இயேசுவை விசுவாசிக்கிற நான் நித்திய தண்டனையிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்பட்டேன் நித்திய ஜீவனை பெற்றுக் கொண்டேன் எனக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை என் ஜீவன் கிறிஸ்துவுடனேகூட பிதாவாகிய தேவனுக்குள் மறைந்திருக்கிறது இயேசுவின் கையிலிருந்தும் பிதாவின் கையிலிருந்தும் ஒருவனாலும் என்னை பரித்துக்கொள்ளவே முடியாது என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னை முற்றும்முடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் ஆமென் அ.டேவிட் மதுரை
இயேசுவை விசுவாசிக்கிற நான் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை என் இயேசுவால் நான் ஒருநாளும் கைவிடப்படுவதில்லை ஒருபோதும் புறம்பே தள்ளப்படுவதில்லை நான் சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த பிதாவின் கரத்தில் இருக்கிறேன் ஆமென் அ.டேவிட் மதுரை
இரட்சிப்பு பற்றி இரு வேறு போதனைகள் திருச்சபையின் ஆரம்பத்தில் இருந்தே போதிக்கப் பட்டு வருகிறது. நாம் இரட்சிப்பை இழந்து விட முடியும் என்று ஒரு போதனையும் "Once saved always saved" என்ற இன்னொரு போதனையும் திருச்சபையை இரு பிரிவுகளாக பிரித்து அவ்வப்போது ஏதாவது ஒரு போதனை திணிக்கப்பட்டு வருகிறது. விசுவாசத்தை துவக்கினவர் கடைசி வரை கொண்டு செல்வார், இடையில் விட்டு விட்டு போய் விட மாட்டார். இது உண்மை. இது வேதாகமம் போதிக்கிற சத்தியமும் கூட. கிறிஸ்துவின் சிலுவை மரணமும், கிருபையும் நம்மை இரட்சித்திருக்கிறது. கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். அதே நேரம் நாம் விசுவாசிக்காமல் பாவ அறிக்கை செய்யாமல் தேவன் நம்மை இரட்சிப்பதில்லை. இங்கு நமது பங்கும் இருக்கிறது. நமது பங்கு என்பது விசுவாசித்து கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வது மட்டுமே. கிறிஸ்து பரலோகம் விட்டு பூமிக்கு வந்து மரித்து உயிர்த்து இரட்சிப்பை இலவசமாக கொடுத்தாலும் பூமியில் இரட்சிக்கப்படாதவர்களே அதிகம். காரணம் அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும், நமது விசுவாசமும் சேர்ந்தது தான் இரட்சிப்பு. ஜெபம், காணிக்கை, உபவாசம் போன்ற கிரியைகள் நம்மை இரட்சிக்காது. இரட்சிப்பை இழந்து விட முடியும் என்று போதிப்பவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. ஏதோ ஒரு சூழலில் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட அநேகர் பின்னர் மறுதலிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதைக் குறித்து அநேக எச்சரிக்கை வசனங்கள் உண்டு. பாவத்திலேயே தொடர்ந்து இரட்சிக்கப்பட்ட அடையாளமே இல்லாமல் சுபாவ மாற்றம் இல்லாமல் வாழ்வது வேதத்திற்கு முரண்பாடான வாழ்க்கை. இதைத் தான் பவுல் எச்சரிக்கையுடன் நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்பை கவனித்துக் கொள்வதில் நமது பங்கும் இருக்கிறது. இதை நமது கிரியை என்று சொல்ல மாட்டேன் கடமை என்று சொல்வேன். இரட்சிப்பை இழந்து விடாதே என்ற அர்த்தத்தில் வேதாகமம் சொல்கிற எச்சரிக்கை வசனங்களை அதே முக்கியத்துவத்துடன் கைக்கொண்டு நடந்தால் பாவம், உலகம், சரீரம், பிசாசு போன்ற எதுவும் நம் இரட்சிப்பை எடுத்துக் கொள்ளாத வகையில் ஜெயம் பெறுவோம். வேதத்தை வாசிக்க வேண்டும், அதின் படி நடக்க வேண்டும், ஆவியானவரின் பெலத்தோடு கிறிஸ்துவின் சுபாவத்தை பெற வேண்டும். இதில் நமது முயற்சி நமது பங்கு அவசியம். தேவன் தம்முடைய பங்கை நிறைவேற்றுவார்.... நாம் ஒத்துழைக்கும் போது. தேவன் பலவந்தமாக யாரையும் இரட்சிப்பது இல்லை ( சிலரைத் தவிர) அதேபோல் நாம் மறுதலிக்கும் போது அல்லது துணிகரமான பாவத்தை செய்யும் போது தடுப்பதும் இல்லை. தேவனுடைய பங்கையும் நம்முடைய பங்கையும் சரியாக தெரிந்து கொள்ள தேவன் நமக்கு கிருபை செய்யட்டும்