பெண் : வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே பெண் : கருணையின் திரு முகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே கருணையின் திரு முகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே பெண் : பெருகிய வலிவோடு வருகவே பெருகிய வலிவோடு வருகவே பெரும்பொருள் பரம்பொருள் வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே பெண் : தான் நினைத்தபடி ஆடும் நபரின் ஆணவத்து நிலை அருகவே வேல் எடுத்த இரு தோள் எடுத்தபடி நான் நினைத்த இடம் வருகவே பெண் : காரெடுத்த குழல் மேவு சக்தி தன்னை பூ முடிப்பதென்ன வருகவே காத்திருக்கும் விழி கோடி கோடி அவை பார்த்திருக்க இவள் வருகவே பெண் : இறைவா என் தலைவா வருகவே வருகவே பெண் : மனிதர் ஆணவம் அழியவே நமது நாடகம் முடியவே அர்த்த நாரி என இணையவே அறிய சக்தியோடு வருகவே