மிர்த்தார்தின் புத்தகதை பேசிய தங்களின் காணொளி சிறப்பு..💐 யாம் ஓஷோ புத்தகங்கள் அடுத்து விரும்பி படித்த புத்தகம் மிர்த்தாதின் புத்தகம். ஒருவேலை என் குரு ஓஷோவுக்கு பிடித்த நூல் என்றதால் எனக்கு பிடித்ததாக மாறியதோ..! ஆனால் அதன் சாரம் புத்தரும், போதி தர்மரும், ஓஷோவும் சொன்னதே அதனால் என் குருவுக்கு பிடித்தற்கு மேலாகவும் எனக்கு அப்புத்தகம் பிடித்தது. அப்புத்தகத்தின் ஒவ்வொரு வாக்கியமும் ஆன்மிக உள்ளோளி வைரம். விலங்கினங்கள் எல்லாம் தங்களுக்குள் பேசிகொண்டால்,"நம்மைவிட இந்த மனிதர்களுக்கு என்னவோ இருக்கு.. அவர்கள் மாதிரி ஆகனும்" என்று ஆசைபடலாம் ஆனால் மனிதர்கள் சாமியார்களை பார்த்து ஏங்குகிறார்கள் அவர்கள் மாதிரி சித்தி, ஞானம் அடையனும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்பூமியில் இருக்கும் புழு, பூச்சிகூட ஒரு நாள் 'நான்' என்ற ஆணவத்தை கடந்துதான் சென்றாக வேண்டும். அதற்காகவே எல்லாம் இங்கு வினையாற்றபடுகிறது. காலம், காலமற்ற காலவெளியில் காத்திருக்கிறது. யாம் முன்னே இருக்கலாம் நீங்கள் பின்னே இருக்கலாம் ஆனாலும் நீங்க முன்னோக்கியே தள்ளபடுகிறீர்கள். சுயம் அறிய நான் அழிய, அன்பு ஒரு ஊக்கியாகும்( Tricker) #பரபிரம்ம ஆதிமூலம், விருப்பு வெறுபற்ற நிலையை எல்லாம் உள்ளடக்கி இருக்கும் ஆனால் உள்ளாகாத நிலையாகவும் இருக்கும். அது கடிமான தேங்காயின் உள்ளிருக்கும் மென்மையான பூ போன்றது. அந்த பூவை காக்கவே கடினமான ஓடு(நான்) உள்ளது ஆனால் பூ இருப்பதை உணர்ந்து ஓடு உடைக்கபடாமல் உடைக்கபடவேண்டும். வெறுப்பு, வெறுப்பற்ற பூ உணர்ந்து(சாவி) மலரவேண்டும். தங்கள் ஆன்மிக தத்துவார்த்த பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்..💐 :-Rk.Guru
லெபனான் நாடு ஞானிகளின் தோட்டம் என்று சொல்லலாம்.உலக மகா ஞானியும் தீர்க்கதரிசி யுவான் கலீல் ஜிப்ரான் லெபனானைச் சேர்ந்தவர்.சாலமனின் ஞானம் எல்லாம் ஒன்றாகி தழைத்த பூமி அது.மிர்தாதின் புத்தகம் பற்றிய உங்கள் மனதை தொடும் விளக்கம் அருமை ஐயா
ஒஷோ புத்தகங்கள் வாயிலாக மிர்தாத் அறிமுகம் கிடைத்தது. சற்றேறக்குறைய 10 ஆண்டுகள் இந்த புத்தகத்தை தேடினேன். கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக இப்புத்தகம் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியும் வாங்கினேன். பின் தான் புரிந்தது, இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரு வரி கூட புரிந்திருக்க முடியாது. ஓஷோவின் வாசிப்பினால் குறீயீடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. 10 ஆண்டுகள் கடந்த பின் தங்களின் காணொளியால் மறுவாசிப்பு வாய்பு பெற்றதில் மகிழ்ச்சி. நன்றி.
