கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க, இலெமுரியா அறக்கட்டளை-மும்பை இணைந்து புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் இலக்கியப் படைப்புகளை மீள்படிப்புக்கு உட்படுத்தும் பாவேந்தர் இலக்கியத் தொடர் இணையவழி சொற்பொழிவை நடத்தி வருகின்றன. 2020-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தொடங்கிய பாவேந்தர் இலக்கியத் தொடர் இணையவழி சொற்பொழிவு, ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
பாவேந்தர் பாரதிதாசனின் இலக்கியங்களை மீள்படிப்புக்கு உட்படுத்தி, அவரது இலக்கியங்கள் பேசும் சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியே பாவேந்தர் இலக்கியத் தொடர். பாவேந்தர் இலக்கியங்கள் மீது ஆர்வம், ஈர்ப்பு கொண்ட எவரும் குவியம்(ஜூம்) இணையக்கூட்டத்தின் வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். தமிழர்களின் ஆகச்சிறந்த பாவலராக விளங்கிய பாரதிதாசனின் இலக்கியங்களை கொண்டாடுவதும், பரப்புவதும் சமத்துவத்தை பேணும் அனைவரின் எண்ணமாக அமையும். வாருங்கள் எண்ணங்களால் ஒன்றாகி, இணையதால் இணைந்து, சமத்துவ சமுதாயத்தை சமைப்போம்!
26 сен 2024