பூச்சிகளின் பின்னனி இசை, ரம்மியமான காட்சி அருமை. அரசியல்வாதிகள், மெத்த பணக்காரர்கள் கண்களில் இவை படக்கூடாது. இங்கேயும் cottage, farm house போன்றவை கட்டி இயற்கையை அழிப்பவர்கள். வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிபவர்கள் மத்தியில், சர்வசாதாரணமாக பெரியவர் நடக்கிறார்
தம்பி , சூப்பர் பா. படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் நானும் யூடியூப் நடத்துறேன்னு டார்ச்சர் பண்றவனுங்க மத்தியில் இப்படி இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி பா. சிரமம் பாராமல் அவ்வளவு தூரம் சென்று பதிவிட்டதற்கு நன்றி. உன் பணி தொடர வாழ்த்துக்கள்.
இன்னைக்கு தான் முதல் முறையா உங்க வீடியோ பார்க்கறேன்.. இரண்டாவது வீடியோ பார்த்து முடிச்சதும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.. உங்க கூடவே நாங்களும் பயணம் பண்ணின மாதிரி இருந்தது வீடியோ..அருமை💐💐💐
என்ன ஒரு சுதந்திரமான வாழ்க்கை இப்படி வாழனும் என்று ஆசை பசுமையான உலகம் நோய் நொடிகள் இல்லாம ஆரோக்கியம் பொங்க வாழலாம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா 👍🏻💐👌💖
இயற்கை🌿🍃 வளங்களை பயன்படுத்தி எங்கள் அனைவருக்கும் செய்திகளாக வீடியோ வெளியிட்டதற்காக நன்றி அண்ணா. பழங்குடியினராக இ௫ந்தாலும் நன்றாகவே அந்த தாத்தா மிகவும் மரியாதை கொடுத்து பேசுகிறார். மிகச்சிறப்பு உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா.
கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வோர் கருஞ்சேம்பின் குருத்தை எடுத்துக் கூட்டு வைப்பது தெரியும். நானும் சாப்பிட்டுள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இவர் பால்சேம்புக்குருத்து எடுத்து வைக்கிறார். சேம்பு என்றாலே சத்து மிகுந்தது. கிழங்கு கூட அவ்வளவு நல்லது. பாராட்டுகள்.
இந்த கீரையை புளிச்ச கீரையுடன் கலந்து வேக வைத்து கடையலாம். வேக வைத்த நீர் வடிக்க தேவையில்லை கலந்து செய்யும் போது. இரும்பு சத்து நிறைந்தது. சளி இருமலுக்கு நல்லது.😋
இதை சேமந்தண்டு என்ற பெயரில் பிராமண சமுதாயத்தில் ஒரு பிரிவினர் ஸ்பெஷல் உணவாக அமாவாசை மற்றும் சில விஷேட பூசையில் விரும்பி இன்றும் சாப்பிட்டு கொண்டுள்ளனர்