உங்கள் 10 ஆண்டுகால தேடுதல் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் புத்தகம் தன் கையில் கிடைத்ததே ஒரு miracle என்று கவிஞர் புவியரசு குறிப்பிடுகிறார். அதை நானும் உணர்ந்தேன். மிக்கேல் நைமியை முழுதும் உணர அவர் எழுதிய ஆங்கில மூலத்தைப் படிக்க ஆவல். Amazon இல் வாங்க மனம் ஒப்பவில்லை. கடைகளில் தேடிக்கொண்டிருக்கிறேன்.
அய்யா பல வருடங்களுக்கு முன் படித்து இருக்கிறேன் ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை இந்த காணேலி மிகவும் அற்புதமாக புரியும் வகையில் அமைந்துள்ளது 🙏🏾 நன்றிகள் அய்யா
Exam la fail Aanavan teacher a paarthu naan failahividuvean yendru therinthum yeaan sir exam vaithu fail mark poteergal yendru ketpathu polirukirathu. God had tested man whether he obeyed Him. But mankind failed, but God didn't leave him at that state. He himself came to this world as man and died for him in the cross and found a way to save man.
அருமை ஐயா மிக அருமை..... புரிந்து கொள்வதற்கே சிரமமாக இருக்கும் இந்நூலின் சாரங்களை தங்கள் அனுபவத்தின் கீழ் அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்கியமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயா🙏🏻🙏🏻🙏🏻....
மிக அருமையான தருணம். இந்த நூல் குறித்து அறிந்திருந்தேன். ஒரு போதும் வாசிக்கவில்லை. இன்று நல்ல ஒரு அறிமுகம். அந்த இளைஞன் மலையேறும் தருணத்தை விபரித்த உங்கள் வார்த்தைகள் அற்புதம். உடை இழந்து, ஊன்றுகோல் இழந்து அவன் உயர உயரப் போகும் அந்த தத்துவ நிலை குறித்து நீங்கள் பேசிய போது மெய் மறந்துபோனேன். நன்றி. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
மிகவும் அற்புதமான உன்னதமான உயர்வான ஞானம் நிறைந்த நூலைப் பற்றி மிக உயர்ந்த ஞானத்தோடு நீங்கள் கூறியது அந்த ஞானத்தோடு கேட்கும்பொழுது அந்த உன்னதமான உயர்வான நிலையில் கேட்கும் பொழுது நமக்குள் மாற்றத்தை உணர முடிகிறது தங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றியை காணிக்கையாக்குகிறேன், அற்புதம் நன்றி ஐயா, உங்கள் குழு அனைவருக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி ஐயா ஏற்கனவே இந்த புத்தகத்தை படித்துள்ளேன். உங்கள் விளக்கம் மிக எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் படியாக உள்ளது. ரமணரின் 'நான் யார்' என்ற விசாரணைக்கு ஒப்பாக உள்ளது இந்த நான் அறிமுகமோ ( அ ) விளக்கமோ.... வளர்க உங்கள் பணி... 🙏
மிர்தாத்தின் புத்தகம், கீதை இவை மட்டுமல்ல உச்சக்கட்ட மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் எந்தத் தத்துவமும் அனைவருக்குமானதே. கீதையானது அன்பை மட்டுமல்ல, மனிதத்தையும் தாண்டிய புனிதத்தையும் பேசுகிறது. அந்தப் புனித நிலையில் அனைத்து உயிர்கள் மீதும் இயல்பான அன்பு பிறக்கும். 'அன்பே சிவம்' என்றும் கூறலாம். எனினும் அந்த உச்ச நிலை அடையும் வரை அவரவர் இயல்புக்குத் தக்க (சுதர்மம், பூர்வ மற்றும் இந்த ஜென்மப் பதிவுகள், பிரகிருதி, கர்மச் சக்கரம் இவற்றைக் கீதையில் படித்தால் மேலும் தெளிவு பிறக்கும்) கருமங்களைச் செய்தே ஆக வேண்டும் எனக் கீதை வலியுறுத்துகிறது. எனவே தான் கீதை மிகப் practical ஆனது! 😊🙏
