ரஞ்சினி வீனை சிறப்பாக வாசித்தார்கள் முகம் தெய்வ கடாட்சம் ஆக அற்புதமாக கலைஞர் அவருக்கு பாராட்டு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் இறைவன் அருள் எப்பொழுதும் உண்டு அவர்களுக்கு நன்றி
"நின்ற இடம் யாவும் நிழல் போல தோணுதே" சுசீலா அம்மாவின் குரலில் ஒலிக்கும் அந்த பதரல் தான் இந்த பாடலின் ஹை லைட்.. அற்புதம், அபாரம்.. காலத்தால் அழியாத பொக்கிஷம்..
அன்றைய நாட்களில் என்று தொடங்கினாலே , அப்புறம் பேசுவோம் என்று சொல்லி ஓடியவர் அநேகம் . ஆனால், எண்ணம் , எழுத்து , எழுதிய கவிஞர் மற்றும் திரைப்படத்திற்காக சொல்லப்பட்ட காட்சி இவைகள் அனைத்துமே இவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கும் சுபஸ்ரீ அவர்கள் நீண்ட காலம் நிலைத்து நின்று இந்த இனிமையான நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும்.
Superb! என்னமோ ஃபரீதா அம்மா ஏதோ பாடி முடிக்கிறீங்க. ஒன்றும் புரியவில்லை. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்..... ... அத்தைமடி மெத்தையடி... மலர்கள் நனைந்தன..... இப்படி பல பாடல்களை பாடியதை கேட்டு மகழ்ந்தவன். சிக்கலான K.B.S அவர்கள் பாடிய ஞானப்பழத்தை பிழிந்து..என்ற பாடலைப் பாடும்போது மெய் சிலிர்க்க வைத்தது இவ்வளவு அற்புதமான குரலையும் திறமைகளையும் கொண்ட நீங்கள் ஓர் உன்னத மனிதப் பிறவி. இசை ஞானம் அபாரம். சங்கதிகள்,பாவங்கள்,உணர்ச்சி கள்போன்றவை,,உங்களுக்கு இனிப்பு மாதிரி என்று கூறினால் அது மிகையாகாது. எனவே இந்தப் பாடல் உங்களுக்கு அல்வா மாதிரி. பின்னனி இசை பல இசைஅமைப்பாளர்களை திக்கு முக்காடச் செய்யும். மிரண்டு போவார்கள். அந்த அளவில் திட்டமிடப்பட்ட team work. இது சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் கைவண்ணமல்லவா? பாடல் வரிகளின் விளக்கம் அருமை. A.I.R.அறிவிப்பாளனாக இருந்தபோது பழைய பாடல்களை தூசு தட்டி எடுத்து ஒலிபரப்புவேன். இந்த பாடலை ஒலிபரப்ப விரும்ப மாட்டேன். ஆனால் இப்போது இந்தப் பாடலைக் கேட்டதும் கண்கலங்கி விட்டேன். காரணம் வழங்கப் பட்ட விதம். அப்பப்பா அபாரம். இந்த team மிகவும் சிறப்பாக பாராட்டப் பட வேண்டியவர்கள். மொத்தத்தில் QFR மாபெரும் இசைப் புரட்சி இயக்கம். இதயம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துக்கள். அதுசரி மன்னவன் வந்தானடி..., எங்கே நிம்மதி.. போன்ற பாடல்களை தூசு தட்டி புதுப்பிக்கும் ஒரு திறமை மிக்க குழுவுக்கு இதெல்லாம் சாதாரணம்.
அழுகையைக் கூட அழகான பாடலாக்கி அசத்திய மறைந்த மகான்களுக்கும் நம்முடன் வாழும் சுசீலா அம்மாவுக்கும் பரீதாவின் இந்தப் பாடல் ஓரு சமர்ப்பணம். சுபாவால் நிகழ்வதிது! சுகமாய்...சுகமாய்... சுகமாய்...
என் தந்தைக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் தற்போது covid இறந்துவிட்டார் இந்த பாடலை கேட்கும்போது அவர் கூடவே முணுமுணுத்து பாடி வருவார்,அவர் ஞாபகம் வந்துவிட்டது கண்ணீரும் வந்துவிட்டது இந்த பாடல் என்னை மிகவும் பாதித்தது அருமையாக வாசித்த இசைக் கலைஞர்களுக்கும் இதை முன்மொழிந்த சுபா மேடம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை ஆனந்தக் கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன்
மிக மிக சிறந்த படைப்பு இந்த பாடல், முதலில் இசை ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு செயல் புரியும் எங்கள் சுபஸ்ரீ அவர்களுக்கு கோடானு கோடி நன்றி, இன்று பாடலில் பங்கு கொண்ட அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், நல் இரவு.
