எனக்கு பெரும் கோவம் இருந்தது ஏனென்றால் வெறும் பெரியாரை மட்டும் பேசுகிறீர்கள் என்று இப்போது அயோத்தி தசரை பற்றியும் பேசுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா😊
@@akmano7922 இப்படி அதிமேதாவிதனமா பேச யாராவது வருவாங்க nu தெரியும்.. தலித் ஆதார மையம்ங்கரது முதல்ல என்ன nu தெரிஞ்சு பேசணும் தம்பி.. அதவிடு தலித் என்ற வார்த்தையின் பொருள் என்ன...??? அது என்ன மொழியா இருந்தாலும் சரி அர்த்தம் என்ன...???
@@saravananpalasaravanan256 தலித்' என்ற சொல் மராட்டியச் சொல். 'ஒடுக்கப்பட்ட மக்கள்' என்பது இதன் பொருள். இது சாதியைக் குறிப்பதல்ல. ஆனால், இன்று, 'தாழ்த்தப்பட்ட மக்கள்' என்ற பொருளை இது உணர்த்துகிறது. எங்களுக்கு இந்த தலித்திய வரலாறு தேவை இல்லை எவன் ஒருவன் தலித் என்ற சொல்லால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா இல்லை தன் குடிகளின் வரலாறு பேசி தலை நிமிர முடியுமா? நான் ஒடுக்க பட்டவன் தாழ்த்த பட்டவன் என்று சொல்வதில் எனக்கு பெருமை இல்லை எண் வரலாறு நோக்கி செல்கிறோம் வரலாறு தெரியாத எந்த இனமும் முன்னேறியது கிடையாது .
@@akmano7922 ராசாக்கண்ணு அதெல்லாம் சரி தலித் ஆதார மையம் நா என்ன எங்க இருக்கு தெரியுமா...??? தலித் ஆதார மையம் நெறைய தலித் தலைவர்கள் M.C. ராசா, ரெட்டைமலை சீனிவாசன், அயோத்தி தாச பண்டிதர், மீனாம்பாள், அம்பேத்கர், இம்மானுேல் சேகரனார் போன்றோர் பற்றிய பாடல்கள் கேசட் மற்றும் குறுந்தகடு வெளியிடப்பட்டன. அவற்றில் வந்த பாடல்களில் ஒன்று தான் "தாழ்த்தப்பட்ட தலைவர்களுக்கு முன்னோடி" அதுனால சொன்னேன் தலித் ஆதார மையம் மூலமாக பாடல்கள் வெளியீடு செய்ய வேண்டும் என்று, அதை என்னவென்று தெரிந்து கொள்ளாமலே"நீ மட்டும் தான் தலித் நான் பறையர்" சொள்ளுறிங்களே பா.. அப்போ நாங்க பறையன் இல்லையா??? அதற்காக நான் பறையர் பறையர் நு மாரடிக்க சொல்லுறியா.... குடி குடி நு தேடி கடைசில யாருக்காக உன்னை உயர்ந்தவன்னு காண்பிக்க போகிறாய். சரி உன்னை உயார்ந்தவன்னு காண்பிக்கிறாயி என்றால் என்ன நெஞ்சை நிமிர்திட்டு போக போகிறாய்....???
இது போன்ற பல தலைவர்களின் ஆழ்ந்த கருத்துடன் பாடல்கள் வெளியிட வேண்டும். தலித் இன தலைவர்களின் வரலாற்றை பறைசாற்ற வகையில்...! இப்பாடல் அருமையாக உள்ளது 💥🔥👏 வாழ்த்துக்கள் ❤️😊
பண்டிதர் அயோத்திதாசர் அவர்களுக்கு சிறப்பான பாமாலை. தம்பி தெருக்குறள் அறிவு மற்றும் குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. உங்களின் கொள்கை முழக்கப் பணிகள் மென்மேலும் சிறக்க இனிய நல்வாழ்த்துகள் தம்பிகளே.
என் அன்பு தோழர் திரு. அறிவு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நம் சமூகத்தில் இது ஒரு பெரிய சமூக விடுதலைக்கான பாடல்.
அண்ணா 👌 அருமை.! அய்யா அண்ணல்,பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன்,என முப்பெரும் மூதாதையர்களின் முன்னேற்ற வரலாறுகளை 5நிமிடத்தில் ஆணித்தரமாக மூளையில் பதிவு செய்ய கடினமான உழைப்பை பறைசாற்றி உள்ளீர்கள் பார்க்க அழகாக இருக்கு சூப்பர்.! நீலம் குழுவினரை போற்றி வணங்கி மகிழ்கிறோம்.!யாதும் ஊரே யாவரும்(அறிவீர்) கேளிர்.!முன்னோர்களின் உழைப்பு மிகவும் கடினமான பாதையில் பயணம் செய்து சோதனைகளை கடந்து மகத்தான சாதனைகளை முறியடித்தது நாம் விழிக்க பாடுபட்டுள்ளார்கள் அவைகளை பார்த்து படித்து பகிர்ந்து நாமும் நல்லதோர் வீணை செய்வோம்.!!
அண்ணா கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது இதுபோன்ற ஒரு அருமையான செயல்களை இன்னும் பல தலைவர்களுக்கு வழிவகை செய்வாயாக வணங்கி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா.! நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீளம் சோசியல் மீடியா புதியதோர் உலகம் செய்வோம் என இளைஞர்களின் மனதில் நன்கு பதிவு செய்கின்றன.. பாடலை தந்த நீலம் குழுவினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு ரசிக்கிறேன்...
நமது தாத்தா அயோத்தி தாச பண்டிதர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் தமிழர்களின் முன்னோடி. தமிழர் இனத்தில் பிறந்தவர்கள் தமிழர் தாத்தா அயோத்தி தாச பண்டிதர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் தாத்தா அவர்கள்