1962-67 ஆம் ஆண்டுகளில் தஞ்சை பிளேக் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி கல்வி பயின்றேன்.தஞ்சாவூர் மானம்புச்சாவடி தூய பேதுரு ஆலயம் அருகில் சாஸ்திரியார் அவர்கள் இல்லம் உள்ளது. அனுதினமும் காலை 7மணி ஆராதனைக்காக இல்லத்திலிருந்து வீதியில் வயலின் வாசித்தபடி சாஸ்திரியார் வெள்ளை அங்கி தலைப்பாகை அணிந்து குடும்பத்துடன் அணியாக ஆலயம் செல்வது வழக்கம். சுமார் 200 மீட்டர் தூரம் இந்த கீர்த்தனைகளை பாடியபடி சாஸ்திரியார் குடும்பத்தினருடன் வருவது கண்கொள்ளா காட்சி.❤🎉