Hi Monish, This is Nagaraj swami using a devotees' mobile. Please don't be sorry. I liked your question. That's the reason I kept it first. FYI, this is the first time I'm replying to common people. Thank you. Om namasivaya namaha. Ippadikku, NAGARAJ swamigal, Thiruvanamalai.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். எல்லாம் மாயை என்று தெரிந்துக் கொண்டீர்கள். பெற்றோர்களை விட்டு பிரிந்து வாழ்வதற்காக பதிலாக. பற்றற்று வாழ்ந்தால் சகஜமான வாழக்கையையும், துறவர வாழ்க்கையையும் ஒரே சமயத்தில் வாழலாம் அல்லவா. இதனால் பெற்றோர்கள் வேதனை கொள்ள மாட்டார்களே. சிவாயநம🙏
நாம் இயங்குவதும் நம்மை இயக்குவதும் இறைவன்,நம் சிந்தையில் நின்று நம்மை செயல்படுத்துபவனும் இறைவன்,நான்,எனது,என் செயல் என்பது பாவபுண்ணியத்தை தரும்.எல்லாம் அவன் செயல் என்பவனுக்கு அவனே துணை ஓம் நமச்சிவாய!
நாம் இயங்குவதும் நம்மை இயக்குவதும் இறைவன்,நம் சிந்தையில் நின்று நம்மை செயல்படுத்துபவனும் இறைவன்,நான்,எனது,என் செயல் என்பது பாவபுண்ணியத்தை தரும்.எல்லாம் அவன் செயல் என்பவனுக்கு அவனே துணை
முழுமையான துறவு நிலை என்பது L- நான் எனது என்கிற கருத்துரு நமது ஆன்மாவை ஒட்டி எழுவாய் அல்ல!நமது சரீரத்தை ஒட்டி எழுபவையே அது!எனது ஆன்மாவின் பெயர் அல்ல சுந்தரம் என்பது!அவருடைய ஆன்மாவின் பெயர் அல்ல நாகராஜ் என்பது உங்களுடைய ஆன்மாவின் பெயரல்ல மோனிஷ் என்பது இவையாவும் நமது சரீரத்திற்குரியவையே!ஆன்மீகத்தின் உயர்வு நிலையினை அடைய நாம் செய்ய வேண்டியது நமது சரிரீரம் சார்ந்த வாழ்வையும் சரீரம் சார்ந்த அறிவு மற்றும் உணர்வு நிலைகளையும் சரீரம் சார்ந்த நான் என்கிற அகங்காரத்தையுமே தெளிவாக அறிந்து துறப்பதே!இந்த சரீரம் என்பது இந்த ஆன்மாவுக்கு கிடைத்துள்ள கொடை ! நாம் சரீரம் சார்ந்த வாழ்வு முறையை துறந்து நமது ஆன்மாவிற்கான வாழ்வு முறையை கைக்கொள்வதாகும்!ஆன்மாவின் வாழ்க்கையை கைக்கொள்ளும் பொழுது நமக்கும் ஏனைய உயிர்களுக்குமான பேதம் தவிர்க்கப்படும்!எல்லா உயிர்களும் இறைவனின் தேகத்தில் வாழும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அவ்வளவே!அனைத்துயிர்களுமே சமம்!ஏனைய உயிர்களும் இறைவனின் தேக உயிர்களே!நாம் துறக்கவேண்டியது நான் எனும் நமது அகங்காரத்தை மட்டுமே!
*இல்லற கடமையை ஆன்மீக சாதனையும் செய்!!* *இல்லறம் இல்லேல் துறவறம் இல்* - ஸ்ரீ திருமழிசை யாழ்வார் *இல்லறமல்லது நல்லறமன்று* - இது ஔவையார் வாக்கு! அமுதவாக்கு! ஞானிகள் சொன்ன இல்லறம் எது தெரியுமா? இல்-இல்லம்-வீடு. நம் இல்லம் நாம் குடியிருக்கும் வீடு அல்ல! *நம் இல்லம் நம் உயிர் குடியிருக்கும்* *நம் உடல்தான்!!* நம் உடலாகிய வீட்டில் உறையும் உயிர் விட்டுப் பிரியாமல் இருக்க, *உயிர் என்றும் உடலில் நிலைக்கச் செய்யும் 👁️ தவமே 👁️நல்லறமாகும்!* இதுவே *இல்லறம்!* இந்த இல்லறம் தான் வேண்டும். இல்லற வாழ்க்கை சரியில்லை என துறவறம் செல்பவன் உருப்படவே மாட்டான்! இல்லறத்தை உலக வாழ்வை துறந்து துறவறம், பற்றற்ற நிலை ஏற்பட்டாலே தன் இல் சீராக அறவாழ்க்கை மேற்கொள்ள முடியும். உங்கள் ஒருவரையும் குடும்பத்தை சொத்து சுகத்தினை விட்டுவிட்டு ஓடிபோங்கள் என்று எந்த ஒரு ஞானியும் கூறவில்லை! *இல்லற கடமையை* *செவ்வனே செய்துகொண்டே ஆன்மீக சாதனையும் செய்பவனே* *இறைபணி செய்பவனே மிகவும் உத்தமன்! ஞானம் பெறுவான்!