ஆன்மிகத்தின் சாராம்சமான அன்பும், கருணையும் எல்லா உயிர்களிடத்தும் உள்ளது என்பதை அம்மா நமக்கு உணர்த்துகிறார். உலகெங்கிலுமுள்ள அம்மாவின் பக்தர்கள் அன்பு மற்றும் சேவையின் புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகின்றனர். அம்மாவின் உபதேங்கள் மற்றும் அம்மாவின் முன்மாதிரியான வாழ்க்கையால் அவர்கள் தூண்டப்படுகிறார்கள். ஏழைகளுக்கு உணவு வழங்குவது முதல் அறிவியல் ஆராய்ச்சி வரை பல்வேறு சேவை முயற்சிகள் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் கிளைகளான அமிர்தா பல்கலைக்கழகம் மற்றும் அமிர்தா மருத்துவமனைகள் மூலமாக நடந்துவருகின்றன. இந்த செய்திகளையெல்லாம் உடனுக்குடன் வழங்குவதற்கு அம்ரிதா வேர்ல்ட் யூடியூப் சேனல் துவங்கப்பட்டுள்ளது. அம்மாவின் சங்கல்பத்தால் நிறைவேறும் இந்தச் சேவைச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்து, கைகோர்க்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அம்மா நமக்குள் விதைக்கும் விலைமதிப்பற்ற அன்பு மற்றும் சேவையின் கருத்துக்களை உள்ளடக்கி, நாம் கூட்டாக ஒளிமயமான நாளை நோக்கி முன்னேறலாம்.