Yay நான் ரொம்ப எதிர் பார்த்த புத்தக விமர்சனம்.. மிகவும் பயனுள்ள புத்தகம். 🤍எனக்கு நெருங்கிய தோழி ஒருத்தங்க பல வருசத்துக்கு முன்னாடி சொன்னாங்க, நம்ம பிரச்சனைக்கு நமக்கு தீர்வு தெரியாதா ? நாம ஒரு ஆறுதலுக்கு தான நெருங்குனவங்க கிட்ட பகிர்ந்துக்குறோம், எதாவது பேச ஆரம்பிச்சாலே தீர்வு தூக்கிட்டு வந்துர்றாங்கனு சொன்னாங்க.. அன்னைக்கு அது எனக்கு ரொம்ப சரியான புது கோணமா தெரிஞ்சது.. review வழக்கம் போல 👌😍
மிக்க நன்றி ❤ இப்போது எல்லாம் ம்ம்ம் கொட்டி கேட்க மட்டும் தான் செய்கிறேன். காது கொடுத்து கேட்பதால் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் அதே பொலம்பலையே நம்மிடம் பொலம்புவார்கள். அப்போது அயற்சி ஏற்பட்டு அவர்களை நிறுத்த வைப்பதற்காக அறிவுரை வழங்குவேன் 😂. இப்போது அதுவும் தேவையில்லை என்று உணர்ந்து, எல்லை மீறும்போது ‘இதைப் பலமுறை சொல்லிவிட்டீர்கள். நான் உங்களுக்கு ஏதாவது உதவ முடியுமா சொல்லுங்கள். இல்லையென்றால் என்னால் எந்த வகையிலும் உதவ முடியாது’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். மற்றவர்களும் என்னிடம் அப்படிச் சொல்வதை நான் ஏற்கிறேன். ஒரே பிரச்சனையை நினைத்து அதனுள்ளயே பல காலம் உழன்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறியாக அதைப் பார்த்து, அதற்கு என்ன தீர்வோ அதைச் செய்யவதற்கு மற்றவர்களின் வெளிப்படைத் தன்மை உதவியாக இருக்கிறது.
Physical punishment and abuse destroys the protective factors children have, when they grow to be adults, against depression and other anxiety disorders. It is well documented.
It is so true. I have another book review coming. It talks about the trauma children go through when they are constantly abused aka beaten in the name of punishment and how it affects them as adults. Scary stuffs!
Wonderful analysis about the two extremes prevailing, Old school method and the instagram parenting. Maintaining an equilibrium in the middle will help a lot of people to understand parenting even more simplified and relatable.
@@subhalibrary குறைந்தது பத்து சம்பவங்கள் என் நினைவில் இன்னும் பசுமையா இருக்கு. SK வாத்தியார் அடிச்சார் என்றால் கழிப்பறைக்கு ஓட வேண்டும். பாதி கொலை. தில்லைக்குமரன் எல்லாம் கம்பி எண்ணிட்டிருப்பார் இங்க அமெரிக்காவில். சீத்தாலச்சுமி அரக்கி. கிள்ளுனா..கன்னமே வீங்கிடும். பிரம்படிகள் எத்தனை ...எத்தனை.... இன்னும் சில மாணவர்களை நினைவூட்டினால் கோபமாக இருப்பார்கள் (பேரன் பேத்தி எடுத்தவர்கள்)
முறையாகக் கண்டிப்பதில் முக்கியமானது அடி. அடி என்பது கண்டிக்க என்பதைத் தாண்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்த என்று பெற்றோர் இறங்கிவிடுவதே அடிப்பதை தவறு என்பதான ஒட்டுமொத்த முடிவுக்குத் தள்ளிவிடுகிறது. பிள்ளைகளை நேசித்தால் அடிகளைச் சரியாக அன்புடன் வெளிப்படுத்துவது அவசியம்.