* இறைவனை அடைய குடும்பம் தடை அல்ல! உலக கடமைகளை - கர்மாவை சரியாக செய்! *கண்ணனிடம் ஒப்படைத்து விடு*! செய்ய வேண்டியதை செய்! மிச்சமெல்லாம் கண்ணன் பார்த்துகொள்வான் ! *கண்ணனை சரண் அடைந்து விடு!*👀 *"தாமரை இலை தண்ணீர் போல' இரு! சும்மா இரு!* வீட்டையும் பார் உன் கூட்டையும் பார்! *உன்னில் இருக்கும் ஜோதியே நீ!!?* இப்படிப்பட்ட இல்லறமே வேண்டும்! இதுவே நல்லறம்! துறவறம் *மனதிலிருந்து உலக பற்றை துறக்க வேண்டும்!* சரியாக புரிந்து கொள்ளுங்கள்! தப்பு தப்பாக அர்த்தம் பண்ணி தவறிப்போகாதீர்கள்! *அரிதான மானிட பிறவி!* மேலான ரிஷிகளும் குடும்பத்துடன் தான் வாழ்ந்தனர்! இந்து புராணமே குடும்பமாக வாழ்வது சிறப்பு என சொல்லப்படுகிறது! இவ்வுலக வாழ்வே, சமுதாயத்தோடு இணைந்த வாழ்வே சிறப்பாம்! *"ஊரோடு ஒத்து வாழ்"* என்றார் அகத்திய மகரிஷி! ஸ்ரீரங்கத்திலே அனந்த சயனமாக சூட்சுமாக நின்று அருளும் அகஸ்தியர்! *உலக குருவின் திருவடிகளே சரணம்* *ஞானசற்குருவின் திருவடிகளே சரணம்*
நான் என்ற அகந்தை இல்லாமல் நாம் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் காட்டில் போய் தான் வசிக்க வேண்டும் அல்லது இமயமலைக்கு போய் தவம் செய்யவேண்டும் அப்படி எந்த கட்டாயம் இல்லை நம் வாழ்வில் கட்டாயம் என்பது எப்போதும் போகிறதோ அப்போதே நாம் ஞானி தான் இப்போதும் சொல்கிறேன் ஆதார் அட்டையை எரிப்பது படித்த பட்டங்களை எரிப்பது சொந்த வீட்டை ஒரு ரூபாய்க்கு விற்பது இது எதுவுமே தேவையில்லை இதெல்லாம் நாடகமாக தான் தெரிகிறது நாம் எந்த நிலையில் இருந்தாலும் பற்றற்று இருப்பது தான் துறவு நீங்கள் காட்டுக்கு போயும் கூட இன்னும் பேராசிரியராக தான் இருக்கிறீர்கள் நீங்கள் காட்டில் போய் நடத்தும் பாடத்தை பேராசிரியராகவே நடத்தியிருக்கலாம் இந்த சிறுவனுக்கு தெரிந்ததை சொல்கிறேன் சும்மா இரு சொல் அற இது முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு உபதேசித்தது
இங்கிருக்கும் எதுவுமே உனதில்லை என்கிற பொழுது எதை நீ துறக்கிறாய்?நாம் பிறப்பதற்கு முன்பே இவை எல்லாம் இங்கிருந்து!நாம் மரணித்த பிறகும் இவை எல்லாம் இங்கிருக்கும் என்பது உண்மையே!நாம் துறப்பது இங்கிருக்கும் பொருட்களை அல்ல!நாம் துறக்க வேண்டியது இன்ன இன்ன பொருட்கள்கள் என்னுடையது!இவை எனக்கு மட்டுமே சொந்தம் என்கிற நமது பாவனையை துறப்பதுதான் துறவு!நிலையற்ற வாழ்வை உடைய மனிதன் நிலையான பொருட்களை எவ்விதம் உரிமை கொண்டாட முடியும்?நாம் நம்மை உருவாக்கிக்கொள்ளவில்லை!நம்மை உருவாக்கியது இந்த இயற்கையே!நான் என்கிற உணர்வு தன்மையை நமக்கு அளித்ததும் இந்த இயற்கையே!இந்த நான் என்கிற தனித்தன்மையை நமக்கு வழங்க காரணம் நாம் நமது சுற்றுப்புற சூழலிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவே!தவிரவும் இப்பிரபஞ்சத்தில் மாயை என்று எதுவும் இல்லை!இந்த மாயையை உருவாக்கிக்கொள்வதும் நமது மனமே!மனதினில் நிகழ்வதுதான் மாயை!உயிர் அற்ற பொருட்கள் அக்ற்றினை மூலக்கூறுகளால் அமைந்தவை உயிரானது உயர்திணை மூலக்கூறுகளால் அமைந்தவை!எல்லா மூலக்கூறுகளும் அயனி அணுக்களால் கூடி அமைந்தவையே!நாம் துறக்கவேண்டியது நமது மனா மாயையைத்தான்!
