A romantic soft melody from television series Thendral. Enjoy Watching and Subscribe to our channel for more such offerings!
மல்லிகை பந்தல் மலரும் தென்றல்
வாசனை தாங்கிவரும் -- சில
உள்ளம் கந்தல் அழகிய அன்பில்
கற்கள் வீசிடும்.. (மல்லிகை)
சில சிறகுகள் தவிக்கிறதே..
பறக்காமலே..
பல உறவுகள் இருக்கிறதே
திருந்தாமலே.. (மல்லிகை)
சந்திரன் சிலநாள் தேய்வது உண்டு
குறையே சொல்லாதே.. சில
சொந்தங்கள் கூட சந்திரன் தானே
குற்றம் காணாதே.. (சந்திரன்)
மணல் குன்றை போலத்தான்..
மனம் உள்ளது.. உயிர் தென்றல்
தீண்டத்தான் முகம் மாறுது.. (சந்திரன்)
வார்த்தைகள் பூவானால் வீடே தோட்டம்.
வாழ்க்கையில் நாளும் தேரோட்டம்...
வார்த்தைகள் தீயானால் புகையின் மூட்டம்
கண்களில் ஓடும் நீரோட்டம்..
புன்னகைதனை விற்று புலம்பலை வாங்காதே..
இலங்கை தீவைப்போல் இன்னலில் மூழ்காதே..
சேலையில் சேறுபட்டால் தண்ணீரா இல்லை..
சூழ்நிலை மாறுபட்டால் புதுவழியா இல்லை.. (சந்திரன்)
வேங்கை வெள்ளாடு வாழும் வீடு
வேதனைதானே பண்பாடு...
கொட்டித்தீராமல் வேகும் போது..
அழுகைதானே வாய்பாடு..
வறட்சியின் காலத்தில் வாராத காவேரி
மழைநாள் வெள்ளத்தில் வந்தென்ன கரைமீறி..
நேரத்தில் வாய் திறந்து எதையும் பேசிவிடு
ஓரத்தில் மறைத்து வைத்தால் வளரும் தகராறு
கவலைக்கு மருந்து கல்வியில் இருக்கு.
கலங்காதே துணிந்திடு...
Face Book: / thendral
Subscribe www.youtube.com...
Channel / vikatantv
ShowPage www.youtube.com...
15 сен 2024