ஈயம் பூசுனா போலவும் இருக்கனும்.... பூசவும் கூடாது... அப்படி இருக்கு உங்க பேச்சு.... எனக்கு தனிப்பட்ட முறையில் இளையராஜா எந்த உதவியும் செய்தது இல்லை.... ஆனாலும் அவர் எனக்கு இசைக்கடவுள் காரணம் சொல்கிறேன் கேளுங்கள்.... நான் பிறந்தது 1981, 15 வயதை தொடும் போது முதன்முதலில் இரகுமானின் பாடல்களில் தான் மயங்கி கிடந்த காலம்.... எங்கள் தோழிகள் அனைவருக்கும் அப்படியே.... ஆனால் கல்லூரி படிப்பெல்லாம் முடித்து, வேலைக்கு சென்று பிறகு திருமணமும் முடிந்து எனது 28ம் அகவையில் எனக்கு முதல் மகன் பிறந்தான்.... எனது கணவர் எல்லா இசையமைப்பார் பாடல்களையும் கேட்பார் அப்படி தான் இளையராஜா இசையை நெருங்கி கேட்க ஆரம்பித்தேன்.... பிறகு தான் தெரிகிறது என்னையும் அறியாமல் அவருடைய எல்லா பாடல்களையும் நான் வரி பிழறாமல் முனுமுனுக்கின்றேன் என்று.... சிறப்பான சம்பவத்தை இப்போது சொல்கின்றேன் கேளுங்கள்..... என் மூத்த மகனின் 3.5 வயதில் எனது மடிக்கணினியில் ஆண் பாவம் படத்தின் bgm அதாவது பின்னணி இசை ஓடிக்கொண்டே இருந்தது, அதை கவனித்த அந்த பிஞ்சு குழந்தை என்னிடம் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?!?!?! ஏன் மா இந்த இசை சிரிப்பு வருது? ஏன் மா இப்போ சோகமா இருக்கு ? ஏன் மா இப்போ வேற மாதிரி இருக்கு?..... அதாவது அந்த பின்னணி இசையில் அவர் வெளிபடுத்திய காதல், நகைச்சுவை, சோகம் என்று அனைத்தும் ஒரு குழந்தை எப்படி புரிந்தது ?!?!?! உண்மையில் அன்று உணர்ந்தேன்..... இசைஞானி வெறும் ஞானி அல்ல இசைக் கடவுள்.... இசையின் வெளிப்பாடும் நோக்கமும் உணர்வுகளை கடத்துவது.... அதை குழந்தைக்கு கூட புரியும் வகையில் அமைத்த இளையராஜா எங்களுக்கு இசைக்கடவுள் தான்.... இன்று என் மகனுக்கு 15 வயது தாண்டி விட்டது.... வாழ்க இசைக்கடவுள் இளையராஜா!!!
இறைவன் எங்கும் இருப்பார் என்று நாம் அறிந்திருக்கிறோம் இசைஞானி அவர்களின் இசை இல்லாத இடம் என்று ஒன்று தமிழகத்தில் உண்டா நிற்பன ஓடுவன பரப்பன என அனைத்து நிலைகளிலும் அவரின் ஒலி இருக்கிறதா இல்லையா ???!!!
இசைஞானி இளையராஜா இசை குழுவில் ஏராளமான கலைஞர்கள் பணிபுரிவார்கள் அவர்கள் சம்பளமும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இளையராஜா சார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். பல படங்களுக்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்திருக்கிறார்.