Fareeda’s voice is so very perfect for Suseelamma’s,voice,especially, the flash of aesthetics in the sorrowful rendition of this evergreen masterpiece of a song .Beautiful Fareeda!!👍👍👍👍👍
கவியரசின் பெரும்பாலான பாடல்கள் கம்பனை தொட்டே வரும்! இதை பற்றி ஒருவர் குறிப்பிட்ட போது,,கவியரசர் ஆம்! நான் கம்பரை கையாளுகிறேன்! களவாடவில்லை!என்றார்!தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளுமாறு தருகிறார் கவியரசர்! ப்பரிதா மற்றும்QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!
பரிதா அவர்களின் கணவரை நினைத்தே இந்த பாடலை ஒரு நிகழ்ச்சியில் பாடினார்.... மிகவும் உருக்கமாக இருந்தது.... இந்த பாடலை கேட்டால் பரிதா அவர்கள் தா நியாபகத்தில்
Radio/Transistorல் நிறைய தடவை ஒலிபரப்பான பாடல் இது தான்.ஃபரீதா நன்றாக பாடினார்.QFR orchestra superb.Original songல் பத்மினியின் நடிப்பிலும்,பின்னணி பாடிய பி சுசீலாவின் குரலிலும் மயங்கி கிறங்குவதில் நானும் ஒருவன்.
பரிதாவின் கணவர் தவரியதை நினைத்து விஜய் டீவியில் இவர்பாடி,இதை பகிர்ந்தும் உள்ளார்.இதை பாடி அவர் அன்று கண்ணீர் விட்டதை இதை கேட்கும்போது நமக்கும் கண்ணீர் வந்தது.இதை இங்கு கேட்கும்போதும் அந்த நினைவு இதயத்தை இப்பொழுதும் பரிதாவின் நினைவோடு கனக்கும்.
அப்போது கேட்ட பொழுது என்ன மாதிரி உணர்ச்சிகள் இருந்ததோ அது இன்றும் உள்ளது். பரீதா ஒரு நல்ல பாடகி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபத்திருக்கிறார். எந்த வித சிரமுமின்றி அனாயசமாக பாடுகிறார். இந்த பாட்டின் வரிகள் அப்படியே மனதில் பதிந்த ஒன்று. அதே போல், இந்த பாட்டில் வீணை உள் நுழையும் இடம், ஆஹா. கண்ணதாசனையும் மெல்லிசை மாமன்னர்களையும் என் உயிர் உள்ள வரை மறக்க முடியுமா. நீங்கள் இந்த மாதிரியான பழைய பாடல்களை பற்றி கூறியது நூற்றுக்கு நூறு சரி. அனைத்து இசை விற்பன்னர்களுக்கும் மிக்க நன்றி
தங்களின் மீள் உருவாக்கம் மிக பிரம்மாண்டம். சூப்பர் சிங்கர் பரீதாவின் இழையோடும் குரலோடு ரஞ்சனி அவர்களின் வீணையும் பாடுகிறது. அனைவருக்கும் பாராட்டுகளும் வணக்கங்களும்👏👏🙏🙏☺
Fareedha had sung same song in super singer few years ago n today she sang it even better . My favorite singer , hope she gets more opportunities n due recognition.
அருமை!. இலங்கை வானொலியில் மறைந்த அறிவிப்பாளர் K. S. ராஜா அவர்களின் விருப்ப பாடல். தினம் ஒரு முறையாவது இந்த பாடல் ஒலிக்கும். கேட்டு கேட்டு ஊறி பதிந்த பாடல். Fhareedha மிக அருமையாக பாடினார். புல்லரித்தது கேட்டபோது. Congrats to all the musicians and you Subha mam
She is not a new singer to the general music scene though. She sang the exact same song in Super Singer 5 in the dedication round, not a dry eye after she finished.
பரிதா ஏற்கனவே விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்தான். ஆனால் you tube ல் இல்லை. அந்த கவலை இன்று தீர்ந்து விட்டது. காற்று உள்ள வரை இந்த கானம் நிலைக்கும்.
