மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொருநாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை மிகக்கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்துவிட்டேன் உம் கரத்தில் கொள்ளை நோய் விலகனும் ஜனங்கள் வாழனும் உம் நாமம் உயரனுமே உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதையா பெலவீனங்களை குறித்து பரிதபிக்கும் மிகப் பெரிய பிரதான ஆசாரியரே ஏற்ற வேளை உதவிசெய்யும் கிருபையை நான் நம்பியே கிருபாசனம் வந்து நிற்கிறேன் கிழக்கு மேற்கு உள்ள தூரம் குற்றங்கள் அகற்றுகின்ற கிருபையுள்ள நல்ல தகப்பனே பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு கிருபை உயர்ந்தது திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள்மேல் மனதுருகும் நல்ல தகப்பனே பஞ்சத்திலே பசியாற்ற நோயிலிருந்து காப்பாற்ற நோக்கமாய் இருப்பவரே
இந்த பாடலை கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக மறுபடி மறுபடி கேட்க தூண்டுகிறது. feather கர்த்தர் இன்னும் ஆசீர்வதித்து நிறையப் பாடல் எழுத கர்த்தர் உதவி செய்வாராக
தந்தை அவர்களை நம்முடைய தமிழ் உலகத்திற்கு தந்த தேவனுக்கு மனதார நன்றி செலுத்துகிறேன், தேவன் அவருக்கு தீர்க்காயுளை கொடுத்து இன்னும் அநேக பாடல்களை தேவ மகிமையோடு வெளிவர உதவி செய்வாராக
உலகத்தை நோக்கி ஓடும்போது இந்த தேவ மனுஷனுடைய பாடல்கள் என்னை தேவ சமூகத்திற்கு என்னை இழுத்துக் கொண்டு வருகிறது 😭😭😭😭😭😭 இந்த தேவ மனுஷனை இன்னும் ஆண்டவர் வல்லமையைப் பயன்படுத்தி சரீர சுகம் பலன் ஆரோக்கியம் சவுக்கியம் ஆண்டவர் தருவாராக ஆமென்
"அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்" என்று தந்தை அவர்கள் பாடிக்கொண்டிருந்த 80'களிலிருந்து நான் அப்பாவைப் பார்த்துக்கொண்டும் , ஆவியானவர் அவர்கள் மூலம் வெளிக்கொண்டுவரும் பாடல்களை பாடிக்கொண்டுமிருக்கிறேன். விசுவாச கீதங்களும் ஜெபத்தோட்ட ஜெயகீதங்களும் எங்கள் வாழ்விலும் குடும்பத்திலும் ஊழியத்திலும் மாபெரும் மாற்றங்களை தேவன் செய்வதற்கு ஏதுவாய் இருந்துவருகிறது என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. அப்பாவுக்காக தேவனைத் துதிக்கிறேன். இந்தப் பாடல் மிகவும் அருமை, இந்தக் காலத்திற்கு ஏற்ற கர்த்தருடைய வார்த்தைகளை, வசனங்களை பயன்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலாய் இருக்கிறது. தேவனுக்கே மகிமை.
ஐயா சோத்திரம், இந்த கோரோனா நேரத்தில் எனக்குள் மரண பயம் வந்தது, ஒவ்வொரு நாலும் என்னை தேற்றிய பாடல் (வதை உந்தன் குடாரத்தை அணுகது) பாடல் மூலம் ஒவ்வொருணாலும் நான் ஜீவன் பெற்றேன். ஒவ்வொரு வரிகளுக்கும் ஜீவன் உண்டு. நான் இப்ப சுகமாய் இருக்கிறேன்
தந்தையின் பாடல் கேட்கிற ஒவ்வொருவருக்கும் உயிர் மூச்சு தந்தை பாடல் மூலமாய் பாடும் போது பரலோக பிதா மகிமை படுகிறார் இன்னும் தந்தையின் ஆயுள் நாட்களை கூட்டி தருவாராக ஆமென்🙏🙏🙏🧎♂️
அப்பா இந்த பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது, இயேசப்பா உமக்கு கோடாண கோடி ஸ்தோத்திரம். இந்த பாடலை தந்தை பெர்க்மான்ஸ் மூலமாக தேவரீர் என்னை தேற்றினீர் நன்றி இயேசப்பா .
