நண்பரே வணக்கம். பாடலும் விளக்கமும் அருமை. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால்... "அள்ளிச் செருகிய கொண்டையிலே "இது மதுரை மாவட்ட (முக்குலத்தோர்) மக்களுக்கே சொந்தமான தலை அலங்காரம். மற்ற மாவட்டங்களில் அல்லி செருகுவது கிடையாது என்பது அடியேனின் கருத்து.நன்றி.
வணக்கம் ஐயா... சிறப்பான தகவல் சொன்னீர்கள்.. (உண்மையாகவே இந்த தகவல் எனக்கு தெரியாது..🙏) நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம்.. தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஐயா...🙏🙏
பாரதி இலக்கியப் பேரவையின் குழுவினர் பட்டிமன்றத்தின் தலைப்பும் பேச்சாளர் பெருமக்கள் உரைகளும் நடுவரின் துள்ளலான பேச்சும் தீர்ப்பும் அருமை👌👏🤝 மேலும் சிறப்பாக பட்டிமன்றம் வெளிவர உதவிய நண்பர் மா.முருகன் அவர்களும் தொகுத்து வழங்கிய திருமதி சூரிய முருகன் அவர்களும் தொழில்நுட்ப ஒலிபரப்பு பணிகளை சரியாக சிறப்பாக செய்த சகோதரர் மாதவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் 👏🤝👌🙏🏽👍
பாரதி இலக்கிய பேரவையின் மற்றும் ஒரு சிறப்பான படைப்பு... சிறப்பாக பேசிய வாதங்கள் அருமையான கருத்துக்கள் தீர்ப்பு..... ஏற்றமிகு எடிட்டிங்... ஒலி அமைப்பு ஒளிர்கிறது... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை ❤❤❤
முருகன் ஐயா மிக சிறப்பு🎉 பட்டிமன்றம் தொடக்கம் முதல் இறுதிவரை தொகுத்த விதம் (editing) மிக அழகாக வந்திருக்கிறது. ஒவ்வொருவருடைய பேச்சும் மிக சிறப்பாக இருக்கிறது அனைத்து பேச்சாளர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்...❤
பாடலின் சிறப்புகளை அழகுற எடுத்துச் சொல்லி பாடலின் பெருமையை மேலும் உயர்த்தியதற்கு நன்றி திரு.முருகன் அவர்களே. பாடலுக்கு அசத்தலான மெட்டுடன் ரீங்காரமிடும் இடையிசையோடு இசை அமைத்த M.B.ஸ்ரீனிவாசன் அவர்களையும், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் தன் காந்தக் குரலால் பாடி மயக்கிய TMS ஐயா அவர்களைப் பற்றியும் குறிப்பிட்டு பாராட்டியிருந்தால் தங்கள் உரை மேலும் சிறப்பாக இருந்து முழுமை பெற்றிருக்கும்.
இந்தப் பாடலை எனக்கு அறிமுகப் படுத்தியதே தாங்கள் தான் ஐயா..😀😀 தாங்கள் பாடியதை கேட்ட பின்பு தான் இந்த சுவை அறிந்தேன்.. அதற்கு விளக்கம் தர வேண்டும் என்று முடிவு செய்தேன் ஐயா..🙏 தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஐயா..🙏🙏🌷🌷 இசையமைப்பாளரையும் பாடகரையும் பாராட்ட வேண்டியதும் என் கடமை என்பதை உணர்ந்து கொண்டேன் ஐயா...🙏🙏
ஆமாம் Sir.. பல பாடல்களை நாம் கவனிக்க தவறி,ரசிக்க தவறிவிட்டோம்.. கவனித்துப் பார்த்தால் நமக்கு ஆனந்த தரக்கூடிய வகையில் கற்பனைகளும் உவமைகளும் நிறைந்து கிடைக்கிறது Sir.. தங்கள் பினூட்டத்திற்கு மிகவும் நன்றி Sir...🙏🙏🌷
