙏🙏
ஆண் : மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே ஆண் : சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி { வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி } (2) ஆண் : நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி ஆண் : { பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ } (2) ஆண் : நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ ஆண் : சொல்லடி அபிராமி ஆண் : { வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ } (2) ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே ஆண் : பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ ஆண் : செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட ஆண் : மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ ஆண் : காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் ஆண் : வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் ஆண் : அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஆண் : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
பாடும் குரலை புகழ்வதா. நடிகரின் நடிப்பை புகழ்வதா. காட்சிகள் எடுத்து இருக்கும் படத்தின் டைரக்டரை புகழ்வதா. கேமரா டைரக்டரை புகழ்வதா எல்லாருக்கும் என் வணக்கம் நன்றிகள் 👌👌💐💐
நம் எல்லோரையும் மெய் மறக்க வைக்கும், மெய் சிலிர்க்க வைக்கும், கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாய் பெருக செய்யும் சக்தி படைத்த அந்த அற்புதமான இசையை அமைந்த லெஜண்ட் கே.வி.மகாதேவன் அவர்களின் இசைஞானத்தை புகழ சொற்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். என்ன சொல்கறீர்கள் நண்பர்களே?
Sadly nowadays we don't get such beautiful songs neither do we get such nice Indian movies. Today most Indian cinema industry has lost its creativity in the chase for money, power, greed and lust
#கவியரசர் சொல்லடி அபிராமி🙏🙏🙏 கூப்பிடுங்கள் கண்ணதாசனை...... இது நடந்தது ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது. 'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல். இந்தக் காட்சிக்கு "அபிராமி அந்தாதி" பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்... ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை. "கூப்பிடுங்கள் கண்ணதாசனை!" வந்தார் கண்ணதாசன். காட்சியை விளக்கினார் இயக்குனர்... கண்ணதாசன் தயாரானார் : "முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்." கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார். "மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே." இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்... கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்: "சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?" வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர்... கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது. பாடலின் இறுதி வரிகளாக, என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை... மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன். அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள். அவள் துள்ளிக் குதித்து பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன். ஆம். "திருக்குற்றாலக் குறவஞ்சி" பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது... (தென்காசியை அடுத்த மேலகரத்தில் 18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் திருக்குற்றாலக் குறவஞ்சி) அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும். இதோ , அந்தப் பகுதி : வசந்தவல்லி பந்தடித்தல் செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம் என்றாட - இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட - மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே. இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள். இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்... "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ." இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்... நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது. எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது... கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது🙏🙏🙏
மணியே... மணியின் ஒலியே.... ஒளிரும் அணிகுனைந்த வணியே.. அணியும் அணிக்கழகே.... அணுகாதவர்க்கு பிணியே.... பிணிக்கு மருந்தே... அமரர் பெரும் விருந்தே... பணியேன் ஒருவரை... நின் பத்ம பாதம்..பணிந்தபின்னே... சொல்லடி அபிராமி... சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... 🎵music🎵 நில்லடி முன்னாலே... நில்லடி முன்னாலே... முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே... சொல்லடி அபிராமி... பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... இந்த சோதனை எனக்கல்ல.. உனக்கல்லவோ..... சொல்லடி அபிராமி... வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வானம் இடிபடவும்... பூமி பொடிபடவும்.. நடுவில் நின்றாடும் வடிவழகே.... கொடிகளாட.. குடிகளாட.. குடிபல எழுந்தாடவரும் கலையழகே... பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் மேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... 🎵music🎵 செங்கையில் வண்டு கலிங்கலில் நின்று ஜெயம்ஜெயமென்றாட... இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட... இரு கொங்கை கொடும்பகை வெந்தனமென்று குழைந்து குழைந்தாட... மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை உன் நிலவு எழுந்தாட... விரைந்து வாராயோ... எழுந்து வாராயோ... கனிந்து வாராயோ... காளி பயங்கரி சூளி மகாங்கினி... கண்களில் தெரிகின்றாள்... கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தோரு காட்சியும் தருகின்றாள்... வாழிய மகன் இவன் வாழிய என்றோரு வாழ்த்தும் சொல்கின்றாள்.. வானகம் வைய்யகம் எங்கனுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள்.. எழில் வடிவாய் தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... ஓம் சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... 🙏நன்றி🙏
@@chinnasamyg383 முதலில் வரும் 'மணியே மணியின் ஒலியே' மட்டும் தான் அபிராமி அந்தாதி யிலிருந்து பாடலில் கையாள பட்டுள்ளது, மீதமெல்லாம், கவிஞர் கண்ணதாசன் கைவண்ணம். கற்பனை திறன், அவருக்கு இணை அவர்தான்
@@Arunprasad1129 அபிராமி அந்தாதியென்றாலும் அதை எளிய நடையில் மக்களுக்கு கொடுத்தவர் கவிச்சக்கரவர்த்தி!! அபிராமி அந்தாதியை படிக்கக்கூடதெரியாதவனெல்லாம் இன்று கவிஞன்
நான் இந்த பாடலையும் படத்தையும் நிறைய நேரம் பார்த்து மகிழ்ந்தேன் இந்த பாடல் கேட்க வாசிக்க மெய்சிலிர்க்க நேரிடும் நேரில் அம்மன் தரிசனம் காண்பது போல் ஒரு உணர்வு இருக்கும்
What a song 👌👌👌👏👏👏What an acting by our the great versatile actor Subbayya, powerful singing by our TMS and good lyrics and picturization. Kalathal aziyatha song. God bless them all. Got goose pimples listening to this devotional song 😱😱😱
No one can sing like Tms ayya. What a beautiful tamil pronunciation n he was recognized properly but he sat permanently in thd heart of people of tamilnadu. Without tms n p.susheelamma sings , there is no sunrise for Tamilnadu.