பாடல்களில் உள்ள இசை தோர்வை இளையராஜா ஒரே வரிசையாகவும் மென்மையாகவும் இருக்கும் சில இசையமைப்பாளர்கள் இசை விட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் இறைச்சலேடும ஒரே கேர்வை இல்லாதது போலவே தோன்றும்
ஐயா, இசை ஞானி குறித்த உங்கள் கருத்தும், விளக்கமும் சரியாகவும், உண்மையாகவும் இருந்தன. அவர் "விடுதலை -1" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறனின் திறமையை பாராட்டி பேசும் முன் 1500 படத்துக்கு இசை அமைத்த அனுபவத்தில் கூறுவதாக அவரே எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளார். அந்த காணொலியை கண்டால் அறிய முடியும். மேலும், இசைக் கடவுளாக அவரை பலர் பேசுகிறார்கள். அது அவரது இசையால் அளவில்லாது மகிழ்பவர்கள், அன்பு கொள்பவர்களின் வெளிப்பாடு. ஆனால், கண்ணதாசன் எழுதிய பழைய பாடலின் சரணத்தில் "நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!" என்று வரும். அதைப் போலவே, நிழல்கள் படத்தில் இசை ஞானியே ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் பாடும் காட்சி வரும். அந்த பாடலின் இரண்டாவது சரணத்தில் "புது இராகம் படைப்பதாலே நானும் இறைவனே!" என்றதற்கு ஏற்ப பின்னாளில் கர்நாடக இசை வரலாற்றிலேயே "பஞ்சமுகி" என்ற பெயரில் புதிய இராகத்தையே படைத்தவர் என்பதால் இசை தெய்வமாக பலர் அவரை காணலாம்! எனினும், நீங்க ள் கூறியது போல திரை இசையில் எண்ணற்ற புரட்சிகளை செய்த "இசை மாமேதை" நம் "இசைஞானி" என்பதை யாராலும் உண்மையாக மறுக்கவே முடியாது!
ஒரு மேடையில் இயக்குனர் பால்கீ சூழ்நிலை சொல்ல அங்கேயே சில நொடிகளில் Tune composing பண்ணுவார். அந்த violin bit ம் tune ம் மனசை உருக்கும். அவ்வளவு திறமை உள்ளவர்
3.32 நீங்கள் சொல்வது சரியான செய்தி...பல ஊர்களில் கோடி கோடியா சம்பரித்து கொடை கொடுத்தவர்களின் பிள்ளைகள் தற்போது வாழ வழியின்றி நடு தெருவில்...காரணம் சரியான திட்டமிடல் இல்லமல்....கொடுமைதான்
என்னை பொறுத்த வரை...அவர் ஒரு இசை தொழிலில் ஒரு அம்பானி போன்றவர்... சிறப்பாக தன் தொழிலை செய்து வெற்றி கண்டவர்... கண்டிப்பாக முதலாளி என்னும் ஒரு கர்வம் இருக்கலாம்.. அப்படி இல்லாமல் இருந்து இருந்தால் இந்நேரம் பாடல்கள் சுமாராக தான் இருந்து இருக்கும்.. தான் முதலாளித்துவத்தை இசையில் செலுத்தி சாதனை புரிந்த ஒரு ஒப்பற்ற மனிதன்...அவரை நாம் எந்த விதத்திலும் விமர்சனம் செய்ய...ஒரு துளி கூட தகுதி இல்லை..அது தேவையும் இல்லை.
தெய்வத்திற்கும் மேலான நம் தாயைப் போன்ற இடத்தில் அவரை வைத்து வணங்க வேண்டும். உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டியவர். தங்களுடைய பதிவு மிக அருமை. நன்றி அய்யா...❤❤❤
Pala isai amaippalargal pottiyalargalaga iruppinum Yaarum Isaignani avargalaippatri Yethuvum sonnathillai! Nanri! Annan MSV avargale innum mele poyi I am his FAN yenrargal. Annan MSV Greatest of ALL!
எல்லாம் நாமளே முடிவு பண்ணிக்க வேண்டுமா. அவர் எதும் தன்னை பற்றி கூறாத போது நமக்கு என்ன. தனிப்பட்ட மனிதரை பற்றி நாம் ஏன் இப்படி அப்படி என்று ஊகிக்க வேண்டும். நமது எல்லை அவரது பொதுவெளிக்கு வந்த படைப்புகளை சிலாகிப்பதோடு மட்டும்தான்.