ஒளிக்குள்ளும் இருள்(கருப்பு ) உள்ளது அதனால் இந்த பாடல்களுக்கு தாங்கள் விமர்சனம் அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 👏🤝 தொடரட்டும் உங்கள் தமிழ் பணி 🙏🏽👍👌
கருப்பு என்றாலே அழகு தான் என்பதற்கு மற்றும் ஒரு அழகான பாடல் என்று சொல்லி தேனாக இனிக்கும் பாடல் வரிகள் சிறப்பு சொல்லி... அழகு பட்டியல் பற்றி சிந்திக்க வைத்த கருத்துக்கள்...🎉🎉
உழைத்த மேனி கருத்திருக்கும், பேச்சு ஒவ்வொன்றும் தேனாய் இனித்திருக்கும்! சின்ன சின்ன மூக்குத்தி பாடலுக்கு அருமை விளக்கம் அய்யா..... தங்கள் தமிழ் இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துகள்.🌸🙏
பட்டிமன்றத்தில் இரு அணியினரின் பேச்சும் நடுவர் அய்யா கருத்துக்களின் வீச்சும் பாரதி இலக்கியப் பேரவை கொடுக்கும் தலைப்புக்கும் பட்டிமன்றத்திற்கும் முறையே பெருமையும் வலுவும் சேர்க்கிறது. வாழ்த்துகள் பேச்சாளர்கள் அனைவருக்கும்.🌸🌸🙏
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-l6nUkWi-fG8.htmlsi=e8Gif9wWGYB5DmaE தாலாட்டில் வீரமும் வேண்டும் என்று, கவிஞர் கூறியுள்ளார். அந்த பாடல் இங்கு உங்களுக்காக. 🙏
பாரதி இலக்கிய பேரவை வழங்கி வரும் பட்டிமன்றம் மிகமிக சிறப்பு சரியான வாதங்கள் எதிர் வாதங்களும் அணிக்கு வலு சேர்க்கிறது.... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை ❤❤❤❤
கோகுலத்தில் ஒருநாள் பாடலை இசையரசியின் இனிய குரலில் கேட்டு மகிழ்ந்ததுண்டு. ஆனால் சுவையான விளக்கம் பெற்றது இப்போதுதான், உங்கள் உரையில். மிக்க நன்றி முருகன் சார். நாம் மிகுந்த அன்பு வைத்திருப்பவர்களின் சேட்டைகளை சகித்துக்கொள்வோம் என்ற யதார்த்தத்தை இடையில் கூறியது சிறப்பு.
2) பெண் - மகளே உன்னை தேடி நின்றேனே மங்கை - இந்த மங்கல மங்கை ஆண் - வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை - உன் மழலையின் தந்தை. (இங்கு கவிஞர் என்ன சொல்ல வருகிறார்..!? ஆணும் பெண்ணும் சேர்ந்து மழலை செல்வத்திற்காக காத்து உள்ளார்கள் என சொல்லுகிறார்) ஆண் - நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.. பெண் - அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே... (இந்தப் பாடலில் அனைத்து வரிகளையும் விட்டுவிட்டு, ஏனைய எல்லோரும் இந்த வரிகளை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். அவர்கள் என்னமோ பெரிய சாதனையை புரிந்து விட்டது போல... இதை பெரிதாக வர்ணிப்பார்கள்....!) அடுத்து....? நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகளுக்கு (குயிலே என்று) அடுத்த பதிவில் சந்திப்போம்.🙏
