எனக்கு வந்த அருமையான ஒரு பதிவு........ தமிழ்நாடு என்று அண்ணா-தான் பெயர்வைத்தார். _தமிழக முதல்வர். (தினத்தந்தி செய்தி 19-07-2022) (Tamilnadu Day On 18 July 1967) அண்ணா பிறந்தது Born: 15 September 1909, Kanchipuram Died: 3 February 1969, Chennai பாரதியார் பாட்டு எழுதியபோது அண்ணாத்துரைக்கு -4- வயது இருக்கும் என்று நினைக்கிறேன்... மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்தது Born: 11 December 1882, Ettaiyapuram Died: 12 September 1921, Triplicane, Chennai. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே. வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு தமிழ்நாடு என யார் பெயர் வைத்தார்கள் என்று மக்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்…
Sanga ilakkiyathileye tamil nadu nu irukku nu padithirukkirom...dravidam-nu onnu vandhu uruttugirargal ....naanga thelivagittom iya...urttu appadi...😅😅😅😅