சினிமாவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் மக்கள் நலனுக்காக பயன்படுத்திய ஒரே நடிகர் என் தலைவர் எம்ஜிஆர் வாழ்க எம் ஜி ஆரின் புகழ் ✍️ இப்படிக்கு எம்ஜிஆர்தாசன்
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... எவ்வளவு அருமையான பாடல்... ஜெய் ஹிந்த்... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேனும் வெளி நாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...
டைட்டில் முடிந்ததும் இந்தப் பாடல் வருமாறு படம் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலை அனைவரும் கேட்க வேண்டும். எனது ரசிகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது. பத்து நிமிடம் கழித்து வந்தால் நன்றாக இருக்கும் என்று எம் ஜி ஆர் கூறியிருக்கிறார். படம் முழுவதும் முடிந்த பிறகு என்ன செய்ய முடியும் என்று தேவர் கேட்க ஏதாவது செய்யுங்கள் என்றாராம் எம் ஜி ஆர். அதன் பின்னர் பத்து நிமிடத்திற்கு நகரக்கூடிய வகையில் காட்சி அமைக்கப்பட்டது. இதை சொன்னவர் சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர் தாஸ். தனது ரசிகன் எந்த வகையிலும் ஏமாறக்கூடாது என்பது தான் அவரது குணம்.
மிகவும் சரி, இன்னிக்கு இல்ல, இந்த தலைமுறை பாவம், பள்ளி யும் சரியில்லை, பாடம் சொல்லும் தலைவனும் இல்லை, ஆனால் ஆட்சியாளர்களை குறை சொல்லுவதும் தவறு, அவர்களால் முடிந்த நல்லதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள், அம்மாவும் இல்லை, கலைஞர் ஐயாவும் இல்லை, தலைமை காத்திருக்கிறது,தமிழ்நாடும் ,நாட்டு மக்களும், நான் எந்த கட்சியை சேர்ந்தவளும் இல்லை, நானும் காத்திருக்கிறேன்
Hats off to MGR Avl.. He had brought out all the occupations/ Profession in all his movies.. Immortal people and their dedication to their work is marvellous .
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி .... கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி ... முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன் விவசாயி விவசாயி ... விவசாயி .... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி .... விவசாயி .... கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெறுகாதோ சாகுபடி விவசாயி .... விவசாயி .... இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி விவசாயி .... விவசாயி .... A.மருதகாசி, K.V. மகாதேவன், TMS, விவசாயி 1967