நண்பரே, இந்த பாடலில் முதலில் வரும் ஹம்மிங், மற்றும் சிவாஜி கொடுக்கும் விசில், இவை அனைத்தும் எம் எஸ் வி அவர்களுக்கு சொந்தம். அதே போல் அவர் விடும் சிகரெட் புகை, ஸ்டைல் இவை அனைத்தும் மிக அருமை. இவைகளுக்கு சொந்தக்காரர் பீம்சிங். எவ்வளவு அருமையாக இருந்தாலும் இங்கு அது நமக்கு தேவையில்லை ஒதுக்கி வைப்போம். சரி நாம் கண்ணதாசன் அவர்களுக்கு வருவோம். "நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" "நெய்யும் கானகத்தில் கை காட்டும் மானே" "தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே" "தெம்மாங்கு பூந் தமிழே" "தென் நாதன் குலமகளே" இது பல்லவியில் வரும் வரிகள். இந்த வரிகளுக்கு ஏனோ இதுவரை யாருமே விளக்கம் தரவில்லை. (நீங்கள் உள்பட) பட்டிமன்ற பேச்சாளர்கள் ஆகட்டும்..! இல்லை நடுவர்கள் ஆகட்டும்..! யாருமே விளக்கம் கொடுத்ததாக தெரியவில்லை. அந்த ஒற்றை சரணத்தை மட்டுமே...!? அனைவரும் எடுத்துக் கொண்டு விளக்கம் தருகிறார்கள்....! அது எந்த வரிகள்....? (அடுத்த பதிவில் சந்திப்போம்)🙏
"தாய்க்கு நீ மகனில்லை," "தம்பிக்கு அண்ணனில்லை" ஊர் பழி ஏற்றாயடா கர்ணா"நானும் உன் பழி கொண்டேனடா " என்னுடைய அறிவுக்கு எட்டியவரை.... ஊரில் இருப்பவர்கள் அனைவரும் உன் மீது பழி சுமத்தினார்கள், உன்னுடைய பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் நீ கலங்காதே, என்று கடைசி கட்டத்தில் கண்ணன் கர்ணனுக்கு ஆறுதல் கூறுகிறான். மேலும், "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா" வஞ்சகன் கண்ணனடா" நீ மிக நல்லவன், வஞ்சகர் தனமாக கண்ணன் உன்னை வீழ்த்தி விட்டான் என்று கர்ணன் கூறுகிறார். நன்றி 🙏
வணக்கம் ஐயா.... "நானும் உன் பழி கொண்டேனடா..." நானும் என்கிற வார்த்தை யின் பொருள் தான் நான் விளக்கமாக கூறினேன்.. கவியரசர் பற்றிய என்னுடைய பதிவுகள் வெறும் விமர்சனங்கள் அல்ல.. நான் செய்வது திறனாய்வு.. கவியரசர் உலகின் தலை சிறந்த கவிஞர் அவரின் கவிதைகளை பாடல்களை திறனாய்வு செய்தால் மட்டுமே.. கவியரசரின் கவிதிறன் வெளிப்படும்.. அதை தான் நானும் செய்கிறேன் இலக்கியத்தில் நான் பெற்ற முதுகலை பட்டமும் இலக்கியத்தை உயிருக்குயிராக உணர்வு பூர்வமாக நேசித்து நான் படித்ததுவுமே இந்த திறனாய்விற்கு காரணம்.. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி ஐயா.. விரைவில் தொலைக்காட்சியில் தோன்றுவேன்.. நாம் விரைவில் கண்டிப்பாக சந்திப்போம் ஐயா..🙏🙏
நடுவரின் தீர்ப்பும், அவர் பாடிய பாங்கும் மிக நன்றாகவே இருந்தது. வாழ்த்துக்கள். தாலாட்டு என்ற தீர்ப்பு தந்துள்ளீர்கள். அதில் காதல் தத்துவம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட நீங்கள், அவரது ஒரு பாடலில் வீரமும் கலந்துள்ளது. அதைக் குறிப்பிட தவறிவிட்டீர்கள். மகாதேவி என்ற திரைப்படத்தில்மானம் ஒன்றே பெரிதென தொண்டு வாழ்வது நமது சமுதாயம்"என்று பல்லவியில் ஆரம்பித்து,(என் மகனுக்கு வீர பாட்டு பாடு என்று நாயகி கூறியவுடன்,) அபிமன்யு போர்க்களத்தில் இறந்து விட்டான்"அந்த அற்புத வரிகளை வரிசைப்படுத்தி கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 🙏👏 நன்றி.