அன்பின் தேவன் அன்பின் வார்த்தைகளைக் கொண்டு சகல சிரிஷ்டி களையும் சிரிஸ்டிதார் அவை அனைத்தும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன - பைபிள். தேவனைகிய உன் கர்த்தரிடத்தில் அன்போடும் முழுமைனதோடும் அன்பு கூறுவாயாக, உன்னிடத்தில் நீ அன்புக்குறுவதுபோல் பிறரிடத்தில் அன்புக்கூறுவாயாக, இதுவே ஞானமும் தீர்க்க தரிசனமும் ஆகும் என்று இயேசு கூறினார் -Bible
இந்த புத்தகம் 12 வருடங்களுக்கு முன் எனக்கு பரிச்சயம் ஆனது. முதல் அத்தியாயம் கூட என்னால் தாண்ட முடியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஓஷோ வின் பல புத்தக வாசிப்புக்கு பிறகு இதை புரிந்து கொள்வது ஓரளவுக்கு சாத்தியமாயிற்று. ஓரளவுக்கு மட்டுமே 😅. ஒவ்வோர் முறை படிக்கும் போதும் ஒவ்வோர் அர்த்தம் கிட்டும். அற்புதமான புத்தகம். உங்கள் காணொளியில் இதை மிகவும் வரவேற்கிறேன்.
எல்லோருக்கும் புரிந்து விட்டால் இங்கு தூதர்கள் தேவையில்லை. புரியதவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தூதர்களும் வந்து கொண்டேதான் இருப்பார்கள். இது ஒரு முடிவில்லாத பயணம், காலத்தை போல. வழக்கம் போல தங்கள் விளக்கம் அருமை. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
அன்பின் வலிமையை உணர்த்தும் உன்னதப் படைப்பு. இதன் வார்த்தைகள் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. அருமையான மொழிபெயர்ப்பு. படித்துவிட்டு, பாதியுடன் நிறுத்தியிருந்த புத்தகம். உங்களால் இதோ மீண்டும் தொடர ஆரம்பித்துவிட்டேன். நன்றி!! ஆங்கிலத்தில் வாசிக்கக் காத்திருக்கிறேன்.
சந்தோஷம்.... உங்கள் பணி மிகவும் உயர்ந்த பணி... என்றென்றும் இப்பணி பின்னடைவு இல்லாமல் தொடர வேண்டும்.... உலக மக்கள் அனைவரும் இதைக் கேட்டு அறிவு விழிப்படைய வேண்டும்.... வாழ்த்துக்கள் சந்தோஷம்...
ஓஷோ அவர்களால் மிகச.சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக, குறிப்பிடத்தக்க நூலாக கூறியது இப்புத்தகம். ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்திருக்கிறேன். முதலில் ஆங்கிலத்தில் படித்தேன், புரியவே இல்லை. மீண்டும் படித்தேன் சிறிது புரிந்தது. பின் கவிஞர் புவியரசு அவர்களின் தமிழாக்கத்தைப் படித்தேன். மேலும் கொஞ்சம் புரிந்தது. சுழற்றி சுழற்றி பேசும் ஆங்கில ஆளுமையில் மிரண்டு தமிழில் இந்நூலைப் படித்தேன். அய்யா புவியரசு அவர்களின் தமிழாக்கத்தில் கரைந்து போனேன். இக்காணொலியின் மூலம், முரளி அவர்களின் உரை மூலம் " ஒரு ஆன்மிகத் தேடலின்" உண்மையைத் தெரிந்து கொண்டேன். அருமையான காணொலி, அருமையான புத்தகம்.