கர்த்தர் நம்முடைய இந்திய தேசத்திற்கு தமிழ்நாட்டிற்கு தந்த தந்தை நம்முடைய பாதர் பெர்க்மான்ஸ் அதற்காக தேவனைத் துதிக்கிறேன் உங்களுடைய பாடலை சிறுவயது முதலே கேசட்டில் இருந்து கேட்டு வருகிறேன் உங்களுடைய குரல் வருடம் தோறும் இனிமை ஆகிக்கொண்டே இருக்கிறது உங்கள் பாடல் வரிகள் கேட்கும்போது சங்கீத காரரான தாவீதை அநேக முறை நினைவு படுத்துகிறீர்கள். உங்களை ஒரு முறை அபுதாபியில் வைத்து பார்க்க வாய்ப்பு கர்த்தர் தந்தார் மீண்டும் இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் அதோடு கூட நம்முடைய ஜெபத்தோட்ட ஊழியத்திற்காக மற்றும் அய்யாவின் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் ஜெபித்து கொண்டிருக்கிறேன் இன்னும் உங்கள் மூலமாக ஆண்டவர் அநேக பாடல்களை தந்து அனைகரை தேற்றவும் இரட்சிப்பின் பாதையில் வழிநடத்த கர்த்தர் தாமே உதவி செய்வாராக. ஆமென். ஆமென். ஆமென்.
நீங்க எழுதிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஐயா. இன்னும் அனேக பாடல் எழுத வாழ்த்துக்கள்👍. ☺நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்☺ கர்த்தர் இந்த வசனத்தில் படி உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா.
தேவனோடு உறவாடுவதற்கான 'புதியபரிமாணம்' இப்பாடல். இப்பாடலில் மறைந்துள்ள இரகசியமான விசுவாச வல்லமையினை அனுபவித்திடுங்கள். அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் ;தேவன் நமக்கருளிய மாபெரும் கொடை .praise to Lord
நம் தேவன் பயன்படுத்தும் அற்புதமான பாத்திரம் இந்த தேவ மனிதர்... சாதாரண மக்களும் எளிமையாக பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.... இவர் மூலமாக. ... இயேசு தாமே இவரின் கிரியைக்கு இன்னும் பெரிய பலன் தருவார்... கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக....
ஆண்டவரின் கிருபையையும் இரக்கத்தையும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்த அருமையான பாடலின் மூலம் ஒரு தெய்வீக ஆறுதலை உணரமுடியும் பெறமுடியும்💯💯...... ஆண்டவர் இயேசு நம் தந்தை ஐயா பெக்மன்ஸ் மூலம் அநேக பாடல்கள் மூலம் நம்மோடு பேசி உணர்த்துகிறார் இன்னும் ஆண்டவர் வல்லமையாய் ஜயாவை நீண்ட ஆயுளோடு ஆண்டவர் வருகைமட்டும் பயன்படுத்துவாராக ஆமென்.....❤️
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு நீர் எங்கள் தகப்பன் நண்பன் ஆண்டவரே உம்மை நோக்கி பார்க்கிறவர்கள் பிரகாசம் போதும் வெட்கப் பட்டு போவதில்லை ஜீவனுள்ள தேவன் நன்றி நிறைந்தஉள்ளத்தோடு உமக்கு நன்றி செலுத்துகிறோம்
இந்தப் பாடலை முழுவதும் கேட்டு முடித்தவுடன் இதயத்தில் தோன்றும் வாக்கியம்: ஆம், நிச்சயமாகவே, கர்த்தருடைய இரக்கம் மகா பெரியது. தந்தை அவர்களின் பிரசன்னம் மிகுந்த பாடலுக்காய் கர்த்தருக்கு நன்றி செலுத்த மனம் நிறைகிறது. Glory to God Almighty🙏🙏🙏
நன்றி அப்பா விலகாமல் மாறாமல் தேற்றி உயிர்ப்பிக்கின்ற உமது மகா பெரிய இரக்கங்களுக்காக ஒவ்வொரு நாளும் புதிய கிருபைக்காக நன்றி அப்பா fatherஐ இயேசுவின் நாமத்தில் ஆசிர்வதிக்கிறேன் தகப்பனே
தந்தை பெர்கமன்ஸ் அய்யாஅவறுடய எல்லா பாடலும் மிக அறுமையான பாடல்கள் அன்லைக் குடுக்கிறவர்களுக்கு இதன் அறு்மையை ததெரியவில்லை என்று நினைக்கிறேன், தந்தை பெர்கமன்ஸ் அய்யாவுடய பாடல்கள் அனைத்தயும் கர்த்தராகிய ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
தந்தையின் பாடல்களை கொண்டு அநேக உள்ளங்களை உடைத்து தேவன் புதிதாக்குகிறார் இன்னும் அநேக உள்ளங்கள் உடைந்து இரட்சிக்கபட வேண்டுமப்பா தந்தைக்கு தீர்க்க ஆயுள் கொடுங்கப்பா🙏
ஐயா உங்கள் பாடலை கேட்டு மிகுந்த மனமகிழ்ச்சியாயிருக்கிறோம். ஆண்டவர் உங்களை அதிகதிகமான தீர்க்காயுசு கொடுத்து மேலும் மேலும் பல பாடல்களைப் பாடும்படி வேண்டிக்கொள்ளுகிறோம் ஆமென்.