மிக மிக நன்றி ஐயா.. தாலாட்டு பாடல்களில் உள்ள "வீரத்தை விட்டு விட்டேனே.. சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி ஐயா... அடுத்தடுத்த பட்டிமன்றங்களில் சரி செய்து கொள்கிறோம்.. தங்களின் மேலான கருத்துகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எங்கள் அணிக்கு கூடுதலாக பலம் சேர்க்கும் நன்றி ஐயா..🙏
நண்பரே வணக்கம். "கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே" அதாவது கனவில், அல்லது கற்பனையில் கண்ணனை நினைத்து அவள் பாடலாம் அல்லவா... இதில் ஒன்றும் பெரிய குற்றம் இருப்பதாக தெரியவில்லை. மேலும், பொய் சொல்வதற்கு புலவர்களுக்கு என்றுமே உரிமையுண்டு. எல்லா புலவர்களும் பொய் சொல்லக் கூடியவர்கள் தான். இதைத்தான் நாம் அன்றிலிருந்து இன்றுவரை ஆமோதித்து ரசித்துக் கொண்டு உள்ளோம். ஒரு பாடலில் கவிஞர் கூட கூறியுள்ளார். பாலை நீராக பயன்படுத்துவோம், பனிபோல் விதை நடுவோம், மாம்பழத்தை சாறு கொண்டு மண்ணுக்கு உரமிடுவோம், தேன் பாயும் பிறகு அங்கு நெல் விளையும் என்று ஊரின் பெருமையை கூறுவார். அதையும் நாம் ஏற்றோம் ரசித்தோம். இதுபோல் எத்தனையோ பாடல்கள் உண்டு. நன்றி 🙏
😀😀😀😀😀 தங்களது கருத்திற்கு மிகவும் நன்றி ஐயா.... என் Cell NO 9080320597 உங்கள் விளக்கத்தின் கேட்க மிகுந்த ஆவலாக உள்ளேன் எனக்கு You tube link தயவு செய்து அனுப்புங்கள் ஐயா....🙏
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" கலையெல்லாம் கண்கள் சிந்தும் கலையாகுமா" சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா" சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா.." (இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்) "கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்" கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்" திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற பழமொழியும் உண்டு. அப்பேர்ப்பட்ட திருவாசகத்தை தமிழ் தந்துள்ளது. அதுபோல் உனது கொஞ்சிடும் வாய்மொழி கேட்டால்... கல்லும் கனியாகும் என்றும் பொருள் கொள்ளலாம் (கல் இதயம் கொண்ட மனிதன் கூட மென்மையாக மாறி விடுவான்) "உண்டென்று சொல்வது உந்தன் கண் அல்லவா வண்ண கண்ணல்லவா..""இல்லை என்று சொல்வது உந்தன் இடை அல்லவா மின்னல் இடை அல்லவா" உண்டு என்று சொல்லும் போது தலையை மேலும் கீழும் ஆட்டுகிறோம். அது போல் உனது கண்கள் மேலும் கீழும் உண்டு என்று சொல்கிறது. இல்லை என்று நாம் சொல்லும்போது தலை பக்கவாட்டில் திரும்பி திரும்பி வருகிறது. அது இல்லை என்பது போல உனது இடையும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திரும்பி திரும்பி செல்கின்றன என்று உவமை கூறுகிறார். மேலும், கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா" காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா" அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி"சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி" கம்பன் வர்ணித்த சீதை உனது அழகின் முன் அவள் ஒரு தாய். காளிதாசன் வர்ணித்த சகுந்தலை அழகில் உனது மகள். அம்பிகாபதி அமராவதியை நினைத்து கவிதை புனைந்தான்.... இவர்கள் எல்லோரும் அப்போது இருந்தார்கள். இப்போது யாரும் இல்லாத காரணத்தால்...! இனிமேல் புலவர்கள் ஒரு பெண்ணை பற்றி பாட வேண்டும் என்றால்...! உனது அழகை பற்றியே பாட வேண்டும். அவர்களுக்கு இனிமேல் அதுதான் கதி என்று கண்ணதாசன் கூறுகிறார். நன்றி 🙏
நேரில் சந்திக்கும் போது நிறைய பேசுவோம் ஐயா.. நான் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிகின்றேன்.. திருப்பரங்குன்றம் என்னுடைய சொந்த ஊர்... பட்டிமன்றம் தனிச்சொற்பொழிவு ஆன்மிக சொற்பொழிவு செய்து வருகிறேன்.. மிக விரைவில் தொலைக்காட்சியில் தோன்ற இருக்கிறேன்.. தங்களை சந்திக்கும் போது, பேசுவோம்....🙏