உங்க பாணியில பார்த்தா துறப்பதை ஆரம்பத்தில் மறுக்கிறீர்கள் முடிக்கும் பொழுது அதையே ஏற்கிறீர்கள் நான் மற்றும் இங்கு இருப்பவைகள் நிலையானவை என்ற மனமாயை புரிந்து கொள்வதே ஆன்மீகம் எதுவும் நிலையானது அல்ல கானல் நீரைப் போன்றவை இருப்பதைப் போல் காட்டுகிறது ஆனால் உண்மையில் இல்லை என்பதை அறிந்து புரிந்து உணர்ந்து கொள்வதே ஆன்மீகம்
You are very true.need more from you sami.dont care what people say,I accepted you as a Sami and have a little more time to reach the supreme.for me, you are the only one going to reach there first.keep on moving Sami.
உங்களுடைய ஒரிரு பதிவுகளை கேட்டிருக்கிறேன்... என் அனுபவங்களின் புரிதல்களும்...உங்கள் அனுபவ கருத்துக்களும் தன்மையில் ஒரே பாதையில் நிற்பதை உணர்கிறேன்... என்னிடம் ஏராளமான இறை அனுபவங்கள் உள்ளது...அதன் கருத்து செழுமைக்கும்..நேர்பயண ஒழுங்கிற்கும் உங்களின் கருத்துக்களும் கூட இறைவனால் எனக்கு காட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறேன்.பிரபஞ்சம் உடனிருந்தது செம்மைப்படுத்துகிறது என்று பல சந்தர்பங்களில் உணர்ந்து வருகிறேன்...நீங்கள் துறவறத்தில் நிற்கிறீர்கள்..நான் குடும்ப வாழ்க்கையில் இருக்கிறேன்... தற்போது அறுபது வயதை கடந்தாலும் கடந்த இருபது வருடங்களாக...பல கால சூழ்நிலைகளில் இறைவன் உடன் பயணிப்பதை உணர்ந்து வருகிறேன்..
🌿🇮🇳அன்னை ஆதிபராசக்தி என் வாழ்வில் கடைபிடிக் சொல்லி உணர்த்தியதை ,மற்றவர்கள் பார்வையில் முட்டாள் தனமாக தெரிந்தது... ஆனால் உங்கள் அனுபவம் என் வாழ்விலும் தானாகவே நடக்கிறது,ஆனால் நீங்கள் தவத்தில் பெற்ற அனுபவத்தை நான் வீட்டில் அடைந்து இருக்கிறேன்..நீங்கள் 100% உண்மையான துறவி ...ஞானி,நாளையே பரம்பொருள்...
ஐயா நான் யார் என்பதை அறிவது ஆன்மீகம் என்கிறார்கள் ஒரு சப்ஜெக்ட் ஒரு ஆப்ஜெக்ட் ஐ ஆய்வு செய்யலாம் ஒரு சப்ஜெக்ட் தன்னைத்தானே எப்படி ஆய்வு செய்து கொள்ள முடியும் என்று கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்
உங்கள் கைகளில் உள்ள ரேகையை பாருங்கள் கட்டை விரல் ரேகை மட்டும் தனியாக இருக்கும்'மற்ற விரல் ரேகைகள் ஒரு வட்டத்திற்குள் முடியும்!கட்டை விரல் ரேகை மட்டும் பின் நோக்கி செல்லும் அது தான் இறைவனை நோக்கி கூட்டி செல்லும் 'சுண்டு விரல் ஆணவம் 'மோதிர விரல் கண்மம்'நடு விரல் மாயை, ஆட்காட்டி விரல் அகங்காரம், இதனால் தான் இறைவன் தட்சாணாமூர்த்தியாக ஆணவம்,கண்மம், மாயையை, துறந்துவிட்டு இதற்கெல்லாம் காரணமாக இருக்கிற அகங்காரத்தை என்னிடம் சேர்த்து விடு என்று சொல்கிறார் போலும் .
வார்த்தைக்கு வார்த்தை தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறார். தான் எங்கோ ஆகாயத்தில் இருப்பது போல கற்பனை செய்து கொள்கிறார். இல்லறத்திற்கு சமமான ஒன்றுதான் துறவறம் ஒரு துறவிக்கு சமபாவம் தேவையே தவிர தன் பாதையே உயர்ந்து என்ற மமதை தேவையில்லை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். திருக்குறள்
சாமி யார் என்று சொல்பவன் சாமியார், தெரியாததை தேடி கண்டு கொள்பவன் துறவி, இழப்பதற்கு தயார் ஆணவன் தேடி சென்றதை சித்தி பெற்றவன் சித்தன், இவை அனைத்தும் உள் கடந்து தந்தவன் கடவுள் கடவுள் இறைவன், இவை அனைத்தும் உணர்ந்து கூறுபவன் பக்தன், உணர்த்தி தருபவன் குரு பார்த்த மாத்திரத்தில் தலை எழுத்தை மாற்றி சக்தி கொண்டவர் சத்குரு,