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா. மேன்மேலும் தங்கள் சேவை இப்போதிருக்கும் "சரியான நேரத்திற்காண "தேவை" அய்யா. "பிறப்பின் நோக்கரியா" மனிதர்கள்???? ....... " எப்போது "தன்னையறியும் "நுண்ணறிவை" அறியப்போகிறார்கள் என்பதனையும் "காலம்" தான் உணர்க்த வேண்டும். "சின்றின்பமே "வாழ்க்கை என நம்பி நம்பி தன்னை இழந்துக்கொண்டிருக்கிறார்கள். "வள்ளார் வாடியப் (மனித) பயிரைக் கண்டு தான் வாடி தவித்திருப்பார் எனத் தான் எண்ணுகிறோம். "ஓம் சாந்தி" நிலையை அடைவது எக் காலமே ??? "மெளனம்",,,!!!!....... "அனைத்துலகும் இன்பமுற" "வடக்கு மலை"(விஷ்வாசி) யானே" போற்றி போற்றி போற்றி... ஓம் சாந்தி"...
அன்பு வணக்கம் அய்யா பேராசிரியர் அவர்களுக்கு தங்களின் ஆய்வு திறன் தத்துவார்த்ததில் விடை என்பது பிழிந்து எடுத்த அமிர்தம் போல் தருவது புரிதல் எனும் மிகு பலனை பெறுவது எங்களுக்கு சாத்தியமாகிறது மிக்க நன்றி அய்யா 🙏👌
இந்த புத்தகம் அன்பைச் சொல்லும்போது வள்ளற்பெருமானாரையும் துறவைச் சொல்லும்போது சதாசிவப் பிரமேந்திராளையும் தற்க்கத்தை சொல்லும்போது (சும்மாஇரு சொல்லற) அருனகிரிநாதரையும் முன்னெடுத்து செல்கிறது ஞானச் சித்தர்களுக்கு மதம் மொழி இனம் என்பது இல்லை என்கிறது, இந்தக் காணொளியை முன்பு ஒருமுறை கேட்டேன் அதன்பின் ஒருபெண் இந்தபுத்தகம் பற்றிய காணொளியை நேற்றுகேட்டேன் அதன் பின்இன்று தங்கள் கானொழியை மீண்டும் கேட்டேன் - புனிதபுரிதல் என்பது என்சிற்றறிவுக்கு எட்டியதூரம் கொஞ்சம் புரிந்தது... பேராசியருக்கு மிக்க நன்றி🙏
இந்நூலின் ஆசிரியர் கீழ் திசை மெய்யியலில் ஆழ்ந்த பயிற்சியும் செறிவும் நிறைவும் பெற்று உய்த்து , இந்த நூலை வழங்கியுள்ளார் என கருதுகிறோம். அதற்காக தரவுகள் ஏதேனும் உள்ளனவா... தங்களது தெளிவான விரிவுரை மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. ஐயா. வணக்கம்.
பல்கலைக்கழகம் போல் ஒரு காணொளி. பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போன்ற எளிமையான பாடம். உலக தத்துவங்களை இருக்கும் இடத்திலிருந்தே கற்கிறோம்.. தங்கள் தத்துவப் பணி தொடரட்டும். வாழ்த்துகள் சார்.
வெகு நேர்த்தியான பதிவு. தினம் தினம் உங்களின் ஒரு பதிவை பார்கிறேன். நான் அந்த புத்தகத்தை படித்திருந்தால் கூட இவ்வளவு முழுமையாக புரிந்து கொண்டிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி சார்❤
தன்னை மௌனம் ஆக்க கூடிய ஒரே கேள்வி யார் நீ?என்பது தான் என்று கலீல் ஜிப்ரான் மணலும் நுரையும் புத்தகத்தில் கூறியுள்ளதை நினைவு கூர்கிறேன்.அருமையான விமர்சனம்.
அகம் பிரம்மாஸ்மி! தத்துவமசி! ! என்ற கிழக்குத் தத்துவங்களின், பிரதிபலிப்பாகவே இதை நான் பார்க்கிறேன்! உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்ரடீஸ்! "என்னை அருகிலன் இத்தனை காலமும் !என்னை அறிந்த பின், ஏதும் அருகிலேன்!"என்கிறார் திருமூலர்!