நண்பரே வணக்கம். தங்களது பேச்சாற்றல் மிக அற்புதமாக உள்ளது. அதற்காக உண்மையை மறைத்து, எதை எதையோ எடுத்து வந்து இங்கு வந்து புகுத்துகிறீர். ஒரு வகையில் அந்த திறமையை பாராட்டத்தான் வேண்டும். இருப்பினும் நீங்கள் கூறுவது உண்மை அல்ல. அடியேனும் கண்ணதாசனின் ரசிகன் என்பதால்... இதை மறுக்க வேண்டிய சூழ்நிலை. பாடலும் பாடலின் விளக்கமும் அடுத்த பதிவில். (தற்போது இசையமைப்பாளர் அமுதா பாரதி, பாடல்கள் நிறைய கொடுத்துக்கொண்டு உள்ளார். அதற்கு அடியேனின் விமர்சனமும் தொடர்ந்து கொண்டே உள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால்.. அதையும் சற்று பார்க்கவும்.) குறிப்பாக, நலந்தானா நலந்தானா, கலைமகள் கைப்பொருளே, அம்மம்மா காற்று வந்து, இதுபோன்று நிறைய பாடல்களுக்கு அடியேனின் விமர்சனமும் உள்ளது. 🙏
இந்தப் பாடலை நான் குழந்தைப் பருவம் முதல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் இப்பவும் கேட்க தான் செய்கிறேன் ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை இன்று தான் தெரிந்து கொண்டேன்
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே சரியாக விளங்கவில்லை. ஒருமுறைக்கு இருமுறை கேட்டேன் ஏதும் சரியாக விளங்கவில்லை. கண்ணதாசன் எந்த இடத்தில் தவறுகிறார் என்பதை சற்று தெளிவாக கூறவும். எந்த இடத்தில் அதுவும் யாரிடத்தில் தவறை ஒப்புக்கொண்டார் அதையும் தெளிவாக கூறவும். ஆம் தங்கத்திலும் ஒரு குறையுண்டு. செம்பு சேர்க்கப்படாமல் தங்கம் ஆபரணமாக மாறுவதில்லை. (அப்படிப்பட்ட தங்கத்திலும் ஒரு குறை உண்டு என்பதை நினைவு கூற்க)
வணக்கம் ஐயா... நான் மதுரையில் இருக்கின்றேன்.. நாம் கண்டிப்பாக நேரில் சந்திக்கும் போது இதுபற்றி விரிவாக பேசுவோம்..ஐயா ஒவ்வொரு பாடலாக கேளுங்கள்.. சந்தேகங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக நாம் நேரில சந்திக்கும் போது நான் படித்த என்னிடம் உள்ள ஆதாரங்களை தங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.. இன்று 24.06.24 கவியரசர் பிறந்தநாள்.. தொடர்ச்சியாக விமர்சனம் செய்வதற்கு நன்றி ஐயா..🙏
நண்பரே வணக்கம். இன்று தான் உங்களது பதிவை முதன்முறையாக பார்க்கிறேன். இந்த பாடலிலும் நிறைய கேள்விகள்... உள்ளன. விரைவில் சந்திப்போம். (கல்லெல்லாம் மாணிக்க, என்ற பாடலும், இந்தப் பாடல் மட்டுமே கேட்டுள்ளேன். மற்ற பாடல்களைக் கேட்டுவிட்டு, சந்தேகம் இருப்பின்.. மீண்டும் சந்திப்போம்) 🙏
நண்பரே வணக்கம். தங்களின் கருத்துக்கு நான் இங்கு மாறுபடுகிறேன். சீதையையும், மேனகையையும ஒப்பிடும் போது அடுத்து வருகின்ற அமராவதி பற்றி நீங்கள் ஏன் ஏதும் கூறவில்லை.....? (நேரம் கிடைக்கும் போது, இந்த முழு பாடலோடு மீண்டும் விரைவில் வருகிறேன். சந்திப்போம் நன்றி.)🙏
நண்பரே என அழைத்து என்னை தங்கள் நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு மிகவும் நன்றி.... என்னைப் போலவே தாங்களும் கவியரசரின் ரசிகர்களின் ஒருவன் என்றே நினைக்கிறேன்... கவியரசரின் ரசிகர் எனக்கு நட்பாக கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி... என் Cell NO 9080320597 தாங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் நன்றி....🙏🙏
🙏🏽பட்டிமன்றம் தலைப்பு மிக சிறப்பு... பேச்சாளர்கள் நடுவர் பேச்சுக்கள் சிறப்பு அதிலும் எடிட்டிங் அற்புதம்... ஆனந்தம்.... வெளிநாட்டு சுற்றுலா, உள்நாட்டு சுற்றுலா சென்று வந்த பயணம் போல் இருக்கிறது. காலம் சொல்லும் அளவுக்கு சிறந்த படைப்பு தான் மிக மிக அருமையான கருத்துக்கள் மேலும் சிறக்கட்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் இலக்கிய சேவை பாரதி இலக்கியப் பேரவை சாதனைகள் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 👏👏👏👏👏👏👏👏