பாடலை காட்சி படுத்தி இசை காட்சிபடுத்திய விதம் மிகவும் சிறப்பு. ஈழம் இழந்து ஏங்கும் இதயம் இந்த பாடலை கேட்பதின் மூலம் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும்.
ஈழ சோகம் இதயத்தை மீண்டும் துளைத்தது. வாழவேண்டிய இனம் வாழ்விழந்த சோகக் கதையானதே இதயத்தை உருக்கும் வரிகள், வலி நிறைந்த பாடல், இசைவாணனின் இசை - குரல் - காட்சி கண்களில் கண்ணீர் துளிகள்.
மனதை நெருடும் பாடல் . செழிப்பான தேசம் எவ்வாறு எல்லாம் மாறி போயுள்ளது.இசைவாணனின் நாதக்குரல் பாடலின் தன்மையை மேலும் இனிமையாக்குகிறது.பாடலின் முடிவில் வரும் இசைக்கோர்வை அருமை.ஆஹ மொத்தத்தில் இந்தப் பாடல் ஒரு பலாச்சுளை.
An excellent meaningful song to hear satisfied my heart. The greenish photography relaxed my mind. I expect more and more songs from the music director isaivanan. Hats off sir.
காலம் கடந்த கனவுப்பார்வையில் அங்கங்கேயொரு நாடிருந்ததே! ஈரவிழிகளால் பொருள் உணர்ந்து மெல்ல உணர்வுப்பேழைக்குள் சென்று மனதை அழுத்துகிறது. தூரத்தில் தெரியும் அந்நாட்டின் இருப்பை அர்த்தப்படுத்தப்படுகிறது இசைவாணனின் இசையில் பாடலை முணுமுணுக்கச்செய்கிறது!
இலங்கை தமிழர்கள் நாடிழந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றது போல, குக்கி பழங்குடியினர் மணிப்பூரில் இருந்து மிசோரம் தஞ்சம் புகுவது போல உலகெங்கும் நிர்பந்திக்கப்படும் இடப்பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வலியை கவிதையாக்கி இருக்கிறது இந்த பாடல். இதன் இறுதியில் காட்டப்படும் பழங்கனவில் மிதக்கும் மாடு, வற்றிய குளம், வறண்டு பிளவுற்ற பூமி, காய்ந்த மரப்பட்டை கள், புற்கள், மண்டை ஓடு யாவும் இதன் சாரத்தின் கான் படிமங்கள். இது ஒரு வகையில் வன்மம் கொண்டு பிளவுறும் மானுடம் நோக்கி, பாதிக்கப்பட்டோருக்காக பாடப்பட்ட ஓர் அனுதாப அஞ்சலி. உயிர் தொடுகிறது. மனிதம் சிலிர்க்கிறது.
இந்த என் காண்பியலில் ஓளிப்பதிவு செய்து இணைக்க காட்சி துணுக்குகளில் இ ருக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்- ஓர் திரையிக்குனராகவும்-உலகசினிமாவை தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு தன் சீரிய எழுத்துக்களால் வாசிப்புக்களில் ஊறித்திளைக்கும் என்போன்ற வாசகனுக்கு ஓர் அகண்டவிசாலத்தை கண்முன் நிறுத்தும் கலைநயத்தைபெற்ற என் தோழன் குலசேகரின் இதய பார்வை என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. வாழ்த்துகள்- வாழ்கவளமுடன்-என்றேன்றும் இசைவாணன்