நான் ஒரு வயசுவரை அடி வாங்கியிருக்கேன். என்னைக் கோபமுள்ளவனாக்கியதே விளைவு. என் தாய் என்னைத் திட்டியதுகூட இல்லை. அப்பாவிடம் மட்டுமே அடிவாங்கியிருக்கேன். ஆசிரியர்களில் சில மிருகங்கள் இருக்காங்க. நன்றாகவே படித்தேன். எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.
அடி என்பது வன்முறை. அன்பு இருக்கும் இடத்தில் அடி இருக்கவே முடியாது. வளர்ந்த ஒருவர் தப்பு செய்தால் அடிப்பீர்களா? உங்கள் அலுவலகத்தில் ஒருவர் தவறு செய்தால் ‘அன்பாக’ அடிப்பீர்களா? உங்களது வயதான தாயோ தந்தையோ தவறு செய்தால் அடிப்பீர்களா? உண்மையில் குழந்தைகளை விட பெரியவர்களோ அதிகமாக ஒழுக்கமற்று நடக்கிறார்கள். அப்போதெல்லாம் குழந்தைகள் பெரியவர்களை அடித்துக் கண்டிக்கலாமா? இதெல்லாம் தவறு என்னும் போது குழந்தைகளை அடிப்பது மட்டும் எப்படி சரி? சரியில்லை. பெற்றோருக்கு அடிக்காமல் எப்படி கண்டிப்போடு வளர்க்கத் தெரியவில்லை என்பது தான் உண்மை. அது போக தங்களது அதிகாரத்தைக் காட்டும் இடமாகக் குழந்தைகளைப் பார்க்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். அன்பு இருக்கும் இடத்தில் அடிக்க முடியாது. உங்களது காதலியையோ காதலனையோ அன்போடு அடிக்க முடியுமா? அப்படி அடிப்பவர்களுக்கு abusers என்பது தான் பெயர். பெற்றோர்கள் செய்தாலும் அது abuse தான்.
நீங்கள் ஒரு நாள் அலுவலகத்திற்கு தாமதாக வந்துவிட்டீர்கள். உங்களது காரணங்களை மேலாளர் ஏற்கவில்லை. ‘காரணம் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு உங்களை அன்போடு அடித்துக் கண்டித்தால் ஏற்பீர்களா? 50 ஆண்டுகளுக்கு முன்னால் இது போன்ற வழக்கம் தான் பண்ணையார் முறையில் இருந்தது. ஒடுக்கப்பட்ட சாதி, இன நிற மக்களைப் பணியில் கட்டாயமாக அமர்த்தி, அவர்களைக் கண்டிப்பு என்னும் பெயரில் அடித்துக் கொண்டிருந்தார்கள். உலகெங்கும் புரட்சி வெடித்து அந்த நிலை மாற்றப்பட்டது. ஆண்கள் வீட்டுப்பெண்களை அடிப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று அது மாறி வருகிறது. தொடர்ந்து அடிக்கும் ஆணிடம் இருந்து பெண்கள் மனமுறிவு பெற்று வெளியேறுகிறார்கள். ஆனால் இன்னும் குழந்தைகளை அடிக்கும் வன்முறை மட்டும் தொடர்கிறது. காரணம் அவர்கள் குரலற்றவர்கள். வேறு போக்கற்றவர்கள். எவ்வளவு அடித்தாலும் நம் காலையே சுற்றுவார்கள் என்பதால் தான் பெற்றோர்கள் அடிக்கிறார்கள். உடன் வேலை பார்ப்பவர்களிடம் பக்குவமாக நூறு தடவை எடுத்து சொல்லும் அவர்களால் தான் பெற்ற குழந்தைகளிடன் இரண்டு முறை எடுத்து சொல்ல முடிவதில்லை. அடித்துவிட்டு ‘கண்டிப்பு’ என்று பூசி மொழுகுவார்கள்.