அருமை அருமை uni ஒன்று verse பல பல.., பலபல ஒன்றிணைந்த ஒன்று என்று விளங்கிக் கொள்ளும் போதும் உண்மை உணர்வுக்கு உதவும் தங்களின் இந்த உரை சிறப்பாக உள்ளது நானும் பல முறை படித்தும் விளங்காதவை விளங்கிக்கொள்ள உதவியாக இருந்தது நன்றிகள் தங்களின் இந்த பணிதொடற வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
மிக மிக அருமையாக மிக எளிமையாக இதை புரிதலோடு இவ்வளவு எளிமையாக புரிய வைக்க முடியும் என்பது கூட எனக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது அவ்வளவு தெளிவாக அவ்வளவு எளிமையாக கிட்டத்தட்ட தமிழ்பித்தன் கடவுள் என்ன கூறினாரோ அந்த நிலையில் சிறப்பாக விளங்கியது நன்றி என்ற வார்த்தையில் அவ்வளவு சுலபமாக கூறிவிட முடியாது ஏனென்றால் அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் கூறுவர் மறத்திற்கும் அஃதே துணை என்ற திருவள்ளுவர் குறளும் கிணங்க என்ன அன்பு நம்மளை கட்டிப் போட்டுவிடும் என்று கூறுவார்கள் ஆனால் அது நம்மளை விடுவிப்பதற்கு அன்புதான் துணையாக இருக்கிறது என்ற கருத்து மிக அருமையாக இருந்தது இன்னும் நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச்சுடர் வானில் செலுத்தும் நானே ஆன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதற் ஜோதி நானே காமநோய் விட்டு நீர் கருத்துளே உணர்ந்தபின் ஊனமற்ற காயமாய் இருப்பன் நான் கருக் கொள்ளாது குழியிலே காலில்லாத கண்ணிலே நெருப்பை திறந்தபின் நீயும் நானும் மனிதனும் கடவளாகளாம் மிக மிக அருமை ஐயா கருப்பையா சித்தர் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
அருமையான விளக்கம்…எனினும் இதுபோன்ற தத்துவங்கள் தமிழில் நம் முன்னோர்களால் அதிகம் பேசப்பட்டே வந்திருக்கின்றன… குறிப்பாக அன்பின் அவசியத்தை வள்ளலார் அதிகம் விளக்கியுள்ளார்… மிக அருமையான பதிவு…
நான் என்றால் ஆன்மா! பாரதி பாடிய அக்னி குஞ்சி ஒன்று கண்டேன் பாடலில், தழல் வீரத்திற்கு குஞ்சு என்று மூப்பு என்றும் உண்டோ! ஆன்மா வின் சக்திக்கு இறை என்றும் மனிதன் என்று வித்தியாசம் இல்லை என்று கூறியிருக்கிறார் பாரதி! அருமை ஐயா!
வணக்கம்.தங்களின்சாக்ரடீஸ் சேனலை பார்த்துக் கொண்டு வருகின்றேன். இந்த மிர்தாதின் புத்தகம் அருமை. எமது குருவின் உயிரே கடவுள் என்ற கோட்பாட்டை இதில் காண்கிறேன். நன்றி.🙏🙏🙏
அனைவரும் ஞானிகள்தான், கடவுள்தான், பிரபஞ்ச ஞான உணர்வாற்றல்தான்.. கட்டமைப்பு ஆளுமை ஆற்றல்தான்.. அதாவது சிவமும் சக்தியும்தான்.. ஒரே உணர்வின் பல்வேறு நிலைகளே..
Excellent Sir.... Your video's provides me a sort of unexplainable feel I am thinking, listening Your speech itself a mystical journey to me. Each video's I do listen many times... Thanks is a simple word for your work.
பழைய ஏற்பாட்டில் வரும் நோவாவின் கப்பல் கட்டும் கதையும் இந்துப் புராணத்தில் உள்ள மச்ச புராணமும் ஒன்றாக இருக்கின்றதே! மிர்டாட்டின் ஆரம்பக் கதை மச்சபுராணத்தை நினைவுபடுத்துகின்றது. நீங்கள் 'கீழைத்தேச தத்துவங்கள்' மீராட்டின் கதையில் இருப்பதாக கூறியது மேலும் பல சந்தேகங்களையும் ஆச்சரியத்தையும் தருகின்றது. இலங்கையில் இருந்து என் வாழ்த்துக்கள்.
