1.
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை - நான்
அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதையா உம் கிருபை என்னை
நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும் தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன்
உம்மாலே ஒரு மதிலின் மேல்
தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்
2.
தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே
எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை
மிகுந்து விட்டனர்
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர்
படுத்துறங்கி மகிழ்வுடனே
விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர்
என்னை ஆதரிக்கின்றீர்
அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே
ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி
பாதுகாக்குதே
நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
3.
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
26 окт 2022