ஓ வெண்ணிலா ஒ வெண்ணிலா மாதிரி எனக்கு முழுதும் மனப்பாடமாக உள்ள பல பாடல்களில் இதுவும் ஒன்று.. சிறு வயது முதலேயே கேட்டு வந்த ஒர் அற்புத பாடல்.... 👌👌 கவியரசர் கண்ணதாசன் எழுதி, மெல்லிசை மன்னர்களின் இசை.. பி சுசீலா உணர்ச்சிபொங்க பாடிய பாடல்.. நடிப்பின் உச்சத்தில் பத்மினி...Gallant MGR..🤺 என்ன ஒரு அற்புத படைப்பு.. 🙏🙏 Faridha வின் குரல் வளம் மிக பொருத்தமாய் இருந்தது ... உரிய உணர்சிகளுடன், ஸ்ருதி இறுதி வரை ஒரே நிலையாக அருமையாக இருந்தது...well supported by the musicians particularly the strings... 💯💯👏👏 Thanks to Mrs Subhashree and team for presenting this wonderful song today... 🙏🙏
Great 👌👌👌👌கத்தி போன்ற குரல்...அது போல் இசை மம்ம்ம்ம்ம்....👍👍👍👍👍வீணை வாசிப்பு தெய்வீக சிரிப்பு ....God bless all of you 🙌🙌🙌🙌🙌🙌 எனக்கு கோபால்ராவ் குரல் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
இன்று கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலுக்கு சுபஸ்ரீ அவர்கள் தந்த விளக்கம் மிகவும் அருமை . திரைப்படம் என்றாலும் திரையிசைப் பாடல் என்றாலும் கண்ணதாசன் அவர்களின் மனதில் நின்றவர் கண்ணனும் இராமனும் தான் .இன்றைய பாடல் சுந்தர காண்டம்
Never,never tired of listening to this lmmortal masterpiece of Mellisai Maamannargal. Timeless classic forever etched in the memory of all music lovers,brought to life today by our dear QFR team!!! Lots and lots of love and gratitude to you all 🙏🙏🙏🙏🙏
qfrல் சுசீலா அம்மா பாடலென்றால் ஃபரிதா நினைவு தான் வரும். அந்தளவுக்கு பொருத்தமான இனிமையான குரல் வளம்.ஃபரிதா வாழ்வில் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
பரீதா அவர்கள் பாடியவிதம் அருமை, சுசீலா அம்மாவே நேரில் பாடியது போல உள்ளது. இவர்களின் ஒவ்வொருவரின் உழைப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
ஒவ்வொரு பாடலையும் எப்படியெப்படி ரசிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் வர்ணனை மூலம் சொல்லும் வழிமுறைகள், ஒவ்வொரு பாடலின் ஜீவனையும் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன மேடம்! நீங்கள் பரிந்துரைக்கும் கோணத்தில் பாடல்களைக் கேட்டு முடிக்கும் வரை, நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தையும் சூழலையும் சுத்தமாக மறந்து விடுகின்றோம். நன்றிகள் மேடம்! QFR நல்ல ஆத்ம வைத்திய சாலை.!
அற்புதம் அற்புதம். சுசீலா அம்மாவின் சாரீரம் அச்சு அசலாக கொண்டவர் ..மிகவும் சிறப்பு. கணையாழி இங்கே...மணவாளன் அங்கே... என்கிற சொல் உச்சரிப்பு மட்டும் மொட்டையாக நிற்கிறது. அந்த இடம் மட்டும் கொஞ்சம் நெருடலாகத் தெரிகிறது. எங்கள் மனதில் பதிந்துவிட்ட அசல்.... ஒத்திசைக்கும் போது உணர முடிகிறது. ஆயினும் குறையில்லை. அசலின் மீட்டுருவாக்கம் சிறப்பு. பாராட்டுகள்.
நன்றி நன்றி நன்றி நான் அடிக்கடி கேட்கும் மகாகவிஞரின் பாடல்களில் இதுவும் ஒன்று. நம்மால் மறக்கமுடியாத அமுத கானங்களில் இது ஒரு சிகரம். பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.மீண்டும் நன்றிகள் பல.
இந்த, காலம் கடந்து நிற்கும் சுசிலாம்மாவின் பாடலை QFR இல் பாட பரிதாவை தேர்ந்தெடுத்தது மிகச்சிறப்பு. மிக அழகாக, அருமையாக, நேர்த்தியாக ஃபரிதா பாடியுள்ளார்கள்.
சுபாஸ்ரீ மேடம் கம்பராமாயணத்தை கண்ணதாசனை விட விளக்கத்தை எடுத்துச் சொல்லும் போது தான் புரிகிறது மிக சிறப்பாக பாடினார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Superb, haunting melody of yesteryears, soulfully sung by Farida. Listening with headphones, I realised how much Shyam has contributed to the song, both in the interludes and during the singing. Our old film songs seem to be an inexhaustible treasure!
nicely sung by Fareeda matching the original voice emotions..Shyam, Francis group, Venkat, Ranjani and Rangapriya have done extremely well...good treat with PS song on Friday...
பரிதா அவர்களின் இனிமையான குரலுக்கு நான் ரசிகன், அவர்கள் இன்னும் பல்லாயிரம் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். பரிதா அவர்கள் ஆரோக்கியமாகவும் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரிவான்.