காற்று காற்றோடு ,நாளை உன்னோடு காதல் நம்மோடு ,வாழ்க்கை யாரோடு ,... உள்ளம் எனை நீங்காதிறு, நெஞ்சை விட்டு தீண்டாதிறு, காமக் கலை நிறவாதிறு, காதல் வந்தால் அழியாதது, இசையின் நிலை அறியாமலே, கடலின் வழி தெரியாமலே, இமையும் இடம் புரியாமலே, மரணம் எனை நெருங்காமலே ...... சொர்க்கம் வந்து நடை போடுதே சுகமும் என்னோடு நடையாடுதே காலம் வந்து புதிர்போடுதே காதல் இருந்தும் ஏமாற்றுதே ...... உண்மை காதல் ஜெயிக்கும் எனில் எந்தன் காதல் உண்மையில்லையா இரு உள்ளம் ஒன்று சேர்ந்த பின் பெண் உள்ளம் பிரியும் வலி தாங்குமா காற்றைத் தாண்டு மேகத்துடன் காதல் வந்து நெருப்பு ஆகுமா
தீயே தீயே தீயே காதல் தீயே, தீயே தீயே தீயே காம தீயே, தீயே தீயே தீயே கோவத்தியே, விண்மீன்கள் கண்கள் பார்த்து காதல் ஆற்று, பொன் நிலவின் உருவம் பார்த்து காமம் ஏற்று, உன் நினைவில் திரும்ப பார்த்து கோபம் ஊற்று. உலகம் உன்னை மறக்கும் ஆனால் உள்ளம் மறக்காதே, காதல் உன்னை ஏற்கும்,அந்த காமம் இருக்காதே இந்தப் பெண்ணுக்குள் வாழும் அந்த தீயை பார்க்காதே, அந்தக் கண்ணுக்குள் ஆளும் இரு காந்த திசையாலே ..... எல்லையில்லா வானத்தின் உன் அழகைத் தேடி விடு, அந்த அழகை கொண்ட எண்ணத்தால் ஒரு கவிதை எழுதி விடு, காலம் உண்டு கணிகை உண்டு உன் காதல் ஆற்றிடவே, மோதல் கொண்டு உண்டாகும் உன் காதல் வாழ்கவே......