They are trying to compare him to average thinking human and trying to find fault, he creates music in his mind and thinks always about that, perfectionist, will get angry if that perfection is compromised, maynot be able to communicate just like u and me.. dont insult him, he is a celebrity material and should be praised for his work
அருமை நன்றி 👍🙏. 1976ல் அன்னக்கிளியே என்ற பாடல் ஆரம்பிக்கும் போதே மின்சாரம் மின் தடை ஏற்பட்டதாம், மின்சாரம் வந்த பிறகு பதிவு செய்தார்களாம் ஆனால் அந்த பாடல் பதிவே ஆகவில்லையாம் , ம் நல்ல சகுனம் தான் என்று சிரித்து விட்டு ஆரம்பமே சரியில்லையே என்று ஒருவர் சொன்னாராம் , அதன் பிறகு மீண்டும் முயற்சி செய்து வந்த படம் தான் அன்னக்களி பாடல் , ஆனால் ராஜா சார் அன்று மனம் நொந்து மீண்டும் முயற்சி செய்யாமல் போய் இருந்தால் தயாரிப்பாளரும் வேற இசை அமைப்பாளரை வைத்து படம் தயாரித்து இருப்பார் . முயற்சி திருவினையாக்கும் , உழைப்பே உயர்வு , 🎼🎶🎵🎹🎤 செய்யும் தொழிலே தெய்வம், என்று இருந்திருக்கிறார் அதனால் தான் அன்று முதல் இன்று வரை அந்த சரஸ்வதியும் இளையராஜா அவர்களுக்கு இசையை 🎼🎹 அள்ளித்தந்துக்கொண்டிருக்கிறது , அந்த லட்சுமியும் 💰💵 அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமானதை அள்ளித்தந்துக்கொண்டிருக்கிறது . அவரின் இசை பாடலை இன்றும் மக்கள் கேட்கிறார்கள் பாடலுக்கு இன்றும் மதிப்பு value இருப்பதால் தான் சில தயாரிப்பாளர்கள் ராயல்ட்டி கேட்கிறார்கள் படமும் எடுத்து நல்ல வசூல் பார்த்துவிட்டு இதிலும் காசு பார்க்கலாம் என்று அலைகிறார்கள் குறை சொல்லிக்கொண்டு. அதுவே அவரின் பாடலுக்கு இன்று value இல்லை என்றால் அதைப்பற்றி பேசவே மாட்டானுங்க, அவர் 1000 படங்களுக்கு மேல் 4000 பாடலுக்கு மேல் இசை அமைத்ததை நினைத்து அவர்கள் என்ன வயிரு எரிந்தாலும் 🔥, இசைச்சக்கரவர்த்தி 🎼🎶🎵🎹🎻🎻🎻🎸🎤இளையராஜா அவர்கள் இந்த 80 வயதிலும் அவர் தன் இசை வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார் அந்த இசை உழைப்பாளி .
