அடியேனுக்கு,வட ஆற்காடு வாணியம்பாடி நான் பிறந்தஊர்,ஏழ்மை காரணத்தினாலே உணவு உடைக்கு பஞ்சம் கல்விக்கு தடை 70களில் 9வயது எனக்கு சிறு வயதினிலே, மக்கள் திலகதின் சமுதாய புரட்சி பாடல்கள் தான் மிக சிறந்த கல்வி என்றால் அது மிகை ஆகாது அந்த வயதில் அந்த காலகட்டத்தில் பொன்மனசெம்மல் எது செய்தாலும் அவர் செய்வது போல் செய்து நினைத்து,,அவர்தான் என் ரோல் மாடல் அவர் தான் அவர் குரலில் தனிச்சையாக இசை அமைத்து இந்த சமுதாயசீர் திருத்தபாடல் களை சினிமா வில் பாடுகிறார். என்று இருந்தேன்,!!??அவ்வளவு கட்டு பாடக சினிமாவை தன் கட்டுக்குள் வைத்துஇருந்து இருக்கிறார் 18வயதில்திரு சாண்டிலயன் னின் சரித்திரகதைகளில் வரும் யவன ராணி,கடல்புறா, ஜலதீபம், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்றபுத்தக கதை களில் வரும் கதா நாயகன் என்றால்புரட்சி தலைவரின் முகம் தான்நினைவில்,மனதில் பசுமரத்துஆணி போல் பதிந்து விட்டது. 90களிலே தான், பாடல் ஒருவர் எழுது கிறார், இசை ஒருவர், கதை ஒருவர், இப்படி எல்லாம் மே தனி தனி யாக ஒருவர் செய்கிறார்கள் என்பதே தெரிய வந்தது, மக்கள் திலகத்தின் வளர்ச்சியலே,திரு MSV,திரு புலவர், புலமை பித்தனின்பெரும் பங்கும் உண்டு, இந்த மேதை களின் உழைபால், என் போன்றோரை யும், தமிழக மக்கள்ளையும், இசை யையும், தமிழக சரித்திரத்தில் என்றும் நிலை யாக, காலத்தில் அழிக்க முடியாத, இனி வரும் அடுத்த தலை முறைஅதற்கு அடுத்த பல தலை முறை களாக மக்களின் மனதில் தத்துவம்,வீரம், காதல் இலக்கியம், இவர்களின் படங்களின்,பாடல்களில் வரும் வரிகளை போல பின் பற்றி நடப்பார்கள் , இவர்கள் தமிழகத்தின்,என்றும் மறுக்க, மறக்க,முடியாத கால கண்ணாடிகள் , என்பதே முற்றிலும் உண்மை,நன்றி 🙏
அருமை அருமை. எனக்குப் பிடித்த கவிஞர். இலக்கியம் எந்தக் கவிஞரும் பக்கத்தில் நிற்க முடியாது. தலைவர் படத்தில் அற்புதமாக வரிகளை செதுக்கி இருப்பார். அவர் மறைவு பேரிழப்பு! காலம் புகழும் புலவர். முனைவர் பௌலியன்ஸ்.,
சிறப்பான பதிவு. நல்ல அஞ்சலி நல்ல வர்ணனையாளர் தடங்கலின்றி பேசியுள்ளார் புலவர் கல்லூரியில் புலவர் பட்டம் படித்தவர் புலமைப்பித்தன் எஸ்பிபி யின் முதல் பாடல் சாந்தி நிலையம் படத்தில் பாடிய இயற்கை என்னும் இளைய கன்னி தான் முதல் தமிழ் பாடல். எஸ்பிபி யே விளக்கியுள்ளார். அதே நேரத்தில் எம்ஜியார் க்கு பாடி பிரபலமானதால் பெரும்பாலும் அதுவே முதல் பாடல் என்ற எண்ணம் வழங்கிவிட்டது.
மிகச்சிறந்த கவிஞர். மிகவும் விவரமான, வித்தியாசமாக தமிழை கையாண்டு பாடல்களை மிக அழகாக எழுதி அகத்திணை,புறத்திணையை கண்முன் நிறுத்தும் வல்லமை பெற்றவர். இவரின் மறைவு என் தமிழுக்கும் இழப்பு,கவிதைகளும் கண்ணீர் விடும்....ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.