ஐயா, ஏழு திரைகள் நீங்கும் பட்சத்தில் அனைத்து பேதங்களும் விலகி உள்ளொளியான அருட்ஜோதியை கண்டுணர்ந்து அருட்பெருஞ்ஜோதி நிலை பதத்தை அடையலாம் என பூமத்திய ரேகையில் சூரியனும் சந்திரனும் நேர்க்கோட்டில் வரும் "தைப்பூசம்" நந்நாளில் சிதம்பரம் இராமலிங்கம் என்று கையொப்பம் இடும் வழக்கத்தில் இருந்த பேரருள் அடைந்து,அவரே திருவருட்பிரகாச வள்ளலார் என அடியார்களால் அழைக்கப்படுகிறது,அண்ணார் அருளிய "திருஅருட்பா பாடல்/உரைநடை" இவற்றில் அனைத்து தத்துவங்களும் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளார், அதற்கு இவ்விழியத்தில் தாங்கள் இதுவரை ஆன்மீகம் தத்துவங்கள் குறித்து விளக்க முயன்ற பல்வேறு நிலைகளுக்கு திருஅருட்பாவில் உள்ள உதாரணங்களை இங்கே அடியேன் குறிப்பிட கடமைப்படுகிறோம்... *அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அனுவுள் அமைந்த பேரொளியே அன்புருவாம் பரமசிவமே... *எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே தேத்து... *இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் என் கோவே துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிக் கடந்து சும்மா இருக்கும் சுகம்... *சாகாக்கலை வேகாக்கால் போகாப்புனல் (சாவேபோ).... *பசித்திரு தனித்திரு விழித்திரு (பதவி)... *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு... *ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்... இப்படியாக விவரிக்க விரிக்க விரியும் , இறுதியாக "கொடிக்கட்டி பேருபதேசம்"(உரைநடை) செய்துவிட்டு திருக்காப்பிட்டு கொண்டு இந்த உலகையே திருத்தி ஆட்சி செய்து வருகிறார் என்பதற்கு உலகில் தற்போது நிகழ்ந்து வரும் பல்வேறு செயல்பாடுகளை ஒப்பிட்டு உணரலாம்... ஆகவே தங்களின் வள்ளலார் பற்றிய மீண்டும் திரனாய்வு செய்து உட்கிரகித்து கொண்டு ஒரு தெளிவான விழியத்தை வழங்குவீர்கள் என அன்பர்கள் பால் உலக உயிர்கள் மீதுள்ள அக்கரையில் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை நிமித்தமாக விண்ணப்பிக்கிறோம்...!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!!! என்றும் அன்புடன்... அடியேன்...!!!
“சோபியின் உலகம்” என்பதையும் பொழிப்புரை செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் அது மேற்கத்தேய மெய்யியலை நாவல் வடிவத்தில் எளிமையாக பயணிக்கிறது.ஆனால் அதில் பின்-காலனியம் இல்லை என்று நினைக்கிறேன்.இதையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
Thankyou very much sir, for your speech on this book. I tried to buy this book online but couldn't get it. Your speech has given a wonderful insight about this book. I will certainly get hold of this book and read it.
Thank you for your discourse. Very good book. Philosophical book. In Tamil one kavithai is there ' God appeared before. He smiled, I also smiled. Silence. He had gone'. One more kavithai. 'We are breathing the air that others exhaled . ' In the age 62 I would not be able to read this book, your presentation about the book is a blessing. Simple discourse. 13-11-22.Any establishment in the course of time get stratified and needs reformation, so as the that Madam (monastery) 16-11-22.
@@angayarkannivenkataraman2033I think you have greatly misunderstood the first kavithai, "God appeared, God smiled, He smiled, now silence, God had gone." In absolute silence, self realisation happens, God gave him the truth in silence. Now God had gone because he realised that him and god are not two different beings, they are one and the same.