ஈயம் பூசுனா போலவும் இருக்கனும்.... பூசவும் கூடாது... அப்படி இருக்கு உங்க பேச்சு.... எனக்கு தனிப்பட்ட முறையில் இளையராஜா எந்த உதவியும் செய்தது இல்லை.... ஆனாலும் அவர் எனக்கு இசைக்கடவுள் காரணம் சொல்கிறேன் கேளுங்கள்.... நான் பிறந்தது 1981, 15 வயதை தொடும் போது முதன்முதலில் இரகுமானின் பாடல்களில் தான் மயங்கி கிடந்த காலம்.... எங்கள் தோழிகள் அனைவருக்கும் அப்படியே.... ஆனால் கல்லூரி படிப்பெல்லாம் முடித்து, வேலைக்கு சென்று பிறகு திருமணமும் முடிந்து எனது 28ம் அகவையில் எனக்கு முதல் மகன் பிறந்தான்.... எனது கணவர் எல்லா இசையமைப்பார் பாடல்களையும் கேட்பார் அப்படி தான் இளையராஜா இசையை நெருங்கி கேட்க ஆரம்பித்தேன்.... பிறகு தான் தெரிகிறது என்னையும் அறியாமல் அவருடைய எல்லா பாடல்களையும் நான் வரி பிழறாமல் முனுமுனுக்கின்றேன் என்று.... சிறப்பான சம்பவத்தை இப்போது சொல்கின்றேன் கேளுங்கள்..... என் மூத்த மகனின் 3.5 வயதில் எனது மடிக்கணினியில் ஆண் பாவம் படத்தின் bgm அதாவது பின்னணி இசை ஓடிக்கொண்டே இருந்தது, அதை கவனித்த அந்த பிஞ்சு குழந்தை என்னிடம் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?!?!?! ஏன் மா இந்த இசை சிரிப்பு வருது? ஏன் மா இப்போ சோகமா இருக்கு ? ஏன் மா இப்போ வேற மாதிரி இருக்கு?..... அதாவது அந்த பின்னணி இசையில் அவர் வெளிபடுத்திய காதல், நகைச்சுவை, சோகம் என்று அனைத்தும் ஒரு குழந்தை எப்படி புரிந்தது ?!?!?! உண்மையில் அன்று உணர்ந்தேன்..... இசைஞானி வெறும் ஞானி அல்ல இசைக் கடவுள்.... இசையின் வெளிப்பாடும் நோக்கமும் உணர்வுகளை கடத்துவது.... அதை குழந்தைக்கு கூட புரியும் வகையில் அமைத்த இளையராஜா எங்களுக்கு இசைக்கடவுள் தான்.... இன்று என் மகனுக்கு 15 வயது தாண்டி விட்டது.... வாழ்க இசைக்கடவுள் இளையராஜா!!!
தெய்வீக சக்தி நிறம்பப் பெற்ற இசை மேதை இளையராஜா 10நிமிடத்தில் சிறந்த பாடல்களை தந்தவர் 1992 தீபாவளி படங்கள் 1. பாண்டியன் 2தேவர் மகன் 3 திருமதி பழனிச்சாமி 4.செந்தமிழ் பாட்டு 5.ராசுக்குட்டி எல்லா பட பாடல்களும் super duper hit , யாராலும் இதை முறியடிப்பது மிகவும் கடினம்
இவரை வரலாறு மறக்கும்.பொருள் ஆசை அற்றவனே .........,அவ்வளவு பசி பட்டினியில் அவர் இல்லை. திருமூலரும்,மாணிக்கவாசகரும்,வள்ளலாரும் இன்னும் பலப்பலரும் பாடிவிட்டு சென்ற மண்.நான் ஒரு வெறித்தனனமான இளையாராஜா ரசிகன் கடந்த 20 வருடங்களாய்.இவரை ஒரு நல்ல இசையமைப்பாளர் என சொன்னால் மட்டும் போதும்.
எங்களுக்கு இசைஞானி இசை தெய்வம் தான் ஐயா எம் எஸ் வி அய்யாவே இவ்வளவு படத்திற்கு இசை அமைக்கவில்லை ஐயா இனிமேலும் இவ்வளவு படத்திற்கு யாரும் இசையமைக்க முடியாது ஐயா ஆகையால் எங்களுக்கு அவர் என்றும் இசை தெய்வம் தான் ஐயா 🌹
நமது தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு அடுத்ததாக அண்ணன் இசைஞானி அதிகம் பேசப்படுகிறார் இனிமேலும் தமிழ் மண்ணிறுக்கும் வரை தந்தை பெரியாரின் பெயரும் அண்ணன் இசைஞானியின் பெயரும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அனைத்து திசையிலும்
தமிழ் இசைவாணர்களாக விளங்கிய முத்துத்தாண்டவர் , அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை மற்றும் கரநாடக இசை மும்மூர்த்திகள் தியாகராய சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரிகள் இந்த மேதைகள் எல்லாம் இசைக்காகவே வாழ்ந்து இசை மூலம் இறைவனை அறிய முற்பட்டவர்கள். ஆக இசை என்பது சர்வ மயமானது. இவர்கள் பணி இசை வளர்ப்பதே . இவர்களது பாடல்களையும் இராகங்களையும் திருடி பயன்படுத்திக் கொண்டவர்களை எல்லாம் ஞானி சானி என்று சொல்லி கொள்வது அசிங்கமாக உள்ளது. தமிழர்களுக்கு தொன்மை இசை குறித்து அவ்வப்போது தெரியப்படுத்துங்கள் நல்லது.
