நானும் கீரை, செடி அவரை ,பாகற்காய் , வெண்டை , கத்திரி ,மிளகாய் , தக்காளி எல்லாம் விதைச்சு ஒரு மாசம் ஆகுது இப்ப எல்லா செடியும் முளைச்சு அழகா வந்திருக்கு ...உங்க அறுவடை வீடியோ பாத்து தான் ஆரம்பிச்சேன் ..
இலை சுருட்டல் வந்தால் இலைகள் மேல் மஞ்சள் தூவவும் மஞ்சள் இலை மேல் இல்லையென்றால் மீண்டும் தூவவவும் இலை சுருட்டல் முடிந்த பிறகு தூவ வேண்டாம். (it will work out)
அடிப்புறத்தில் ஓட்டை போட்டு வாட்டர் கேனில் உள்புறத்தில் ஓட்டையின் மேல் தேங்காய் மூடியை உடைத்து அதை கவிழ்த்து வையுங்கள் ஏனென்றால் மண் போட்டால் ஓட்டையைஅடைக்காமல் இருக்கும்
மண் கலவை வீடியோ மற்றும் பூச்சிவிரட்டி வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist மாடித்தோட்டம் எப்படி அமைப்பது என்று கூடிய விரைவில் வீடியோ போடுகின்றேன்
ஒவ்வொரு செடியை பொருத்தம் நாம் வளர்க்கும் பைகளின் அளவை பொருத்தம் மாறுபடும் கத்திரி மிளகாய் தக்காளி இவை எல்லாம் 12×12 அளவு உள்ள பையில் ஒன்று தான் வைக்க வேண்டும் கொடி வகைகளுக்கு 15×15 எடுத்துக்கொள்ளுங்கள் கொடிகளும் ஒரு பையில் ஒன்று தான் வைக்க வேண்டும்
வெள்ளரிக்காய் செடியில் முதலில் ஆண் பூக்கள் தான் நிறைய பூக்கும் பிறகு பெண் பூக்கள் வரும்.. கத்தரிக்காய் செடியில் பூ உதிர்வு இருந்தால் தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் கொடுங்கள் உரம் கொடுங்கள்
சத்துக்கள் குறைபாட்டினால் செடி வளர்ச்சி இல்லாமல் இருந்து இருக்கலாம் அதனால் சின்ன செடியிலேயே காய்கள் வந்து இருக்கும் வாரம் ஒரு முறை பயிர் ஊக்கிகள் கொடுங்கள் மற்றும் உரங்கள் கொடுங்கள்
வெயில் காலங்களில் குளிர்ச்சியான இடத்தை தேடி எறும்புகள் வரும் நாம் வளர்க்கும் செடியின் பைகளின் அடியில் ஈரப்பதம் இருப்பதால் அடிப்புறத்தில் எறும்புகள் வரும் செடியில் ஏதாவது பூச்சித்தாக்குதல் இருந்தால் கூட எறும்புகள் வரும் செடியில் வெள்ளை பூச்சி தாக்குதல் இருந்தால் எறும்புகள் அதிகமாக வரும்