1 கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். சங்கீதம் 38:1 2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது, உமது கை என்னை இருத்துகிறது. சங்கீதம் 38:2 3 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. சங்கீதம் 38:3 4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. சங்கீதம் 38:4 5 என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. சங்கீதம் 38:5 6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன், நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். சங்கீதம் 38:6 7 என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியம்இல்லை. சங்கீதம் 38:7 8 நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன், என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். சங்கீதம் 38:8 9 ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது, என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. சங்கீதம் 38:9 10 என் உள்ளம் குழம்பி அலைகிறது, என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று. சங்கீதம் 38:10 Amen Hallelujah
11 என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள், என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். சங்கீதம் 38:11 12 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள், எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். சங்கீதம் 38:12 13 நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன். சங்கீதம் 38:13 14 காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன். சங்கீதம் 38:14 15 கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன், என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர். சங்கீதம் 38:15 16 அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன், என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே. சங்கீதம் 38:16 17 நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன், என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. சங்கீதம் 38:17 18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன். சங்கீதம் 38:18 19 என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். சங்கீதம் 38:19 20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். சங்கீதம் 38:20 21 கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும், என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். சங்கீதம் 38:21 22 என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். சங்கீதம் 38:22 Amen Hallelujah