இளையராஜா இசையில் தலை சிறந்தவர். இசை ஜாம்பவான். இசை வித்தகன். இசைஞானி. ஆனால் இசை கடவுள் கிடையாது. ஒரு மனிதனை கடவுளாக பார்ப்பது தான் மிகப்பெரிய மூடநம்பிக்கை. மனிதனை மனிதனாக பாருங்கள்.
இசைக்கு தெய்வம் என்று யாரையும் சொல்ல முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு இசையில் ஒருவன் தோன்றுவான். ஆனால் அதில் இளையராஜாவை சேர்க்க முடியாது. காரணம்? ஆணவம், திமிர், பிறரை மதிக்காத தெரியாத மிருக மனம் படைத்தவர் தான் இந்த ராஜா. சொந்த சாதியில் படிக்க வசதியில்லாத எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள் யாருக்கும் உதவி செய்வதில்லை. பார்ப்பனர்களுக்கு அடிமையாய் வாழ்பவர்களுக்கு இசை ஜானி பட்டம் தேவையில்லை. பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அடக்கி பாமரனும் இசை அமைப்பாளராக வர வேண்டும் என்பதற்காக போராடிய பெரியாரின் படத்திற்கு இசை அமைக்க மருத்தவன் தான் இந்த கெட கேட்ட ராசா. N
அவர் ஒரு மாபெரும் இசை மேதை.. பாடல்கள் மட்டும் அல்ல. படத்தின் பின்னணி இசை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிற இசை அமைப்பாளர்களே சொல்லி இருக்கிறார்கள். அவரைப்போல் பின்னணி இசை யாராலும் அமைக்க முடியாது என்று...
இசைராஜா .... மிகப் பெரிய இசை மேதையை ஏதோ போகிற போக்கில... சிலர் பேசி வருவதை நினைச்சா .... பிதாவே இவர்களை மன்னித்து விடு... பேசுவது தவறு என்பதை காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.... என்று தான் நினைக்கத் தோணுது..... எது சரி... எது தப்பு... எப்படி நடந்து கொள்ள வேண்டும்... என்பதை ராஜா சாருக்கு நேற்று பிறந்தவர்கள் கற்றுத்தர நினைப்பது வேடிக்கையாக இருக்கு.... ஆம். வீசும் காற்றில் கோபுரத்தில் மேல் பறக்கும் குப்பைகள். கோபுரம் ஆகிவிடுமா ....? இடம்... பொருள்... ஏவல் அறிந்து வீடியோ போட்டு பேச வேண்டும்.... (ஒரு சிலர்). இசைராஜா... தமிழகத்தின் இசை அடையாளம் ...
உங்களை யார் கேட்டது?.... இசையை பற்றி ஏதாவது பிழைப்புக்காக பேச வேண்டியது?.. அப்புறம் என்ன கண்ட கண்ட நாய்கள் எல்லாம் அவரை தர குறைவாக பேசுவானுங்க. இதில் நீங்கள் குளிர்காயவேண்டியது.?... ஏன் உங்களுக்கு இந்த வேலை..? ராஜா சார் சிவனே என்று அவர் வேளையில் கவனமாக இருக்கிறார்... தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம் தயவுசெய்து! ..இன்றும் அவரை உலக தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.. எங்களுக்கு என்றும் இசைராஜா! இசைபிரம்மா! 🙏