இந்த புக் டாக் என் மனைவி தான் வளர்க்கிறாள்...எனக்கு இதை பொதுவா நாய்களை கண்டாலே பிடிக்காதே, காரணம் இதுமேல் நாற்றம் அடிக்கும், அடிக்கடி தும்மும், நிறையா முடிகொட்டும், எனக்கு வீட்டில் சாப்பிடவும், தூங்கவும் அருவருப்பாக இருக்கும், என் மனைவி சொல்லுவாள் இது எல்லோரையும் மயக்கிவிடும் என்று, அதை போல் என்னையும் மயக்கிவிட்டது...இப்ப என் உயிர் இந்த புக் டாக்...நான் எங்கே வெளியே சென்றாலும் முதல் ஆளாக என் ஸ்கூட்டியில் போய் உட்கார்ந்துக்கொள்ளும், இதுக்கு வண்டியில் ஊரு சுத்துறது என்றால் ரொம்ப பிடிக்கும். இதை வீட்டில் விட்டுவிட்டு நாம் போனால் குழந்தை முகத்தை சோகமாக வைத்துக்கொள்ளும். அதை வெளியே அழைத்து போனால் நம்மை அது ரொம்ப குஷியாகிவிடும்.. ஆனால் இது வெப்பம் தாங்காது...குழந்தை போல பழகும்...ஆனால் இதை வளர்க்க ஒரு ஆள் அதுக்கூடவே இருக்கணும்...